Just In
- 5 min ago மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- 27 min ago ரெனால்ட் டஸ்டர் கார் பற்றி இந்த அப்டேட்காக தான் இந்தியாவே வெயிட்டிங்! இப்பவே ரெடியாக வேண்டியது தான்!
- 2 hrs ago அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- 2 hrs ago மோடியின் பாதுகாப்புக்கு செல்லும் இந்த டீசல் காரை இனி பயன்படுத்த கூடாது! வெளியான புதிய உத்தரவு
Don't Miss!
- News என்ன வேகம்! கிளாம்பாக்கம் தோத்துடும் போலயே.. செங்கல்பட்டில் இவ்வளவு பெரிய பேருந்து நிலையமா?
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Movies Pandian stores 2: இப்படியே திரும்பிப் பார்க்காம ஓடிடனும் போல இருக்கு.. சரவணன் சொன்ன விஷயம்!
- Finance தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி இதுதான் நிரந்தரமா? சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாதா..?
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
உசார்... ராயல் என்பீல்டு பைக்குகளை குறிவைக்கும் போலீஸார்: எதற்கு தெரியுமா...?
ராயல் என்பீல்டு பைக்குகளை போக்குவரத்து போலீஸார் வலை விரித்து வேட்டையாடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.
ராயல் என்பீல்டு நிறுவனத்தின் மோட்டார் சைக்கிள்களுக்கு இந்திய இளைஞர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பும், வரவேற்பும் நிலவி வருகின்றது. இந்த மோட்டார்சைக்கிள்கள் ரம்மியமான தோற்றத்தை பெற்றிருப்பதாலும், அதன் சைலென்சர்கள் எழுப்பும் சப்தத்தின் காரணமாகவும், அதன்மீது மதிமயங்கிய இளைஞர்கள், அதற்கான சந்தையை குறைவில்லாமல் ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர்.
அதேசமயம், ராயல் என்பீல்டு நிறுவனம் வழங்கும் சைலென்சர்கள் எழுப்பும் சப்தத்தைக் காட்டிலும் அதிக சப்தத்தை எழுப்பும் வகையிலான சைலென்சர்களை இளைஞர்கள் சிலர் மாடிஃபை செய்து பயன்படுத்தி வருகின்றனர். இதுபோன்று, வாகனங்களை மாடிஃபை செய்து பயன்படுத்துவது தற்போதைய சூழலில் குற்றமாகப் பார்க்கப்பட்டு வருகிறது.
ஆகையால், போக்குவரத்து போலீஸார் கடும் கெடுபிடியுடன், மாடிஃபை செய்து இயக்கப்படும் வாகனங்களைப் பறிமுதல் செய்து வருகின்றனர். மேலும், அதன் உரிமையாளர்கள் மீதும் தக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அந்தவகையில், மாடிஃபை சைலென்சர்களை பொருத்திய வாகனங்கள் வேட்டையில் தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் போலீஸார் தற்போது ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, அவர்கள் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் மோட்டார்சைக்கிள்களையே அதிகம் பறிமுதல் செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை ஈடி ஆட்டோ ஆங்கில இணையதளம் வெளியிட்டுள்ளது.
ஹைதராபத்தில் உள்ள ராமகுண்டம் நகர போலீஸார்தான் இந்த தீவிர வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அதிலும், இதனை வித்தியாசமான முறையில் கையாண்டு வருகின்றனர். அந்தவகையில், சாலையில் மெக்கானிக்குடன் காத்திருக்கும் போலீஸார், அப்போது சாலையில் அதிகம் சப்தத்துடன் வருகின்ற வாகனங்களை மடக்கி, உடனடியாக அதன் சைலென்சர்களை அதிலிருந்து நீக்குகின்றனர்.
அதிலும் முக்கியமாக ராயல் என்பீல்டு பைக்குகளை கண்டாலே, அதனை மடக்கி போலீஸார் பரிசோதிப்பதாக கூறப்படுகிறது. அவ்வாறு அதிக சப்தத்தோடு வரும் ராயல் என்பீல்டு பைக்குகளைப் மடக்கி, உடனடியாக அதில் மாடிஃபை செய்த சைலென்சரை போலீஸார் கழட்டுகின்றனர்.
பின்னர், அந்த பைக்கின் உரிமையாளர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்து மேற்படி நடவடிக்கை மேற்கொள்கின்றனர். தொடர்ந்து, இதுகுறித்த தகவலையும் ஆர்டிஓ அலவலகத்திற்கும் கொடுக்கின்றனர். இதனால், எதிர்காலத்தில் அவர்களின் ஓட்டுநர் உரிமம் ரத்தாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதுபோன்று கெடுபிடியான நடவடிக்கையில், அண்மைக் காலங்களாக கேரளா, ஆந்திரா உள்ளிட்ட சில மாநிலங்கள் மேற்கொண்டு வந்தநிலையில், தற்போது தெலங்கானாவும் இணைந்துள்ளது. அதேசமயம், இந்த மாநில போக்குவரத்து போலீஸார், இ-செலான் அபராதத் தொகையை நீண்ட நாட்களாக செலுத்தாமல் இருக்கும் வாகன ஓட்டிகளைக் கண்டுபிடித்து அவர்களுக்கு தக்க தண்டனையை வழங்கி வந்தனர்.
இந்நிலையில்தான், தற்போது அதிரடி வேட்டையாக மாடிஃபை வாகனங்கள்மீது தங்களின் பார்வையை செலுத்தியுள்ளனர். வாகனங்களை மாடிஃபிகேஷன் செய்து இயக்கும் கலாச்சாரம் அண்மைக் காலங்களாகதான் இந்தியாவில் அதிகரித்து வருகின்றது. இதுபோன்று, வாகனங்களை மாடிஃபை செய்து இயக்குவது தண்டனைக்குரிய குற்றமாகும்.
இதனை உறுதி செய்யும்விதமாக, அண்மையில் உச்சநீதிமன்றம் ஓர் உத்தரவினைப் பிறப்பித்திருந்தது. அதில், "மாடிஃபை செய்து இயக்கப்படும் வாகனங்களை பறிமுதல் செய்து, அதன் உரிமையாளர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கூறியிருந்தது.
மாடிஃபை சைலென்சர்களில் இருந்து வெளிவரும் சப்தங்களால் சாலையில் செல்லும் சக பயணிகள், பாதசாரிகள் உட்பட பலர் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அதிலும், பறவைகள் மற்றும் விலங்குகளே இதனால், அதிகம் பாதிப்புக்குள்ளாகி வருகின்றன. ஆகையால், இவற்றிற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக உச்சநீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு இந்தியாவின் பல மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இதனடிப்படையிலேயே, கேரள, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்கள் மாடிஃபை வாகனங்களுக்கு எதிரான போரைத் தொடர்ந்து வருகின்றனர்.