Just In
- 18 min ago அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- 24 min ago ஆணுக்கு இணையா பந்தயத்துக்கு வரிசைக்கட்டி நின்ற பெண் பைக் ரேஸர்கள்!! போட்டி தீயாய் இருந்துச்சு... முழு வீடியோ!
- 2 hrs ago மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- 3 hrs ago ரெனால்ட் டஸ்டர் கார் பற்றி இந்த அப்டேட்காக தான் இந்தியாவே வெயிட்டிங்! இப்பவே ரெடியாக வேண்டியது தான்!
Don't Miss!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- News "மகளிர் உரிமை தொகை வரல.." அமைச்சரை பேச விடாமல் நிறுத்திய பெண்.. மேடையில் அடுத்து நடந்த பரபர சம்பவம்
- Sports ரோகித்.. ரோகித் என கத்திய ரசிகர்கள்.. ஓங்கி ஒரு அடி விட்ட ஹர்திக் பாண்டியா - வீடியோ
- Movies என்னது தனுஷ் இயக்கத்தில் நடிக்கிறாரா ஜிவி பிரகாஷ்?.. அட இது செம விஷயமா இருக்கே
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
டோல்கேட் கட்டண கொள்ளைக்கு விடிவு காலம் பிறக்கிறது? நீதிமன்றத்தில் தாக்கலான பொது நல மனு இதுதான்
எக்ஸ்பிரஸ்வே சாலைகள் தொடர்பான பொது நல மனு ஒன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த உதவும் விரைவான பயணத்திற்காக இந்தியா முழுக்க தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. பல்வேறு இடங்களில் தேசிய நெடுஞ்சாலை பணிகள் துரித கதியில் நடைபெற்றும் வருகின்றன. தேசிய நெடுஞ்சாலைகள் மீது வாகன ஓட்டிகளுக்கு எவ்விதமான அதிருப்தியும் கிடையாது. ஆனால் தேசிய நெடுஞ்சாலைகளில் வழி நெடுகிலும் அமைக்கப்பட்டுள்ள டோல்கேட்கள்தான் வாகன ஓட்டிகளை பதற வைக்கின்றன.
தற்போதைய நிலையில் இந்தியா முழுக்க தேசிய நெடுஞ்சாலைகளில் 500க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தங்களின் பர்ஸை பதம் பார்க்கும் விஷயமாகதான் டோல்கேட்களை வாகன ஓட்டிகள் பார்க்கின்றனர். பல்வேறு டோல்கேட்களில் விதிமுறைகளை ஒதுக்கி தள்ளி விட்டு கட்டண கொள்ளை அரங்கேற்றப்படுவதாக வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
போதாக்குறைக்கு கழிப்பிடம், குடிநீர், ஆம்புலன்ஸ் மற்றும் அவசர காலத்தில் தேவைப்படக்கூடிய வசதிகள் எதுவும் தேசிய நெடுஞ்சாலைகளில் இருப்பதில்லை என்பதும் வாகன ஓட்டிகளின் குற்றச்சாட்டாக உள்ளது. இவை எதுவுமே இல்லாமல் அதிகப்படியான கட்டணம் வசூலிப்பதால்தான் டோல்கேட்கள் என்றாலே வாகன ஓட்டிகளுக்கு வெறுப்பு ஏற்படுகிறது.
இப்படிப்பட்ட சூழலில், கேஎம்பி எனப்படும் குண்ட்லி-மானேசர்-பாவெல் (KMP - Kundli-Manesar-Pawal), குண்ட்லி-காஸியாபாத்-பாவெல் எக்ஸ்பிரஸ்வே மற்றும் கிழக்கு வெளிவட்ட விரைவு சாலை (ஈஸ்டர்ன் பெரிபெரல் எக்ஸ்பிரவே) மற்றும் மேற்கு வெளிவட்ட விரைவு சாலை (வெஸ்டர்ன் பெரிபெரல் எக்ஸ்பிரவே) ஆகிய எக்ஸ்பிரஸ்வேக்களில், பெட்ரோல் பங்க்குகள், கழிப்பிடங்கள், ஆம்புலன்ஸ், அவசர கால வசதிகள், உணவகங்கள், போலீஸ் ரோந்து உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு (NHAI - National Highway Authority of India) உத்தரவிட வலியுறுத்தி, டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சமூக ஆர்வலரும், வழக்கறிஞருமான அமித் சாஹ்னி என்பவர் இந்த பொது நல வழக்கை டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இதில், ''வெஸ்டர்ன் பெரிபெரல் எக்ஸ்பிரவே சாலையை தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து வருவதாகவும், ஆனால் அடிப்படை வசதிகள் எதுவுமே இல்லாத சூழலிலும், டோல்கேட் கட்டணங்களை செலுத்தி வருவதாகவும்'' குறிப்பிடப்பட்டுள்ளது.
தலைமை நீதிபதி ராஜேந்திர மேனன் மற்றும் நீதிபதி அனூப் ஜெய்ராம் பாம்பானி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த மனு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் இதுதொடர்பாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். இதுதவிர ஹரியானா மாநில தொழில்துறை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகமும் (HSIIDC - Haryana State Industrial and Infrastructure Development Corp Ltd) இது தொடர்பாக பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பொது நல மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை வசதிகள், இந்தியாவில் உள்ள அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளிலும் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதே நாடு முழுக்க உள்ள வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்களின் எண்ணம். நாட்டில் உள்ள நீதிமன்றங்களின் தலையீட்டின் பேரிலாவது இந்த பிரச்னைக்கு விடிவு காலம் பிறக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
குடிநீரில் கழுவினால் அபராதம்! பெங்களூர் கார் ஓனர்கள் கையில் எடுத்த புதிய ட்ரிக்! இது நமக்கு தெரியாம போச்சே!
-
இது ஏப்ரல் ஃபூல் கிடையாது.. டாடா அல்ட்ராஸ் ரேஸர் கார் ஏப்ரல்ல அறிமுகமாக போகுது! இறங்கி அடிக்க தயாராகும் டாடா!
-
இந்தியாவை ஆட்சி செய்தது போதும்.. ஜப்பான் பக்கம் ஒதுங்குவோம்.. தமிழகத்துல இருந்து ஜப்பான் போகும் புல்லட் 350