Just In
- 1 hr ago உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- 3 hrs ago சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- 6 hrs ago எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- 8 hrs ago சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
Don't Miss!
- Movies மாமியார் உதட்டில் முத்தம்.. ரோபோ சங்கர் மருமகன் விளக்கம்.. என்ன சொல்லிருக்காரு பாருங்க?
- News ஒரு ஓட்டுக்காக போராடிய "சர்க்கார்" விஜய் நிலையா இது.. கட்சி தலைவரான முதல் தேர்தலிலேயே ஏமாற்றம்
- Lifestyle எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை தீயில் சுட்ட தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பால், நாளேடுகள் போல இனி வீட்டு வாசலுக்கே வந்து டெலிவிரி செய்யப்படும் பெட்ரோல்..!
ரூபாய் நோட்டுகளின் மீது கட்டுபாட்டை விதித்ததை அடுத்து, மத்தியரசு பல்வேறு முயற்சிகளை நுகர்வோர் நலனுக்காக மேற்கொண்டு வருகிறது. அது ஏன் என்பதை இங்கே பார்க்கலாம்.
பால், தினசரி நாளிதழ்கள் போல பெட்ரோலும் இனி நமது வீட்டு வாசலுக்கே நேரடியாக தரப்படவுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை எண்ணைத் துறைக்கான மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்டுள்ளார்.
நுகர்வோரின் வசதிக்காக பல்வேறு செயல்பாடுகளை உலக நாடுகள் எடுத்து வருகிறது. அந்த வகையில் தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் எரிவாயுவிற்கான தேவை அதிகரித்துள்ளதை அடுத்து, அதற்கான நெருக்கடியை போக்க மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அனைத்து எரிவாயு நிலையங்களிலும், பெட்ரோல் மற்றும் டீசலிற்காக பல மணிநேரம் மக்கள் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதனால் பெரும்பாலான பங்குகளில் எப்போதும் மக்களின் கூட்டம் நிரம்பி வழிகிறது.
இதை களைய பெட்ரோலிய அமைச்சகம் புதிய வசதிகளை பயனிகளுக்காக உருவாக்கியுள்ளது. இதன்மூலம், எரிவாயுவின் தேவையை ஆன்லைனில் குறிப்பிட்டு அதற்கான கட்டணத்தை செலுத்திவிட்டால். நீங்கள் குறிப்பிட்ட ஒரு மணிநேரத்தில் பெட்ரோலுடன் டெலிவிரி செய்பவர் உங்கள் கதவை தட்டுவார்.
தினசரியாக நமது வீட்டிற்கு நேரடியாகவே வந்து வழங்கப்படும் பால், நாளிதழ் போன்று இந்த சேவை இருக்கும். இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டால், பெட்ரோல் பங்குகளில் தேவை இல்லாத அலைச்சல் மிச்சமாவதோடு, வேலைவாய்ப்பும் உயரும்.
பெட்ரோலை அதிகளவில் பிடிக்கும் எஸ்.யூ.வி போன்ற வாகனங்கள் இந்த சேவைக்காக பயன்படுத்தப்படவுள்ளது. அதனுடைய சக்கரத்தில் மினி பெட்ரோல் பம்புகள் இணைக்கப்பட்டு, அதன்மூலம் வீட்டிலிருந்து ஆன்லைன் புக்கிங் செய்பவர்களுக்கு பெட்ரோல் வழங்கப்படும்.
பொதுவாக எஸ்.யூ.விக்கள் அனைத்தும் 80 முதல் 90 லிட்டர் பெட்ரோலை இடம்பெறும் அளவிலான டேங்குகளை பெற்றவை. அதிலிருந்து 4 முதல் 5 லிட்டர் பெட்ரோல் வரை சக்கரத்திலிருக்கும் மினி பம்புகளை வைத்து, நுகர்வோருக்கு பெட்ரோல் அல்லது டீசல் வழங்கப்படும் என அமைச்சர் தர்மேதிர பிரதான் கூறியுள்ளார்.
சக்கரங்களில் பெட்ரோல் பம்புகள் அமைக்கப்படுவது குறித்த பாதுகாப்பை விளக்கிக்கூறிய தர்மேந்திர பிரதான், பெட்ரோல் மற்றும் வெடிப்பொருட்களின் பாதுகாப்பை உறுதி செய்து தரும் அமைப்புகளை வைத்து எஸ்.யூ.வின் சக்கரத்தில் இருக்கும் பெட்ரோல் பம்புகளின் பாதுகாப்பு திறனை மதிப்படு செய்யப்படும் என அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
மேலும் தற்போது சாலைகளில் ஓடக்கூடிய எஸ்.யூ.வி கார்கள் அனைத்தும் சோதனை செய்த பிறகே பயன்பாட்டிற்கு வருகின்றன. அதேபோல மினி பெட்ரோல் பம்புகளுக்கான சோதனையும் இருக்கும் என்று கூறினார் தர்மேந்திர பிரதான்.
இதுகுறித்த அறிவிப்பை காஷ்மீரின் ஸ்ரீநகரின் அலோசனைக் குழு கூட்டத்தில் பேசிய முடித்த பின் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பா.ஜ.க அரசு மத்தியில் பொறுப்பேற்ற இந்த மூன்று ஆண்டுகளில் பெட்ரோலியத் துறையால் நுகர்வோர் நலன் சார்ந்து வெளியிடப்பட்ட முதல் அறிவிப்பு இதுவே ஆகும்.
பெட்ரோல், டீசல் போன்ற எரிவாயுகளுக்கான தேவை மட்டுமில்லாமல், எல்.பி.ஜி / சி.என்.ஜி போன்ற கேஸ்களையும் கணக்கிட்டே இந்த சேவையை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான டிஜிட்டல் புக்கிங் சேவையை அரசு உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய திட்டத்தின் மூலம், நுகர்வோர் பயனடைவதுடன், முன்பேர் குறிப்பிட்டது போல பல தொழில்சார்ந்த வளர்ச்சியும் இருக்கும். குறிப்பாக கிராம்பபுற பகுதிகளில் டிராக்கடர்களுக்கு பெட்ரோல் வேண்டுமென்றால் விவசாயிகள் நெடுஞ்சாலைக்கு வந்து தான் பங்குகள் மூலம் பெட்ரோல் பெற முடியும்.
தற்போது வீட்டிற்கே வந்து பெட்ரோல் வழங்கக்கூடிய சேவை அறிமுகப்படுத்தப்பட்டால், இந்த சிரமங்கள் களையபட்டு, அவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளும் தீரும். மேலும் இந்த சேவையால் அனுமதியின்றி பெட்ரோல் டீலிங் செய்யும் நடைமுறையும் நிவர்த்தி அடையும்.
தேசியளவில் உள்ள அனைத்து பெட்ரோல் பங்குகளிலும், கார்டுகள் மூலம் ஒரு நாளுக்கு ரூ.150 கோடியாக இருந்த காசில்லா பரிவத்தனை, பழைய ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளை தடை செய்த பின் ரூ.400 கோடியாக உயர்ந்து விட்டது. இதை அடிப்படையாக வைத்து அனைத்து துறைகளிலும் மத்திய அரசு காசில்லா பரிவத்தனையை மேற்கொள்ள முயற்சித்து வருகிறது.
இந்தியாவிலுள்ள பெட்ரோல் பங்குகளில் 86 சதவீதம் டிஜிட்டல் பரிவத்தனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதை 100 சதவீதமாக மாற்ற 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விழிப்புணர்வு பிரச்சாரங்களை நாடு முழுவதும் அரசு முன்னெடுக்க வேண்டும் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
-
மஹிந்திராவோட இந்த புதிய காரை எல்லாரும் லட்டு மாதிரி அள்ளிட்டு போக போறாங்க.. புதிய டீசர் என்ன சொல்லுது?..
-
நாசாவே அசந்து போகும் முக்கிய கருவியை உருவாக்கிய இஸ்ரோ! இனி உலகமே நம்ம கிட்ட தான் இந்த ஐடியாவை கேட்கும்!
-
ஹோண்டா தயாரித்த மின்சார காரா இது! பெரிய பெரிய சூப்பர் கார் பிராண்டுகளே இதோட ஸ்டைலுக்கு முன்னாடி மண்டியிடனும்!