இனி வெளிநாடு செல்லவேண்டாம், உள்நாட்டிலேயே விமானங்களை சர்வீஸ் செய்யலாம்... புதிய வரி.!! புதிய விதி..!
இனி வெளிநாடு செல்லவேண்டாம், உள்நாட்டிலேயே விமானங்களை சர்வீஸ் செய்யலாம்... புதிய வரி.!! புதிய விதி..!!
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வரி சீர்திருத்தங்கள் காரணமாக, இனி உள்நாட்டிலேயே விமானங்களுக்கான சர்வீஸ் மையங்கள் அமையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் இயங்கி வரும் விமானங்களை சர்வீஸ் செய்ய, இலங்கை அல்லது தென்கிழக்கு ஆசியாவில் உள்ள மற்ற நாடுகளுக்கு தான் செல்ல வேண்டும்.
Recommended Video


இதனால் ஆண்டு ஒன்றுக்கு இந்தியா விமானங்களை சர்வீஸ் செய்யவதன் மூலம் குறிப்பிட்ட நாடுகள் கிட்டத்தட்ட 704 மில்லியன் டாலர்கள் வரை லாபம் பார்த்து வந்தன.

தற்போது பிரதமர் மோடி தலைமையிலான அரசால் கொண்டு வரப்பட்டுள்ள புதிய விதிகளின்படி, இனி விமானங்களை இந்தியாவில் சர்வீஸ் செய்வதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.

இதைக்குறித்து பேசிய ஏர்வோர்க்ஸ் நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி விவேக் கௌர்,
விமானங்களை பராமரிக்கவும், சரிசெய்தல், இயந்திர பாகங்கள் மீது இறக்குமதிக்கான வரி ரத்து போன்ற மத்திய அரசின் புதிய விதிகள் காரணமாக விமான சர்வீஸ் மையங்களை இந்தியாவிலேயே நிறுவ வழிவகுக்கும் என்று கூறியுள்ளார்.

மேலும் ஏர் வோர்க்ஸ் நிறுவனம் பல நிறுவனங்கள் தங்களது விமானங்களை இனி இந்தியாவிலேயே சர்வீஸ் செய்துகொள்வதற்கான வசதியை ஏற்படுத்தர உள்ளது.

இதன்மூலம் நிறுவனங்களின் பங்களிப்பு அதிகமாகி, விமான பயணங்களை அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தும் வாய்ப்பு அமையும் என ஏர்வோர்க்ஸ் நிர்வாக அதிகாரி விவேக் கௌர் கூறுகிறார்.

இண்டிகோ, ஸ்பைஸ் ஜெட் போன்ற விமான சேவையை வழங்கும் நிறுவனங்கள் ஏர்வோர்க்ஸ் மற்றும் போயிங்கிடம் 90 பில்லியன் டாலர்கள் மதிப்பில் விமானங்களை தயாரித்து வழங்க ஒப்பந்தம் செய்துள்ளன.

இதன்மூலம் இந்தியாவில் அடுத்த பத்து ஆண்டுகளில் குறைந்தது 1000 விமானங்களை பழுது பார்க்கும் வசதி உருவாகும். இதன் காரணமாக நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும்.
இலங்கை, சிங்கப்பூர் மற்றும் மலேசியா போன்ற நாடுகளில் தான் இந்தியாவில் இயங்கும் விமானங்கள் பல சர்வீஸ் செய்யப்படுகின்றன.

தற்போது உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய விதி காரணமாக சுமார் 45 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் பணம் செலவாவது தடுக்கப்படும் என இந்திய அரசு எண்ணுகிறது.

விமான சேவைகளை பொறுத்து மத்திய அரசு கொண்டு வந்த மேலும் சில விதிகளில், வெளிநாட்டு விமானங்கள் இந்தியாவில் 6 மாத காலம் வரை பார்க்கிங் செய்யப்படலாம் என தெரிவிக்கிறது.

பார்க்கிங் மட்டுமில்லாமல், அதற்காக பழுது பார்ப்பது, பராமரிப்பது போன்ற பணிகளும் அரசின் உரிய அனுமதி உடன் நிறுவனங்கள் எடுத்து செல்லலாம் எனவும் கூறுகின்றன.

இந்தியாவில் இப்படி ஒரு வசதி அமைந்தால் மற்ற நாட்டு விமானங்களை பார்க்கிங் செய்வதன் மூலம் லாபம் பார்த்து வரும் ஓமன், மாலத்தீவுகள் மற்றும் மியான்மர் போன்ற நாடுகள் பெரிய இழப்பை சந்திக்கும்.

விமான துறைக்கான தேவைகளை சரிசெய்வதில் இந்திய அரசு இரண்டு ஆண்டுகளாகவே கவனம் செலுத்தி வருகிறது.

பராமரிப்பு, பழுது மற்றும் பழுது பார்த்தல் துறையான இந்தியாவில் எம்.ஆர்.ஓ (MRO) விமான தயாரிப்பு நிறுவனங்களுக்கு இந்தியாவில் பெரிய பங்களிப்பை தருகிறது.

உலகிலேயே விமான துறையின் மூலம் வருவாய் பெறுவதில் ஃபிரான்ஸ் நிறுவனம் முன்னிலை வகிக்கிறது. கடந்த மார்ச் மாதம் வரை சுமார் ரூ.1000 கோடி வரை ஃபிரான்ஸ் விமான துறைக்கான செயல்பாடுகளில் இருந்து வருமானம் ஈட்டியுள்ளது.


Click it and Unblock the Notifications








