Just In
- 43 min ago பேடிஎம் ஃபாஸ்ட் டேக் கார்டுகளை இப்பவும் பயன்படுத்த முடியுமா? அதுல இருக்குற பணத்தை எடுப்பது எப்படி?
- 2 hrs ago எல்லாரும் ஃப்ளோரிடாவுக்கு கிளம்ப போறாங்க.. ரோல்ஸ் ராய்ஸ் காரை இலவசமா தர போறாங்களாம்!! ஒரே ஒரு நிபந்தனைதான்!
- 8 hrs ago ஜாக்பாட்... 4,000 எலெக்ட்ரிக் கார்களுக்கு ஆர்டர் கொடுத்த பிரபல நிறுவனம்... வரிசையா களத்துல எறக்க போறாங்க...
- 8 hrs ago இத்தாலி நாட்டை சேர்ந்த டூ-வீலர் உற்பத்தி நிறுவனத்தின் பெரும் பங்கை வாங்கிய கேடிஎம்-இன் தாய் நிறுவனம்..
Don't Miss!
- Finance ஸ்மார்ட் போன் வாங்கப் போறீங்களா? ரூ.60,000க்கு கீழ் கிடைக்கும் உயர்ரக பிராண்டட் போன்கள்..
- News தமிழ்நாட்டில் பாஜக வலுவாகிறது.. தேர்தல் முடிவுகள் ஆச்சரியத்தை ஏற்படுத்த போகிறது.. பிரதமர் மோடி
- Movies Suriya - என்னது புறநானூறு படம் ட்ராப்பா?.. சூர்யா வெளியிட்ட அறிவிப்பு.. ரசிகர்கள் மகிழ்ச்சி
- Lifestyle இட்லி, தோசைக்கு ஒருமுறை இப்படி தக்காளியை குருமாவை செஞ்சு பாருங்க.. அடிக்கடி செய்வீங்க..
- Technology அதிரி புதிரி ஆர்டர்.. 66W சார்ஜிங்.. 64MP கேமரா.. AMOLED டிஸ்பிளே.. ஆஃபரில் விவோ போன்.. எந்த மாடல்?
- Sports சிஎஸ்கே அணியின் படுமோசமான கேப்டன்கள் பட்டியல்.. தோனி கேப்டனா இருக்க காரணமே இதுதான்
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
- Education தரமான கல்வியைத் தர உறுதி பூண்டுள்ள பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டம்...!!
பெட்ரோல் பங்கில் கருப்பு குழாய்களை மாற்றுங்கள்; உச்சநீதிமன்றத்தில் புதிய வழக்கு..!!
நாட்டில் பெருமளவில் பெட்ரோல் பங்குகளில் மோசடி நடப்பதாகவும், பங்க் உரிமையாளர்கள் மக்களிடம் ஒழுங்கமைக்கப்பட்ட மோசடியில் ஈடுபட்டு வருவதாக டெல்லி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் தகவல்களை இனி பார்க்கலாம்.
வருடந்தோறும் வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்தபடியே இருக்கிறது. எரிபொருள் விலைகளும் அதிகமாக ஏறிக்கொண்டே உள்ளன. இந்த சூழ்நிலையில் பெரும்பாலான பெட்ரோல் பங்குகளில் வாடிக்கையாளர்களிடம் தினமும் பெருமளவுக்கு மோசடிகள் நடந்துகொண்டுதான் உள்ளன
வாடிக்கையாளர்கள் எளிதில் கவனித்திராத ஒரு மோசடி என்னவென்றால்,பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் அல்லது டீசல் அடிக்கும்பொழுது பங்க் ஊழியர்கள் பெட்ரோல் நிரப்பும் பைப்பை இறுதி பகுதியில் கொஞ்சம் அமுக்கி பிரஷர் கொடுப்பார்கள்.
இதனால் மீட்டரில் பெட்ரோல் அளவு ஓடிக்கொண்டே இருந்தாலும், வாகனத்திற்குள் எரிபொருள் நின்று, நின்றுதான் வரும். இதனால் ஒவ்வொரு வாகனங்களிலும் கணிசமான அளவு பெட்ரோலை பங்குகள் மிச்சப்படுத்திவிடலாம்.
கடந்த 2017ம் வருடம் மகாராஷ்டிரா மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில், பெட்ரோல் பைப்பில் ஒரு சிப் பொருத்தப்பட்டு அதை ரிமோட் கருவி மூலம் இயக்கி பெட்ரோல் மற்றும் டீசலின் அளவை குறைத்து பொதுமக்களிடம் மோசடியில் ஈடுபட்டது சிறப்பு அதிரடி படையினரால் கண்டுபிடிக்கப்பட்டது.
இதுபோன்று பல்வேறு மோசடிகளை கருத்தில் கொண்டு பெட்ரோல் பங்குகளில் தொடர் மோசடி நடப்பதாகவும், டிஜிட்டல் மீட்டர் போன்ற தொழில்நுட்ப வசதிகளை கொண்டு பங்க் உரிமையாளர்கள் மக்களிடம் ஒழுங்கமைக்கப்பட்ட மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதை மத்திய அரசு தலையிட்டு பெட்ரோல் பங்குகளின் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய வேண்டும், மேலும் பெட்ரோல் அடிக்க உபயோகிக்கும் கருப்பு குழாய்களை மாற்றி வாடிக்கையாளர்களுக்கு பெட்ரோல் தெரியும் வகையில் ட்ரான்ஸ்பரென்ட் குழாய்கள் பொறுத்த வேண்டும் என டெல்லி உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் அமித் சாஹ்னி என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் நாட்டில் பெருமளவில் பெட்ரோல் பங்குகளில் மோசடி நடக்கிறது. டிஜிட்டல் மீட்டர் போன்ற தொழில்நுட்ப வசதிகளை கொண்டு பங்க் உரிமையாளர்கள் மக்களிடம் ஒழுங்கமைக்கப்பட்ட மோசடியில் ஈடுபட்டு வருவதாக பத்திரிக்கைகள், செய்தி ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் அதிகமாக பரவி வருகிறது.
இவ்விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு பெட்ரோல் பங்குகளின் வெளிப்படைத்தன்மையை உறுதி படுத்த வேண்டும். பெட்ரோல் பங்க்கில் நாம் வாகனங்களுக்கு பெட்ரோல் அல்லது டீசல் அடிக்கும்பொழுது பங்க் இயந்திம் காட்டும் மீட்டர் மட்டுமே நாம் வாகனத்திற்கு அடிக்கும் பெட்ரோல் அளவை உறுதி செய்யும். ஆனால் பெட்ரோல் அடிக்க கருப்பு குழாய்பொறுத்திருப்பதால் அதில் பெட்ரோல் வராமல் தடுத்து மோசடி செய்து வாகனங்களிலும் கணிசமான அளவு பெட்ரோலை பங்குகள் மிச்சப்படுத்தி மக்களை ஏமாற்றி வருகினார்.
இதனை தவிர்க்க பெட்ரோல் அடிக்க உபயோகிக்கும் கருப்பு குழாய்களை மாற்றி வாடிக்கையாளர்களுக்கு பெட்ரோல் தெரியும் வகையில் ட்ரான்ஸ்பரென்ட் குழாய்கள் பொறுத்த மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என மனுவில் வழக்கறிஞர் அமித் சாஹ்னி கூறியுள்ளார்.
-
டாடா பஞ்ச் காரை இப்படி வாங்கினால் ரூ1.13 லட்சம் மிச்சமாகும்! ஆனா ஒரே ஒரு கண்டிஷன் இருக்குது!
-
இந்தியாவின் முதல் தண்ணீருக்கு அடியில் பயணிக்கும் ரயில் சேவை தொடக்கம்! ஆற்றுக்கு அடியில் இவ்ளோ நேரம் பயணிக்குமா
-
இவ்வளவு சின்ன வயதில் தொழிலில் எவ்வளவு பெரிய வளர்ச்சி!! சொமாடோ சிஇஓ-ஐ பற்றி தெரியாத சில உண்மைகள்!