Just In
- 3 hrs ago இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- 3 hrs ago 7 பேர் போற கார் இவ்ளோ மைலேஜ் குடுக்குமா! விலை அதை விட ஆச்சரியம்! எவ்ளோனு தெரிஞ்சா அடுத்த நிமிஷமே வாங்கீருவீங்க
- 4 hrs ago இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
- 5 hrs ago உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!
Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
பறிமுதல் செய்த சைலென்சர்களை வைத்து போலீஸார் செய்த காரியத்தை பார்த்தீங்களா?
போலீஸார் வைத்த வித்தியாசமான அறிவிப்பு பலகையைப் பார்த்து வாகன ஓட்டிகள் சிலர் கடுப்பாகியுள்ளனர். அவர்கள் கோபமடைவதற்கான காரணத்தை விரிவாக இந்த பதிவில் காணலாம்.
வாகனங்களின் உண்மையானத் தோற்றத்தை மாடிஃபை செய்து இயக்கும் கலாச்சாரம் அண்மைக் காலங்களாக இந்தியாவில் பெருகி வருகின்றது. ஆனால், இந்திய மோட்டார் வாகன சட்டத்தின்படி, இது குற்றமாகும்.
வாகனங்களை மாடிஃபை செய்வதினால், அந்த வாகனம் அதன் உண்மையான தோற்றத்தை இழுக்கின்றது. அத்துடன், ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல்களுடன் ஒப்பிடுகையில், அது முரண்பாடுடையதாக மாறுகின்றது. இதன்காரணமாகவே, மாடிஃபை வாகனம் விவகாரத்தில் அரசு கடுமையான கெடுபிடியைக் காட்டி வருகின்றது.
அதேபோன்று, ஆஃப்டர் மார்கெட் எக்சாஸ்ட் சிஸ்டம் எனப்படும் வெளிப்புற சந்தையில் இருந்து வாங்கப்படும் சைலென்சர்களுக்கு எதிராகவும் போலீஸார் அண்மைக் காலங்களாக போர்க் கொடியை தூக்கி வருகின்றனர்.
பெரும்பாலும் ஆஃப்டர் மார்க்கெட் லைசென்சர்கள், அரசு நிர்ணயித்துள்ள அளவை காட்டிலும் அதிக ஒலியை உமிழ்கின்றன. இந்திய சட்ட திட்டத்தின்படி இரு சக்கர வாகனத்தின் சைலென்சர்கள் அதிகபட்சமாக 80 டெசிபல் அளவிலான ஒலியையே வெளியேற்ற வேண்டும்.
ஆனால், ஆஃப்டர் மார்க்கெட்டில் விற்பனையாகும் பெரும்பாலான சைலென்சர்கள் 140 டெசிபலுக்கும் அதிகமான சப்தத்தை வெளியேற்றுகின்றன.
இந்த அதிக சப்தம், காற்றை மாசு செய்வதுடன், பிற வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளுக்கு அச்சுறுத்த அமைகின்றது. மேலும், அதிலிருந்து வெளிவரும் அதிக ஒலி கேட்கும் திறனை பாதிக்கச் செய்கின்றது.
ஆகையால், இதனைத் தவிர்க்கும் விதமாக போலீஸார் அண்மைக் காலங்களாக, தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்தவகையில், ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்களைப் பயன்படுத்தும் வாகனங்களை மடக்கி, அவற்றை பறிமுதல் செய்து, அங்கேயே அழித்தும் வருகின்றனர்.
இந்நிலையில், கர்நாடகா மாநிலத்தின் பெங்களூரு நகர போலீஸார், ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நடவடிக்கையை அவர்கள் சமீப காலமாக எடுத்து வருவது குறிப்பிடத்தகுந்தது.
அந்தவகையில், பல வாகன ஓட்டிகளுக்கு எதிராக வழக்கு பதிந்து, அந்த பைக்குகளில் இருந்த ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்களை அவர்கள் நீக்கியுள்ளனர். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட அந்த சைலென்சர்களைக் கொண்டு, வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை வழங்குகின்ற வகையிலான பதாகை ஒன்றை அவர்கள் தயார் செய்துள்ளனர்.
தற்போது, அந்த பதாகைகுறித்த புகைப்படம், இணையத்தில் வைரலாகி வருகின்றது. முன்னதாக, இந்த சட்டவிரோத சைலென்சர்களைப் பறிமுதல் செய்த போலீஸார், அவற்றை தரையில் போட்டு ஜேசிபி கிரேன் வாகனங்கள் மூலம் அழித்து வந்தனர்.
தற்போது, அந்த சைலென்சர்களைப் பயன்படுத்தி வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை வழங்கும் பலகையை அவர்கள் தயார் செய்துள்ளனர்.
அந்த பதாகையில், "சாலை விதிகளை கடைபிடியுங்கள், பாதுகாப்பாக இருங்கள்" என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது.
அந்த புகைப்படத்தை நீங்கள் கீழே காணலாம்...
ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்களை இந்தியாவில் விற்பனை செய்ய தடை ஏதுவும் இல்லை. ஆனால், அவற்றை பொதுவெளியில் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், இந்த ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்களை, பிரத்யேகமான ரேஸிங் டிராக்குகள் மற்றும் தனியார் இடங்களில் மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. மாறாக அவற்றை பொதுசாலையில் பயன்படுத்தினால், அவர்கள்மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.
Source: Gaadiwaadi, Nizam Bilal Davangere Bilal Davangere.
-
பணங்காரங்க கண்ணு முழுக்க இந்த கார் மேல தான்! பிஒய்டி சீல் கார் எப்படி இருக்குது?
-
புதுசா வாங்கி காசை வேஸ்ட் பண்ணாதீங்க! பைக் ஓட்டி படிக்க செகன்ட் ஹேண்டில் வாங்க பெஸ்ட் பைக்குகள் இது தான்!
-
நானோ காரை நமக்கு தெரியும்! ஆனா இது அது கிடையாது... டாடா உருவாக்கிய இந்த கார் கடைசி வர வெளியே வராமல் போய்டுச்சே