விலையை பத்தி எல்லாம் கவலையே இல்லைங்க... ஜூன் மாசம் இந்தியாவில் பெட்ரோலுக்கு செம டிமாண்ட்...
இந்தியாவில் கடந்த ஜூன் மாதம் பெட்ரோல் விற்பனை 18 சதவீதம் அதிகமாகியுள்ளது. இந்தியாவின் பெட்ரோல் தேவை குறித்த விபரங்களை காணலாம் வாருங்கள்...

இந்தியாவில் பெட்ரோல், டீசல் பயன்பாடு அதிகமாகி கொண்டே தான் இருக்கிறது. வாகனங்களின் விற்பனை அதிகமாகி கொண்டேயிருக்கும் போது பெட்ரோல் டீசல் பயன்படு அதிகமாகி கொண்டே தான் இருக்கும். இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் இந்தியாவில் மொத்தம் 18 சதவீத விற்பனை அதிகமாகியுள்ளது.

பெட்ரோலை பொறுத்தவரை அது கச்சா எண்ணெய்யிலிருந்து பிரித்தெடுக்கப்படும் பொருள். இந்தியாவில் கச்சா எண்ணெய்யின் தேவைக்கு ஏற்ப உற்பத்தியில்லை அதனால் வெளிநாடுகளிலிருந்து தான் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது. இங்கு இறக்குமதி செய்யப்படும். கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு செய்யப்பட்டு அதிலிருந்து ஏராளமான தயாரிப்புகள் பிரித்தெடுக்கப்படும்.

கச்சா எண்ணெயிலிருந்து நாப்தெலின், எல்பிஜி வாயு, பெட்ரோலியம் கோக், ஏவியேஷன் ஃப்யூயல், டீசல், பெட்ரோல், லூப்ரிகேன்ட்ஸ், கிரீஸ், பிட்டுமின் ஆகிய பொருட்கள் கிடைக்கிறது. இதில் பெரும்பான்மையாக கிடைப்பது டீசல் தான். இந்நிலையில் மத்திய பெட்ரோலிய அமைச்சகத்தின் பெட்ரோலிய திட்டம் மற்றும் ஆய்வு அமைப்பு கட்த ஜூன் மாத விற்பனை நிலரவத்தைவெளியட்டுள்ளனர்.

இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் மொத்தம் 18.67 மில்லியன் டன் பெட்ரோல்/டீசல் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்த 2021 ஜூன் மாத விற்பனையை ஒப்பிடும் போது 15.84 மில்லியன் டன் பெட்ரோல் டீசல் மட்டுமே விற்பனையாகியிருந்தது. அதாவது இது 17.9 சதவீத விற்பனை அதிகரித்துள்ளது. மோட்டார் வாகன விற்பனையை பொருத்தவரை பெட்ரோல் மொத்தம் 23.2 சதவீதமும் , டீசல் 23.9 சதவீதமும் அதிகரித்துள்ளது.

விமானங்களுக்கான பெட்ரோலை பொருத்தவரை 129.9 சதவீதம் அதிகமாகியுள்ளது.இவ்வளவு பெரிய வளர்ச்சிக்கு முக்கியமான காரணம் கடந்தாண்டு இரண்டாவது கொரோனா அலை காரணமாக பல விமானங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. அதனால் விமானங்களுக்கான பெட்ரால் தேவை குறைவாகவே இருந்தது. இந்தாண்டு எல்லா விமானங்களும் இயக்கப்படுவதால் விமானங்களின் பெட்ரோல் தேவை அதிகமாகியுள்ளது.

மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் பெட்ரோல் தேவை அடுத்த 5 ஆண்டுகளில் பெரிய அளவில் குறையும் என கூறியுள்ளார். ஹைட்ரஜன் வாகனம், எத்தனால் மற்றும் பேட்டரிகளின் பயன்பாடு அதிகமாகும் போது இதன் பயன்பாடு குறையும் என கூறியுள்ளார்.

தற்போது இலங்கையில் பெட்ரோல் தடுப்பாடு மிக பயங்கரமாக இருக்கிறது. தற்போது அங்கு பெட்ரோல் விற்பனை என்பது ரேசன் முறையில் விநியோகம் செய்யப்படுகிறது. இப்படியாக ஒவ்வொரு நபருக்கும் ஒவ்வொரு வாரத்திற்கு இவ்வளவு பெட்ரோல் தான் டோக்கன் வழங்கப்பட்டு அதன்படி விநியோகம் செய்யப்படுகிறது. இலங்கை ராணுவம், போலீசார் சார்பில் இந்த விநியோகம் நடத்தப்படுகிறது. இலங்கைக்கு பெட்ரோலை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் முக்கியமான இடத்தில் இந்தியா இருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








