Just In
- 59 min ago அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- 1 hr ago மோடியின் பாதுகாப்புக்கு செல்லும் இந்த டீசல் காரை இனி பயன்படுத்த கூடாது! வெளியான புதிய உத்தரவு
- 2 hrs ago சென்னை ஃபோர்டு ஆலையில் முக்கிய புள்ளிகளின் நடமாட்டம்! எதிர்பார்த்த செய்தி வரப்போகுது போல!
- 3 hrs ago 5கதவுகள் வெர்ஷனிலும் வருகிறது மஹிந்திரா தார்.. இந்தியர்களோட ரொம்ப நாள் எதிர்பார்ப்பு..
Don't Miss!
- Movies அய்யய்யோ பிரபல ஹீரோவுக்கு அமெரிக்காவில் விபத்து.. நல்ல காயமாம்.. கன்ஃபார்ம் செய்த டீம்
- News விவாதத்தை கிளப்பும் கெஜ்ரிவால் கைது விவகாரம்? உள்ளே வரும் சர்வதேச நாடுகள்.. என்ன தான் நடக்கிறது!
- Sports IPL 2024 : ஐயயோ.. அவ்வளவு கண்டிப்புடன் இருக்க மாட்டேன்.. என்னை மாதிரி தான் ருதுராஜும்.. தோனி பகிர்வு
- Finance மாலத்தீவுக்கு 1500 டன் லிட்டர் தண்ணீரை அனுப்பிய சீனா.. அதுவும் திபெத்தில் இருந்து ஸ்பெஷல் டெலிவரி..!!
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
நடுரோட்டில் தீப்பிடித்த கார்... போலீஸாரால் மயிரிழையில் காப்பாற்றப்பட்ட கல்யாண மாப்பிள்ளை
தலைநகர் டெல்லியில் திருமண மாப்பிள்ளை ஒருவர் சென்ற கார் நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்துள்ளது. சில தீப்பொறிகள் வெளிவந்த போதே சோதனையில் இருந்த போலீஸார் கண்டறிததால் காரில் இருந்தவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர். இதுகுறித்த முழுமையான தகவல்களை இந்த செய்தியில் காண்போம்.
கொரோனா வைரஸ் மற்ற அனைத்து நாடுகளை போல இந்தியாவிலும் மிக பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸினால் பொருளாதாரம் மிகவும் சரிவடைந்துள்ள நிலையில் ஆட்டோமொபைல் துறையும் இதுவரை காண அளவிற்கு வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.
எந்த அளவிற்கு என்றால், கடந்த ஏப்ரல் மாதத்தில் டீலர் ஷோரூம்கள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளதால் மாருதி சுசுகி உள்பட அனைத்து ஆட்டோமொபைல் நிறுவனங்களும் பூஜ்ஜிய விற்பனை எண்ணிக்கையை தான் சந்தையில் பதிவு செய்துள்ளன.
மேலும் வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கடந்த மே 3ஆம் தேதி முடியவிருந்த ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் டெல்லியில் திருமணத்திற்காக மண்டபத்திற்கு சென்று கொண்டிருந்த மாப்பிள்ளையின் கார் தீடிரென நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்துள்ளது.
டெல்லியின் தெற்கு சரிதா விஹார் பகுதியில் நிகழ்ந்துள்ள இந்த சம்பவத்தில் இருந்த மாப்பிள்ளையின் பெயர் பூபேந்தர் ஆகும். தனது நண்பருடன் ஹூண்டாய் ஐ20 மாடலில் ஊரடங்கினால் காலியாக இருந்த சாலையில் சென்று கொண்டிருந்த இவரை வழியில் வாகன சோதனையில் ஈடுப்பட்டிருந்த போலீஸார் சோதனை காரணமாக நிறுத்தியுள்ளனர்.
அப்போது தான் அங்கிருந்த போலீஸார் ஒருவர் காரில் சில தீப்பொறிகள் ஏற்படுவதை கண்டறிந்தார். உடனே அவர் மாப்பிள்ளை பூபேந்தரையும், அவருடன் இருந்தவரையும் எச்சரித்து காரில் இருந்து வெளியேற்றியுள்ளார். அவர்கள் வெளியே வந்த சில நிமிடங்களில் கார் கொளுந்துவிட்டு எரிந்துள்ளது.
அந்த சமயத்தில் அந்த சாலையில் வேறெந்த வாகனமும் செல்லாததால் பெரிய அசாம்பாவிதம் எதுவும் நடைபெறவில்லை. அதேபோல் ஊரடங்கினால் தான் போலீஸார் பூபேந்தரின் காரை நிறுத்தியுள்ளனர், தீப்பொறி வருவதை கண்டறிந்துள்ளனர். இதுவே ஊரடங்கு இல்லை என்றால் கார் இயக்கத்தில் இருந்தபோதே கொளுந்துவிட்டு எரிந்திருக்கக்கூடும்.
கார் சிறிது எரிய துவங்கியபோதே தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டுவிட்டது. பின்னர் கல்யாண மாப்பிள்ளையையும், அவரது நண்பரையும் போலீஸார் தங்களது வாகனத்தில் ஏற்றி திருமணம் நடைபெறும் இடத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். கார் தீப்பிடித்ததற்கான காரணம் சரியாக தெரியவில்லை.
ஊரடங்கினால் வாகன பழுது பார்க்கும் நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளதால் முக்கியமான பணிக்காக வீட்டை விட்டு செல்வோர் தங்களது கார்களின் நிலையை புறப்படும் முன்னரே சரிப்பார்பதே இதற்கு ஒரே தீர்வு. இல்லையேல் மிக பெரிய அளவிலான பிரச்சனைகளில் சிக்கி கொள்ள நேரிடும்.
-
இன்சூரன்ஸ் இல்லாத வெளிநாட்டு காரில் பயணித்த நாம் தமிழர் வேட்பாளர்! வைரலாகும் புகைப்படம்!
-
உச்சகட்டம்! பெட்ரூமில் பண்ண வேண்டியத நடுரோட்டில் செய்த இளம்பெண்கள்! 18 வயசு ஆனவங்க மட்டும் வீடியோவை பாருங்க!
-
இவ்ளோ முரட்டு தனமான காருக்கா டொயோட்டா உரிமம் வாங்கியிருக்கு! பக்கத்து வீட்டுகாரர்களையும் சேத்து கூட்டி போகலாம்