ரூ.2.8 கோடி மெர்சிடிஸ் காரில் கஞ்சா கடத்திய முன்னாள் எம்.பி பேரன்... தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்..!!
ரூ.2.8 கோடி மெர்சிடிஸ் காரில் கஞ்சா கடத்திய முன்னாள் எம்.பி பேரன்... தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்..!!
பொறுப்பற்றவர்களின் நடவடிக்கைகள் அதனால் ஏற்படும் விளைவுகளை பற்றி பல செய்திகளை நாம் நாளேடுகளிலும், தொலைக்காட்சி ஊடகங்களிலும் பார்த்திருப்போம்.

இப்படி ஒரு சம்பவத்தால், பிரபல குடும்பத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரின் செயல் ஒரு கார் விபத்தின் வாயிலாக வெளிச்சத்திற்கு வந்ததுள்ளது.

சமீபத்தில் பெங்களூரு ஜெயா நகரில் உள்ள சவுத் என்டு சர்க்கிளில் மெர்சிடிஸ் பென்ஸின் ஆடம்பர எஸ்யூவி ஒன்று, மாருதி ஓம்னி கார் மீது மோதி பெரிய விபத்திற்குள்ளானது.

சம்பவ இடத்திற்கு வந்த பெங்களூரு போலிசார், ஓம்னி மீது மோதிய மெர்சிடிஸ் பென்ஸ் காரில் 110 கிராம் கஞ்சா பொருள் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து மெர்சிடிஸ் காரை ஓட்டி வந்த இளைஞரை பிடித்து விசாரித்த போலீசார், அவரது பெயர் விஷ்ணு (27 ) என்பதை தெரிந்துக்கொண்டனர்.
மேலும் அந்த இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினரும் மற்றும் பிரபல தொழிலதிபர் அதிகேஷவலு நாயுடுவின் பேரன் என்பது கூடுதலாக தெரியவந்தது.

இந்திய மதிப்பில் ரூ.2.8 கோடி மதிப்புடைய இந்த மெர்சிடிஸ் எஸ்யூவி மாடல் புதுச்சேரி மாநிலத்தில், கீதா விஷ்ணு என்பவரது பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது கூடுதல் விசாரணையில் தெரியவந்தது.

விபத்தில் சிக்கிய ஓம்னி காரில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பயணித்து வந்துள்ளனர். காரை ஓட்டிய ஹைஸர் கான் உட்பட மீதம் 6 பேர் சிறுகாயங்களுடன் தப்பினர்.

சாலையில் இருந்த பொதுமக்கள் பலர் மெர்சிடிஸ் கார் ஓம்னி மீது மோதிய உடன், மெர்சிடிஸை ஓட்டிய இளைஞர் விஷ்ணுவை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

மேலும் அதே காரில் விஷ்ணு உடன் பயணித்த மூன்று பேர் சம்பவ இடத்தில் இருந்து தப்பித்துவிட்டதாக பொதுமக்கள் போலீசாரிடம் கூறினர்.
விபத்தால் காயம் அடைந்த விஷ்ணுவை அருகில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் போலீசார் அனுமதித்துள்ளனர்.

சாலையில் முறைகேடாக கார் ஓட்டியது, தடை செய்யப்பட்ட கஞ்சா பொருட்களை வைத்திருந்த குற்றத்திற்காக என இரண்டு வழக்குகள் விஷ்ணுவின் மீது பதியப்பட்டுள்ளது.

விபத்து ஏற்படுத்தியதை குறித்தும், கஞ்சா வைத்திருந்ததை குறித்தும் விஷ்ணுவிடம் போலீசார் விசாரித்த போது, அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார்.

இருந்தாலும், சவுத் எண்டு சர்க்கிள் பகுதியில் இருக்கும் சிசிடிவி காட்சிகள் மற்றும் விஷ்ணுவின் ரத்த பரிசோதனை முடிவை வைத்து, இந்த வழக்கிற்கான ஆதாரங்களை ஆராய்ந்து இதற்கான விசாரணையை பெங்களூரு நகர போலீசார் மேற்கொள்ளவுள்ளனர்.


Click it and Unblock the Notifications








