நாட்டின் முதல் பைலட் இல்லா மெட்ரோ ரயிலை மக்களுக்கு அர்பணித்தார் பிரதமர் மோடி... முழு விபரம்!

ஆளில்லாமல் இயங்கக்கூடிய நாட்டின் முதல் மெட்ரோ ரயிலை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

தானாவே பிரேக் பிடிக்கும், ஹாரன் அடிக்கும்... நாட்டின் முதல் பைலட் இல்லா மெட்ரோ ரயிலை மக்களுக்கு அர்பணித்தார் பிரதமர் மோடி...

ஆளில்லாமல் இயங்கும் நாட்டின் முதல் மெட்ரோ ரயில்களை பிரதமர் மோடி இன்று பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். வீடியோ கான்பரன்சிங் வாயிலாக இதனை மக்களுக்கு மோடி அர்பணித்தார். தலைநகர் டெல்லியில்தான் இந்த சிறப்பு மெட்ரோ ரயில் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

தானாவே பிரேக் பிடிக்கும், ஹாரன் அடிக்கும்... நாட்டின் முதல் பைலட் இல்லா மெட்ரோ ரயிலை மக்களுக்கு அர்பணித்தார் பிரதமர் மோடி...

மேற்கு ஜனக்புரி முதல் தாவரவியல் பூங்க வரை இந்த ரயில் தடம் செயல்படும். இது சுமார் 37 கிமீ இடைவெளிக் கொண்ட வழித் தடம் ஆகும். பைலட் இல்லை என்றாலும், அவர் இல்லை என்ற உணர்வை இந்த இரயில் ஒரு நாளும் வழங்காது. இதற்கேற்ப பல்வேறு தொழில்நுட்ப வசதிகளை இந்த ரயில் பெற்றிருக்கின்றது.

தானாவே பிரேக் பிடிக்கும், ஹாரன் அடிக்கும்... நாட்டின் முதல் பைலட் இல்லா மெட்ரோ ரயிலை மக்களுக்கு அர்பணித்தார் பிரதமர் மோடி...

குறிப்பாக, எதிர் புறத்தில் வேறொரு ரயில் வருமானால் குறிப்பிட்ட சில மீட்டர் இடைவெளியிலேயே தானாக நிற்கும் வசதியை இந்த தானியங்கி ரயில் கொண்டிருக்கின்றன. இதுமட்டுமின்றி, ரயில் நிலையத்திற்குள் நுழைவதற்கு முன்னரும், புறப்படுவதற்கு முன்னரும் ஓர் பைலட் எப்படி ஹாரன் அடித்து எச்சரிக்கைச் செய்வாரோ, அதேபோன்று, இந்த தானியங்கி ரயிலும் ஒலியை எழுப்பும்.

தானாவே பிரேக் பிடிக்கும், ஹாரன் அடிக்கும்... நாட்டின் முதல் பைலட் இல்லா மெட்ரோ ரயிலை மக்களுக்கு அர்பணித்தார் பிரதமர் மோடி...

குறிப்பாக, எதிர் புறத்தில் வேறொரு ரயில் வருமானால் குறிப்பிட்ட சில மீட்டர் இடைவெளியிலேயே தானாக நிற்கும் வசதியை இந்த தானியங்கி ரயில் கொண்டிருக்கின்றன. இதுமட்டுமின்றி, ரயில் நிலையத்திற்குள் நுழைவதற்கு முன்னரும், புறப்படுவதற்கு முன்னரும் ஓர் பைலட் எப்படி ஹாரன் அடித்து எச்சரிக்கைச் செய்வாரோ, அதேபோன்று, இந்த தானியங்கி ரயிலும் ஒலியை எழுப்பும்.

தானாவே பிரேக் பிடிக்கும், ஹாரன் அடிக்கும்... நாட்டின் முதல் பைலட் இல்லா மெட்ரோ ரயிலை மக்களுக்கு அர்பணித்தார் பிரதமர் மோடி...

தொடர்ந்து, "மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் தனக்கு மெஜந்தா கோட்டையை திறக்கும் பாக்கியம் கிடைத்ததாகவும், தற்போது நாட்டின் முதல் தானியங்கி மெட்ரோ ரயிலை திறக்கும் பாக்கியம் கிடைத்திருப்பதாகவும்" அவர் நெகிழ்ந்தார். இதையடுத்து, நாடு மிக வேகமாக வளர்ந்து வருவதைச் சுட்டிக்காட்டி பெறுமிதம் கொண்டார்.

தானாவே பிரேக் பிடிக்கும், ஹாரன் அடிக்கும்... நாட்டின் முதல் பைலட் இல்லா மெட்ரோ ரயிலை மக்களுக்கு அர்பணித்தார் பிரதமர் மோடி...

தானியங்கி ரயில் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்:

மேக்னெடா லைன் மூலம் தொடங்கப்பட்டிருக்கும் இந்த தானியங்கி ரயில்கள், தற்போது மேற்கு ஜனக்பூரி மற்றும் தாவரவியல் பூங்கவை இணைக்கும் வகையிலேயே செயல்பட உள்ளது. ஆனால், விரைவில் இதன் பாதை நீட்டிக்கப்பட இருக்கின்றது.

தானாவே பிரேக் பிடிக்கும், ஹாரன் அடிக்கும்... நாட்டின் முதல் பைலட் இல்லா மெட்ரோ ரயிலை மக்களுக்கு அர்பணித்தார் பிரதமர் மோடி...

இதன்படி, பிங்க் லைன் (மஜ்லிஸ் பார்க்-சிவ் விஹார்) வரை நீட்டிக்கப்பட இருக்கின்றது. இந்த நீட்டிப்பு பணி வருகின்ற 2021ம் ஆண்டின் அரைப் பாதிக்குள் நிறைவடையும் என கூறப்படுகின்றது. அவ்வாறு வழி தடம் நீட்டிக்கப்படுமானால் இதன் ஒட்டுமொத்த தூரம் 94 கிமீ ஆகும். இது தற்போது டெல்லியில் பயன்பாட்டில் இருக்கும் ஒட்டுமொத்த மெட்ரோ ரயில் வழி தடத்தின் 9 சதவீதம் ஆகும்.

தானாவே பிரேக் பிடிக்கும், ஹாரன் அடிக்கும்... நாட்டின் முதல் பைலட் இல்லா மெட்ரோ ரயிலை மக்களுக்கு அர்பணித்தார் பிரதமர் மோடி...

உலகின் முதல் ஓட்டுநரில்லா மெட்ரோ ரயில் சேவை ஜப்பான் நாட்டின் கோஸ்ட் நகரத்திலேயே பயன்பாட்டுக்கு வந்தது. 1981ம் ஆண்டில் இந்த சேவை அங்கு தொடங்கப்பட்டது. இதையடுத்து தற்போது உலகின் 46க்கும் அதிகமான முக்கியமான நகரங்களில் இந்த சேவை பயன்பாட்டில் இருக்கின்றது. இந்த நிலையிலேயே தற்போது இந்தியாவிலும் தானியங்கி ரயில் போக்குவரத்துத் தொடங்கப்பட்டிருக்கின்றது.

தானாவே பிரேக் பிடிக்கும், ஹாரன் அடிக்கும்... நாட்டின் முதல் பைலட் இல்லா மெட்ரோ ரயிலை மக்களுக்கு அர்பணித்தார் பிரதமர் மோடி...

இந்த சிறப்பு வாய்ந்த ரயிலை பயன்பாட்டிற்கு கொண்டுவந்ததன் மூலம் சர்வதேச தானியங்கி ரயில் போக்குவரத்தை மேற்கொண்டு வரும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களின் முயற்சியிலேயே நாட்டின் முதல் மெட்ரோ ரயில் சேவை தலைநகர் டெல்லியில் கொண்டுவரப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Monday, December 28, 2020, 14:12 [IST]
English summary
PM Narendra Modi Inaugurates India’s First Driverless Train. Read In Tamil.
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+