Just In
- 2 hrs ago அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- 2 hrs ago இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- 3 hrs ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- 3 hrs ago ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
Don't Miss!
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- Movies Actor Karthi: ஜூன் மாதத்தில் துவங்கும் சர்தார் 2 படத்தின் சூட்டிங்.. கதை என்ன தெரியுமா?
- News வேகும் வெயிலிலும்.. "வெறுப்புக்கு" ஓட்டு போடாதீர்கள் பதாகையுடன்.. தெரு தெருவாக சுற்றும் முதியவர்
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Lifestyle கால்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக நோய் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்...
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
செம சூப்பர்... பீகாரில் ஓடப்போகும் புத்தம் புதிய பஸ்களின் ஸ்பெஷாலிட்டி என்னனு தெரியுமா?
பீகார் தலைநகர் பாட்னாவில் புதிய சிஎன்ஜி பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
காற்று மாசுபாடு பிரச்னையை குறைக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, பீகார் மாநில தலைநகர் பாட்னாவில், 50 புதிய சிஎன்ஜி பேருந்துகளை, அம்மாநில போக்குவரத்து துறை இயக்கவுள்ளது. இந்த புதிய சிஎன்ஜி பேருந்துகள் வரும் ஜனவரி மாதம் பயன்பாட்டிற்கு வரவுள்ளன. அத்துடன் 12 புதிய பம்ப்களும் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படவுள்ளன.
ஆனால் இந்த புதிய சிஎன்ஜி பேருந்துகள் எந்த வழித்தடத்தில் இயக்கப்படும்? என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. தற்போதைய நிலையில் பாட்னாவில் 20 சிஎன்ஜி பேருந்துகளை பீகார் மாநில சாலை போக்குவரத்து கழகம் இயக்கி கொண்டுள்ளது. இவை அனைத்தும் டீசலில் இருந்து சிஎன்ஜி-க்கு மாற்றப்பட்டவை ஆகும்.
பெய்லி சாலை, டானாபூர் உள்ளிட்ட வழித்தடங்களில் அவை இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றுடன் மேலும் 50 புதிய சிஎன்ஜி பேருந்துகள் வரும் ஜனவரி மாதம் இணையவுள்ளன. இதுகுறித்து பீகார் மாநில போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகையில், ''இந்த புதிய சிஎன்ஜி பேருந்துகள் திறன்மிக்கவையாகவும், சிக்கனமானவையாகவும் இருக்கும்.
அத்துடன் பாட்னா நகரில் காற்று மாசுபாடு பிரச்னையை கட்டுப்படுத்த இவை உதவி செய்யும். டெல்லியில் இருப்பதை போன்று தாழ்தள சிஎன்ஜி பேருந்துகள் பாட்னாவில் அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன'' என்றனர். இதுதவிர டீசலில் இயங்க கூடிய ஆட்டோக்களை சிஎன்ஜி-க்கு மாற்றுவது குறித்தும் போக்குவரத்து துறை ஆலோசனை செய்து வருகிறது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், டீசல் மூலம் இயங்கும் ஆட்டோக்களை சிஎன்ஜி-க்கு மாற்றுவது அல்லது அவற்றுக்கு பதிலாக புதியவற்றை கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது'' என்றனர். பாட்னா நகரில் தற்போதைய நிலையில் சுமார் 5,000 ஆட்டோக்கள் சிஎன்ஜி மூலம் இயங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் சிஎன்ஜி ஸ்டேஷன்களுக்கு பற்றாக்குறை நிலவி வருகிறது. எனவே சிஎன்ஜி எளிதாக கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், பாட்னா நகரில் 12 புதிய ஸ்டேஷன்கள் அமைக்கப்படவுள்ளன. இதுகுறித்து அதிகாரிகள் மேலும் கூறுகையில், ''காற்று அதிகம் மாசடைந்த நகரங்களில் ஒன்றாக பாட்னா உள்ளது. வாகன உமிழ்வுதான் இதற்கு மிக முக்கியமான காரணம்.
எனவே பாட்னா நகரில் காற்று மாசுபாடு பிரச்னையை குறைப்பதற்காக, சுற்றுச்சூழலுக்கு நட்பான வாகனங்களை இயக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன'' என்றனர். பாட்னா மட்டுமல்லாது இந்தியா முழுவதிலுமே தற்போது பெட்ரோல், டீசல் வாகனங்களின் பயன்பாட்டை குறைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அதற்கு பதிலாக எலெக்ட்ரிக், சிஎன்ஜி போன்ற வாகனங்களின் பயன்பாடு ஊக்குவிக்கப்படுகிறது. குறிப்பாக எலெக்ட்ரிக் வாகனங்களை வாகனங்களை வாங்குபவர்களுக்கு மத்திய அரசும், டெல்லி போன்ற மாநில அரசுகளும் மானியங்களை வழங்கி வருகின்றன. எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதன் மூலம் கச்சா எண்ணெய் இறக்குமதியையும் குறைக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
Note: Images used are for representational purpose only.
-
உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!
-
20கிலோ அரிசி மூட்டையை 4ஏத்திகிட்டு நீங்களும் அமர்ந்து போகலாம்! டெலிவரி சேவைக்கான சூப்பரான இ-சைக்கிள் அறிமுகம்!
-
பிரம்மாண்டத்துக்கு மறுபெயர் இதுதான்!! ஏர் இந்தியாவில் இனி இப்படியொரு பிளைட்டில் போக முடியாது!