Just In
- 19 min ago சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- 2 hrs ago எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- 5 hrs ago சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
- 7 hrs ago படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
Don't Miss!
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Movies Actress Sujitha: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி.. சூப்பர்ல!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பைக்குடன் சேர்த்து உரிமையாளரையும் ‘தூக்கிய’ டிராபிக் போலீஸ்
இருசக்கர வாகனத்துடன் சேர்த்து அதன் உரிமையாளரையும் தூக்கிச் சென்றுள்ளனர் டிராபிக் போலீசார். அது குறித்த தகவல்களை காணலாம்.
போக்குவரத்து நிறைந்த சாலைகளில் வாகனங்களை பார்க்கிங் செய்ய காவல்துறையினர் அனுமதிப்பதில்லை. அதையும் மீறி பார்க்கிங் செய்வோரின் வாகனங்களை காவல்நிலையத்திற்கு எடுத்துச் சென்றுவிடுவர்.
பின்னர், நோ பார்க்கிங்கில் நிறுத்தியதற்கான அபராதத் தொகையை காவல்துறையினர் வசூலித்த பின்னர் தூக்கிவந்த வாகனங்களை விடுவிப்பர். இது தான் வாடிக்கையாக நாம் சந்திக்கும் நிகழ்வு. ஆனால் நோ பார்க்கிங்கில் நின்ற ஒருவரின் வாகனத்தோடு, அதன் உரிமையாளரையும் தூக்கிச்சென்ற வினோத சம்பவம் இந்தியாவில் அரங்கேறியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் நகரின் போக்குவரத்து நிறைந்த சாலையோரத்தில் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தை பார்க்கிங் செய்துள்ளார். ஆனால் அது வாகனங்களை நிறுத்த அனுமதியில்லாத 'நோ பார்க்கிங்' பகுதியாகும்.
பின்னர், அப்பகுதிக்கு வந்த போக்குவரத்து காவல்துறையினர் இருசக்கர வாகனத்தை தங்களது காவல் வாகனத்தில் ஏற்ற முயற்சித்துள்ளனர். அதற்கு சம்மதிக்க மறுத்த வாகன உரிமையாளர் அபராதம் செலுத்தவும் மறுத்துள்ளார். வாகன உரிமையாளருடனான வாக்குவாதத்திற்கு பின்னர் அதிரடி முடிவிற்கு வந்தனர் காவல்துறையினர்.
வாகனத்தையும் தர மறுத்து, அபராதமும் செலுத்த மறுத்ததால், அந்த இருசக்கர வாகனத்தை அதன் உரிமையாளர் அமர்ந்த நிலையிலேயே தங்கள் காவல் வாகனத்தில் தூக்கிச் சென்றுள்ளனர் போக்குவரத்து காவல்துறையினர். இதை அந்த இருசக்கர உரிமையாளரின் நண்பர் வீடீயோவாக எடுத்து சமூக வலத்தளங்களில் பகிர்ந்துள்ளார். தற்போது அது வைரலாகி விட்டது.
போக்குவரத்து காவல்துறை 'தூக்கிய; வைரல் வீடீயோ இதுதான்:
#WATCH: Traffic police towed a motorbike with man sitting on it from Bada Chauraha area of Kanpur as he refused to get down. (08/03/17) pic.twitter.com/jbtHhFv7oO
— ANI UP (@ANINewsUP) March 9, 2017
ஸ்போர்ட்ஸ் மாடாலான மெக்லாரன் பி1 ஜிடிஆர் காரின் படங்கள்: