Just In
- 15 min ago இந்த காரை எத்தன பேரு தங்களுக்கு பிடிச்சவங்களுக்கு பரிசா கொடுக்க போறாங்களோ! அஸ்டன் மார்ட்டின் வேன்டேஜ் அறிமுகம்
- 1 hr ago வெள்ளை நிற ஹெட்லைட் போட்ட வண்டிகளுக்கு எல்லாம் அபராதம் போட போறாங்க! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
- 4 hrs ago ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- 5 hrs ago ஓலா, ஏத்தர் எல்லாம் ஓரமா போ! ஆம்பியர் நிறுவனத்தின் புதிய இவி 30ம் தேதி வருது!
Don't Miss!
- Finance இனி ரீசார்ஜ் செலவு மிச்சம்தான் போங்க.. வாட்ஸ்அப்-இன் புதிய அப்டேட்.. செம!
- Lifestyle 300 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட முகலாயர்கள் அவங்க ஆட்சியில் இந்தியாவின் எந்தெந்த விஷயங்களை மாற்றினார்கள் தெரியுமா?
- News பாதி உங்களுக்கு..மீதி எங்களுக்கு? அணைந்த அடுப்பை பற்ற வைத்த காங். தலை? டபுள் சிக்ஸ் அடித்த பாஜக!
- Technology ரூ.56,999 க்கு அறிமுகமான OnePlus போனை ரூ.19,149 க்கு விற்கும் Amazon.. ஆல் ஏரியாவிலும் ஆர்டர் பறக்குது!
- Movies ரஜினிகாந்த்தின் கூலி.. லோகேஷ் கனகராஜுக்கு இவ்வளவு சம்பளமா?.. அய்யோ எங்கேயோ போய்ட்டாரே
- Sports "இந்தியாவின் ஒரே பாட்ஷா" சச்சினின் 51வது பிறந்தநாள்.. கொண்டாடும் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா!
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
விண்ணை முட்டியது பெட்ரோல் விலை; இனி பெட்ரோல் போடவும் லோன் தான் வாங்கனும் போல
கர்நாடகா தேர்தலுக்கு பின்பு பெட்ரோல் டீசல் விலை எக்குதப்பாக ஏறி வருகிறது. தற்போது உச்சத்தை எட்டியுள்ள பெட்ரோல் விலையால் பலர் மக்கள் பலர் அவதிப்பட்டு வருகின்றனர்.
கர்நாடகா தேர்தலுக்கு பின்பு பெட்ரோல் டீசல் விலை எக்குதப்பாக ஏறி வருகிறது. தற்போது உச்சத்தை எட்டியுள்ள பெட்ரோல் விலையால் பலர் மக்கள் பலர் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்தியாவில் பெட்ரோல், டீசலில் ஓடும் வாகனங்களின் எண்ணிக்கைதான் அதிகம்.மேலும் அதிகரித்து வரும் மக்கள் தொகை காரணமாக இந்தியாவில் வாகனங்களின் விற்பனை ஆண்டிற்கு ஆண்டுபல மடங்கு அதிகரித்து வருகிறது.
ஜிஎஸ்டிக்கு பிறகும் வாகன விற்பனை குறையாமல் தான் இருந்து வருகிறது. மக்களிடம் வாகனத்திற்கான தேவை இருப்பது தான் அதற்கு முக்கிய காரணம். வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க பெட்ரோல் டீசலின் தேவையும் அதிகரிக்கிறது. தற்போது வெளிநாட்டில் இருந்து தான் அதிகளவில் பெட்ரோலின் மூலப்பொருளான கச்சா எண்ணெனை இறக்குமதி செய்யப்படுகிறது.
முன்பு பெட்ரோல் மற்றும் டீசலுக்கான விற்பனை விலையை அரசு நிர்ணயித்த நிலையில் தற்போது அந்த உரிமை எண்ணெனை நிறுவனங்களிடமே ஒப்படைக்கப்பட்டு விட்டன. தற்போது எண்ணெனை நிறுவனங்கள் தினந்தோறும் விலையை ஏற்றி இறக்கி வருகின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் நடந்த கர்நாடாக சட்டமன்ற தேர்தலை ஒட்டி சுமார் 19 நாட்கள் பெட்ரோல் விலையில் ஏற்றமும் இறக்கமும் செய்யப்படவில்லை ஒரே விலையே நிலையாக இருந்தது. இந்நிலையில் கர்நாடாக தேர்தல் முடிந்தவுடன் பெட்ரோல் டீசல் விலைகள் கடகடவென ஏற துவங்கியது. தற்போது விலை இதுவரை எட்டாத உச்சத்தை எட்டியுள்ளது.
தேசிய தலைநகரான டில்லியில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 76.57 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை லிட்டருக்கு ரூ 67.82 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 2013 செப்டம்பர் மாதம் 14ம் தேதி தான் உச்சபட்ச விலையான ரூ76.06 என்ற விலையில் விற்பனையானது தற்போது அதையும் தாண்டி ரூ 76.57 என்ற விலையில்விற்பனை செய்யப்படுகிறது.
டில்லி நிலவரம் இப்படி என்றால் வர்த்தக தலைநகராக விளங்கும் மும்பையில் நிலைமை இதைவிட மோசம். மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அதிக வரிவிதிப்பு காரணமாக இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 84.40 என விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை லிட்டருக்கு ரூ 72.21 என் விற்பனையாகிறது.
இந்தியாவில் போபால், ஐதராபாத், பாட்னா, ஸ்ரீநகர் உள்ளிட்ட நகரங்களில் பெட்ரோல் விலை ரூ 80ஐ தாண்டிவிட்டது. அடுத்த பெரிய நகரமான பெங்களூருவிலும் பெட்ரோல் விலை எக்குதப்பாக தான் உள்ளது.
பெங்களூருவை பொருத்தவரை பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 77.81 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 8 நாட்களில் மட்டும் பெட்ரோல் விலை லிட்டருக்க ரூ1.99 மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ரூ 1.93 என உயர்த்தப்பட்டுள்ளுது. ஐதராபாத்தில் டீசல் விலை உட்சபட்சமாக லிட்டருக்கு ரூ 73.72 என்ற விலையில் விற்பனையாகிறது.
சென்னையை பொருத்தவரை இன்று பெட்ரோல் லிட்டருக்கு ரூ 79.47 என்ற விலையிலும், டீசல் லிட்டருக்கு ரூ 71.59 என்ற விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது. விரைவில் பெட்ரோல் விலை ரூ 80ஐ தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியன் ஆயில் கார்பரேஷன், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் ஒரே நேரத்தில் பெட்ரோல் விலையை ஏத்தி வருகின்றனர். இந்த 3 நிறுவனங்களின் பெட்ரோல் விலையும் கர்நாடக தேர்தலுக்கு 19 நாட்களுக்கு முன்னில் இருந்து எந்த மாற்றமும் இல்லாமல் இருந்து குறிப்பிடத்தக்கது.
இந்த விலையேற்றத்திற்கு சர்வதேச அளவில் விலை உயர்ந்த கச்சா எண்ணெனை விலை ஏற்றமும், அந்நிய செலாவணியின் விகிதம் குறைவும் தான் காரணம் என சொல்லப்படுகிறது. ஆனால் பெட்ரோல் விலை டிரண்ட்டை பார்க்கும் போது சமீபத்தில் தான் இந்த விலையேற்றம் நடந்துள்ளது.
பெட்ரோல் விலை ஏற்றத்தால் மக்கள் பலர் மாற்று வழியில் சிந்திக்க துவங்கி விட்டனர். பலர் எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துவது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருகின்றனர். பலர் பெட்ரோல் விலை கட்டுப்படியாமல் பொது வாகனங்களில் பயணிக்க துவங்கிவிட்டனர். இன்டெர்நெட்டில் பல நெட்டசன்சகள் வாகனத்திற்கு மட்டுமல்ல இனி பெட்ரோல் போடவும் லோன் தான் வாங்க வேண்டும் என கிண்டலடித்து வருகின்றனர்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்