இந்தியாவில் இவ்வளவு பெட்ரோல் விற்பனையாகிறதா? அடேங்கப்பா... ஆச்சரியப்பட வைக்கும் ரிப்போர்ட்
இந்தியாவில் கடந்த மே மாதம் முதல் 15 நாளில் எவ்வளவு பெட்ரோல், டீசல் விற்பனையாகியுள்ளது. இது கடந்த மாதம் மற்றும் கடந்தாண்டை விட எவ்வளவு மாற்றத்தைப் பெற்றுள்ளது. முழு விபரங்களைக் கீழே விரிவாகக் காணலாம் வாருங்கள்

இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை உச்சத்தில் இருக்கிறது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ111-ஐயும் தாண்டி விற்பனையாகி வருகிறது. இன்று இந்தியாவின் போக்குவரத்திற்கு இந்த பெட்ரோலும் டீசலும் மிக முக்கியமான அங்கம் வகிக்கிறது.

பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் வந்தால் அது நடுத்தர வர்க்கம் முதல் அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கும். இது மறைமுகமாக அத்தியாவசிய பொருட்களின் விலையை உயர்த்தும். இவ்வளவு முக்கியமான ஒரு பொருளாக பெட்ரோல் டீசல் இன்று மாறிவிட்டது.

இந்நிலையில் மக்கள் பெட்ரோல் டீசல் விலை அதிகமாக இருக்கிறது. எனப் புலம்பி வருகின்றனர். ஆனால் என்னதான் அவர்கள் புலம்பினாலும் பெட்ரோல் டீசல் போட யாரும் தயங்குவதேயில்லை எவ்வளவு விலை இருந்தாலும் பெட்ரோல் டீசலின் விற்பனை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே தான் இருக்கிறது.

இந்நிலையில் இந்த மே மாதம் 1-15 தேதியில் விற்பனையான பெட்ரோலின் அளவு கடந்த ஏப்ரல் மாதம் இதே தேதிகளில் விற்பனையான பெட்ரோல் அளவை விட 14 சதவீதம் கூடுதல் ஆகும். அதே போல டீசல் விற்பனையும் 1.8 சதவீதம் அதிகரித்துள்ளது.

இந்தியா முழுவதும் டீலர்கள் மூலம் பெட்ரோல் டீசல் விற்பனை நடந்து வருகிறது. இந்தியாவில் பெரும்பான்மையான பெட்ரோல் டீசல்கள் இந்த முறையில் விற்பனையாகிறது. ஒட்டு மொத்த விற்பனையில் 90 சதவீதம் சில்லறை விற்பனையின் பங்கு இருக்கிறது.

கடந்த மே 1-15 தேதிகளில் மட்டும் மொத்தம் 1.28 மில்லியன் டன் பெட்ரோல் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்த ஏப்ரல் மாதம் 1-15 தேதிகளில் மொத்தம் 1.12 மில்லியன் டன் பெட்ரோல் மட்டுமே விற்பனையாகியிருந்தது. இந்த மாதம் அது 14 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இதற்கு முக்கியமான இந்தியாவில் பெரும்பான்மையான இடங்களில் இது அறுவடைக் காலமாக இருக்கிறது.

இந்தியாவின் சந்தையைப் பொருத்தவரை பெரும்பாலும் அறுவடைக் காலங்களில் தான் நுகர்வோர் அதிகமாகப் பணத்தைச் செலவு செய்வார்கள். அப்படியாக இது அறுவடைக் காலம் என்பதால் பெட்ரோலுக்கான தேவையும் அதிகமாகியுள்ளது.

டீசல் விற்பனையைப் பொருத்தவரை 3.05 மில்லியன் டன் டீசல் விற்பனையாகியுள்ளது. இது கடந்த ஏப்ரல் மாதம் 1-15 தேதிகளில் விற்பனையான டீசலைவிட 1.8 சதவீதம் அதிகம் ஆகும். கடந்த ஏப்ரல் முதல் 15 நாளில் டீசல் விற்பனை 2.99 மில்லியன் டன் விற்பனையாகியிருந்தது. இந்தியாவில் பெட்ரோல் டீசலை ஒப்பிடும் போது டீசல்தான் அதிகமாக விற்பனையாகிறது. இதற்கு முக்கியமான காரணம் சரக்கு ஏற்றிச்செல்லும் வாகனங்கள்

இந்தியாவில் உள்ள கனரக வாகனங்கள் பெரும்பாலும் டீசல் வாகனங்களாக இருப்பதால் டீசல் விற்பனை அதிகமாக இருக்கிறது. மேலும் விமானங்களுக்குப் பயன்படுத்தப்படும் ஜெட் பெட்ரோல் விற்பனை 5 லட்சம் டன் பெட்ரோலை விற்பனை செய்துள்ளது. கடந்தாண்டு இதே காலத்தில் கொரோனா காரணமாக வெறும் 2.5லட்சம் டன் பெட்ரோல் மட்டும் தான் விற்பனையாகியிருந்தது. குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








