உத்தர பிரதேசத்தில் அடாவடி... ஜெயிலில் இருந்து ரிலீஸ் ஆன அரசியல் பிரமுகர் செய்த காரியம்... என்னனு தெரியுமா?

உத்தர பிரதேசத்தில் அரசியல் பிரமுகர் ஒருவர் செய்த காரியம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

உத்தர பிரதேசத்தில் அடாவடி... ஜெயிலில் இருந்து ரிலீஸ் ஆன அரசியல் பிரமுகர் செய்த காரியம்... என்னனு தெரியுமா?

இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலையின் தாக்கம் இன்னும் முழுமையாக குறையவில்லை. எனினும் இந்த விஷயத்திற்கு அரசியல் தலைவர்கள் உள்பட ஒரு சிலர் அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அதற்கு மாறாக அவர்கள் மிகவும் அஜாக்கிரதையாக இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களிர் தர்மேந்திரா யாதவும் ஒருவர்.

உத்தர பிரதேசத்தில் அடாவடி... ஜெயிலில் இருந்து ரிலீஸ் ஆன அரசியல் பிரமுகர் செய்த காரியம்... என்னனு தெரியுமா?

இவர் சமாஜ்வாதி கட்சியின் தலைவர்களில் ஒருவர் ஆவார். இவர் கடந்த 4ம் தேதி சிறையில் இருந்து பெயிலில் விடுவிக்கப்பட்டார். தர்மேந்திர யாதவை அவரது ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோர் வரவேற்றனர். அத்துடன் வாகன அணிவகுப்பில் அவருடன் இணைந்து பயணம் செய்தனர். இது தொடர்பாக 34 பேரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உத்தர பிரதேசத்தில் அடாவடி... ஜெயிலில் இருந்து ரிலீஸ் ஆன அரசியல் பிரமுகர் செய்த காரியம்... என்னனு தெரியுமா?

அத்துடன் 24 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில், ஆடி க்யூ3 காரும் ஒன்று. இது எஸ்யூவி ரக கார் ஆகும். தர்மேந்திர யாதவை இந்த காரைதான் பயன்படுத்தினார். தர்மேந்திர யாதவ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதையடுத்து, வாகனங்களை காவல் துறையினர் கடந்த ஞாயிற்று கிழமையன்று பறிமுதல் செய்தனர்.

உத்தர பிரதேசத்தில் அடாவடி... ஜெயிலில் இருந்து ரிலீஸ் ஆன அரசியல் பிரமுகர் செய்த காரியம்... என்னனு தெரியுமா?

தர்மேந்திர யாதவ் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட உடன், அவரது ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோர் அவருடன் வாகன அணிவகுப்பில் கலந்து கொண்டனர். இந்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றுள்ளது. ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து செல்லும் வீடியோ சமூக வலை தளங்களில் வைரலானது.

உத்தர பிரதேசத்தில் அடாவடி... ஜெயிலில் இருந்து ரிலீஸ் ஆன அரசியல் பிரமுகர் செய்த காரியம்... என்னனு தெரியுமா?

இதை தொடர்ந்து காவல் துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளனர். வாகனங்களில் அணிவகுத்து வந்தபோது, தர்மேந்திர யாதவிற்கு ஆதரவாக அவரது ஆதரவாளர்கள் கோஷங்களையும் எழுப்பியுள்ளனர். பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் உத்தர பிரதேச மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தற்போது வரை ஒட்டுமொத்தமாக 24 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

உத்தர பிரதேசத்தில் அடாவடி... ஜெயிலில் இருந்து ரிலீஸ் ஆன அரசியல் பிரமுகர் செய்த காரியம்... என்னனு தெரியுமா?

வீடியோவில் வாகனங்களின் பதிவு எண் பதிவாகியிருந்தது. இதனை அடிப்படையாக வைத்து வாகனங்கள் அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்டன. இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் இரண்டாவது அலையின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. ஆனால் இன்னமும் பாதிப்பு முழுமையாக குறைந்து விடவில்லை என்பதை அனைவரும் உணர வேண்டும்.

உத்தர பிரதேசத்தில் அடாவடி... ஜெயிலில் இருந்து ரிலீஸ் ஆன அரசியல் பிரமுகர் செய்த காரியம்... என்னனு தெரியுமா?

இந்தியாவில் தற்போது பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக சாலைகளில் வாகன போக்குவரத்து அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் கட்டுப்பாடுகளை மீறி தேவையில்லாமல் வெளியே சுற்றுவோரின் வாகனங்களை காவல் துறையினர் அதிரடியாக பறிமுதல் செய்து வருகின்றனர்.

எனவே அவசியம் இல்லாமல் வாகனங்களில் வெளியே சுற்றுவதை தவிர்ப்பது நல்லது. இதன் மூலம் காவல் துறையினரின் நடவடிக்கைகளில் இருந்து மட்டுமல்லாது, கொரோனா வைரஸின் பிடியில் இருந்தும் நீங்கள் தப்பிக்கலாம். அதே நேரத்தில் அத்தியாவசியமாக வெளியே செல்வதாக இருந்தாலும், முக கவசம் அணிந்து பாதுகாப்பாக பயணம் செய்யுங்கள்.

Image Courtesy: MSS NEWS 24X7

More from DriveSpark

Article Published On: Tuesday, June 8, 2021, 16:52 [IST]
English summary
Politician Conducts Road Show In Uttar Pradesh: 24 Vehicles Seized. Read in Tamil
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+