Just In
- 40 min ago தண்ணீரை சேமிக்க இப்படி ஒரு வழியா? இனி ரயில்களில் 1லிக்கு பதிலாக 500 மிலி தண்ணீர் மட்டும் வழங்க முடிவு!
- 1 hr ago தார் ரோடு, பாறைகள் நிறைந்த ஆஃப்-ரோடு எதா இருந்தாலும் ஒரு கை பாத்திடலாம்! இந்தியாக்கு ஏத்த கார் விராங்ளர்!
- 4 hrs ago அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- 5 hrs ago இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
Don't Miss!
- Movies நீங்கள் என் படத்தை பார்த்திருக்க மாட்டீங்க.. ஹரியிடம் ஓபனாக சொன்ன கமல் ஹாசன்
- Finance வீட்டுக் கடன்: EMI செலுத்தாட்டி, வீடு ஏலம் விடப்படுமா? RBI சொல்வது என்ன? வங்கிகளின் அதிகாரம் என்ன?
- News இளையராஜாவுக்கு சான்ஸ் கொடுத்த நாகூர் ஹனீபா.. எம்எல்ஏ ஹாஸ்டலில் "தென்றல் காற்றே" உருவான கதை!
- Technology கைக்கு 2 ஆர்டர்.. அவ்ளோ கம்மி.. AMOLED டிஸ்பிளே.. ப்ளூடூத் காலிங்.. ஹெல்த் டிராக்கர்கள்.. எந்த மாடல்?
- Sports இதுதான் ரியல் ட்விஸ்ட்.. ஓய்வுக்கு பின் சிஎஸ்கே அணியின் முக்கிய பதவிக்கு வரப்போகும் தல தோனி?
- Lifestyle கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
குடிபோதையில் விமானத்தை ஓட்ட முயன்ற பைலட், அதிகாரிகள் சுதாரித்தால் பெரும் விபத்து தவிர்ப்பு..!
டில்லியில் கடந்த 11ம் தேதியில் டில்லியில் இருந்து லண்டன் செல்லும் விமானம் ஒன்றை ஓட்டுதற்காக பணி ஒதுக்கப்பட்ட விமானி குடிபோதையில் விமானம் ஓட்ட வந்துள்ளார். அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் அது தெரியவந்
டில்லியில் கடந்த 11ம் தேதியில் டில்லியில் இருந்து லண்டன் செல்லும் விமானம் ஒன்றை ஓட்டுதற்காக பணி ஒதுக்கப்பட்ட விமானி குடிபோதையில் விமானம் ஓட்ட வந்துள்ளார். அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் அது தெரியவந்ததால் அவருக்கு பதிலாக வேறு ஒரு பைலட் கொண்டு விமானம் இயக்கப்பட்டது.
கடந்த 11ம் தேதி பகலில் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது டில்லி விமான நிலையம். தினமும் நூற்றுக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்கள் வந்து செல்லும் விமான நிலையம் என்பதாலும், நாட்டின் தலைநகரில் உள்ள விமான நிலையம் என்பதாலும் அதிக பாதுகாப்புகளுடன் உள்ள விமான நிலையமாக இது உள்ளது.
இங்கிருந்து உலகில் பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் தினமும் பறந்து வருகின்றன. நாட்டின் பல முக்கிய தலைவர்களும், சில வெளிநாட்டு தலைவர்களும் இந்த விமான நிலையத்தைதான் அதிகம் பயன்படுத்துகின்றனர்.
கடந்த 11ம் தேதியன்று பரபரப்பாக விமான நிலையம் இயங்கிய சூழ்நிலையில் மதியம் 2.45 மணிக்கு டில்லியில் இருந்து லண்டன் நோக்கி ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட தயார் செய்யப்பட்டு வந்தது.
அந்த விமானத்தில் பயணிக்க கூடிய பயணிகளும் ஒவ்வொருவராக விமான நிலையத்திற்கு வந்து தங்களது சோதனைகள், இமிகிரேஷன் பிராஸஸ்களை முடித்துக்கொண்டு விமானத்தில் ஏறுவதற்கு தயாராகி கொண்டிருந்தனர்.
அதே நேரத்தில் விமானத்தை இயக்குவதற்கான விமானிக்கான சோதனையும் நடந்தது. இந்த விமானத்தை இயக்குவதற்காக அரவிந்த் கத்பாலியா என்பவருக்கு பணி ஒதுக்கப்பட்டிருந்தது.
வழக்கமாக விமானத்தில் பயணத்தை துவங்கும் முன் விமானிகள் மது அருந்தியிருக்கிறார்களா? என்று சோதனை செய்யப்படும். அவ்வாறு அரவிந்திற்கும் செய்யப்பட்டது. அப்பொழுது அவர் மது அருந்தியிருப்பதாக முடிவுகள் வெளியானது.
அதனால் அதிகாரிகள் குழப்பமடைந்தனர். மீண்டும் அவருக்கு அந்த சோதனை நிகழ்த்தப்பட்டது. அப்பொழுதும் அதே போன்ற முடிவுகள் வந்ததால் அவர் மது அருந்தியிருப்பது உறுதியானது. அவரும் மது அருந்தியதை ஒப்பு கொண்டார்.
பலர் பயணிக்கும் நீண்ட தூரம் செல்லும் விமானத்தை இயக்கும் விமானி மது அருந்தி விட்டு விமானத்தை இயக்க வந்தது அதிகாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து அந்த விமானிக்கு பதிலாக வேறு ஒரு விமானியை கொண்டு லண்டன் செல்லும் விமானம் இயக்கப்பட்டது. இதனால் விமானம் புறப்படுவதற்கு சிறிது காலதாமதம் ஆனது.
மேலும் அவரது லைசன்ஸை தற்காலிகமாக விமான பாதுகாப்பு அதிகாரிகள் சஸ்பென்ட் செய்தனர்.
குடிபோதையில் விமானம் ஓட்ட வந்த பைலட் அரவிந்த் இதே போன்று கடந்த 2017ம் ஆண்டும் ஒரு முறை இந்த சர்ச்சையில் சிக்கினார். தற்போது இரண்டாவது முறையாக அவர் இதே போல சிக்கியுள்ளார்.
அப்பொழுது அவர் டில்லியில் இருந்து பெங்களூரு செல்லும் விமானத்தில் மது குடித்துள்ளாரா? என்ற சோதனையை செய்யாமலேயே அவர் விமானத்தை இயக்கி சென்றதாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த விமானத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் பயணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற செய்திகளை உடனுக்குடன் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்..!
குடித்து விட்டு கார், பைக்குகளே ஓட்டக்கூடாது என அரசு தீவிரமாக நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் இரண்டாவது முறையாக ஒரு பைலட் குடிபோதையில் விமானம் ஓட்டிய சர்ச்சையில் சிக்கியுள்ளது பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.
-
ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
-
எத்தன பேரு வாங்கி குவிக்க போறாங்களோ! இன்னும் 7நாள்ல டெலிவரி தொடங்க போகுது! வேட்டியை வரிஞ்சுக்கட்டிய ஓலா!
-
ரூ6.13 லட்சம் விலை, 19 கி.மீ மைலேஜ் தரும் இந்த காரை வாங்க லைன் நின்னாலும் உடனே கிடைக்காது! ஏன் தெரியுமா?