Just In
- 14 min ago நடிகர் தனுஷ் ஓட்டு போட வந்த காரின் விலை என்ன தெரியுமா? இவ்வளவு காஸ்ட்லியான காரா இது?
- 1 hr ago இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
- 1 hr ago தமிழ்நாட்டிற்கு அடித்த ஜாக்பாட்! யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் டாடா நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு!
- 1 hr ago இந்த விஷயத்தில் மாருதி காரை நிறைய பேர் கண்டு கொள்வது இல்ல! ஹூண்டாய் காரை வாங்குவதற்கு காரணம் என்னவா இருக்கும்?
Don't Miss!
- News மோடி பற்றி வந்து விழுந்த கேள்வி.. டக்கென கையெடுத்து கும்பிட்டு உதயநிதி ஸ்டாலின் சொன்ன வார்த்தை!
- Finance 290% லாபம் தந்த கட்டுமான நிறுவனம்.. விஜய் கேடியா விற்பனை செய்த பங்குகளை வாங்கலாமா..!!
- Movies கடமையை செஞ்சிட்டேன்.. எங்களை செய்யாம இருங்க.. வாக்களித்த பின் பிரதீப் ஆண்டனி அதிரடி ட்வீட்
- Lifestyle குரு பகவானால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
- Technology எகிறியது மவுசு.. ரூ.5000 டிஸ்கவுண்ட் உடன்.. மீண்டும் விற்பனைக்கு வந்த Motorola போன்.. என்ன மாடல்?
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
புத்தம் புதிய விமானம் மூலம் சென்னை வந்த குடியரசு தலைவர்... இந்த விமானத்தின் பின்னால் இவ்ளோ தகவல்களா?
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பயன்படுத்திய புத்தம் புதிய விமானம் பற்றிய வியக்க வைக்கும் தகவலை இந்த பதிவில் காணலாம்.
ஆந்திரா மாநிலத்தில் உள்ள திருப்பதி திருமலை கோவிலுக்கு செல்வதற்காக நமது நாட்டின் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று விடியற்காலை தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். விமான நிலையத்தை விட்டு வெளியேறாமலேயே ராணுவ விமானத்தின் மூலம் அவர் திருப்பதிக்கு சென்றார். இதற்காக தலைநகர் டெல்லியில் இருந்து வருவதற்காக அவர் ஏர் இந்தியா ஒன் - பி777 விமானத்தைப் பயன்படுத்தினார்.
இந்த விமானம் குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த், துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு மற்றும் பிரதமர் மோடி ஆகியோரின் பயன்பாட்டிற்காக பிரத்யேகமாக வாங்கப்பட்ட சிறப்பு விமானம் ஆகும். விரைவில் இந்த விமானங்கள் நாட்டின் முக்கிய பிரமுகர்களுக்கும் (விவிஐபி) பயன்படுத்தப்பட இருக்கின்றது.
இந்த புதிய தலைமுறை விமானத்தை பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கும் விதமாகவே குடியரசு தலைவர் இன்று திருப்பதி ஏழுமலையான் கோயில் தரிசனைத்தைச் செய்கிறார். முன்னதாக, பயன்பாட்டிற்கு அர்பணிக்கும் விதமாக தலைநகர் டெல்லியில் உள்ள விமான நிலையத்தில் வைத்து விமானத்தை மலர் தூவி வரவேற்றார்.
முன்னதாக பிரதமர் உட்பட முக்கிய தலைவர்களின் பயணங்களுக்காக பி747 ரக விமானங்களேப் பயன்படுத்தப்பட்டு வந்தன. இதற்கு பதிலாகவே தற்போது புதிய தலைமுறை போயிங் 777 விமானங்கள் களமிறக்கப்பட்டிருக்கின்றன. இது உலகின் வல்லாதிக்க தலைவர்கள் பயன்படுத்தி வரும் பாதுகாப்ப நிறைந்த விமானங்களைக் காட்டிலும் அதிக பாதுகாப்பு மற்றும் சொகுசு வசதிகளைக் கொண்ட விமானம் ஆகும்.
இதனையேப் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் விதமாகவே குடியரசு தலைவர் தற்போது இந்த விமானத்தைப் பயன்படுத்தியிருக்கின்றார். இந்த விமானம் பி747-400 விமானத்தைக் காட்டிலும் அதிக ரேஞ்ஜை வழங்கக் கூடிய விமானமாக இருக்கின்றது. தொடர்ந்து, பல்வேறு சொகுசு வசதிகளை மிக தாராளமாக வழங்கக்கூடிய வகையிலும் அது காட்சியளிக்கின்றது. குறிப்பிட்டு கூற வேண்டுமானால் பறக்கும் சொகுசு அரண்மனையைப் போன்று இந்த புதிய விமானம் இருக்கும்.
மேலும், இந்த விமானம் வானத்தில் பறக்கும்போது பிற விமானங்களைப் போல் அதிக ஒலியையும் எழுப்பாது. இத்தகைய சிறப்பு விமானத்தையே மிக சமீபத்தில் அமெரிக்க நிறுவனத்திடம் இருந்து இந்தியா பெற்றது. இதனையே தற்போது குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்திருக்கின்றார்.
எதிர்காலத்தில் இந்த விமானங்களையே குடியரசு தலைவர் மற்றும் பிரதமர் மோடி உள்ளிட்டோர் அரசு முறை உள் நாடு மற்றும் வெளிநாட்டு பயணங்களுக்கு பயன்படுத்த இருக்கின்றனர். இவர்களுடன் சில குறிப்பிட்ட விவிஐபிக்களின் பயணங்களுக்கும் இந்த விமானம் விரைவில் பயன்படுத்தப்பட இருக்கின்றது.
இந்த விமானங்கள் அதிக பாதுகாப்பு திறன் கொண்டவை என்பது குறிப்பிடத்தகுந்தது. அதாவது, தற்போது வாங்கப்பட்டிருக்கும் இந்த புதிய விமானங்களில் அகச்சிவப்பு மற்றும் மின்னணு போர் எதிர்ப்பு கவசங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இத்துடன், ஏவுகணை போன்றவற்றை முன்கூட்டியே கண்டறிந்து அதன் தாக்கத்தில் இருந்து தப்பிக்கின்ற வகையிலான திறனைப் பெற்றிருக்கின்றது.
Image Source: PresidentOfIndia/Twitter
இதற்காக எஸ்பிஎஸ் எனப்படும் சுய பாதுகாப்பு அறைகள் விமானத்தில் நிலை நிறுத்தப்பட்டிருக்கின்றன. இத்தகைய வசதிக் கொண்ட இரு விமானங்கள் சுமார் 190 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் வாங்கப்பட்டிருக்கின்றன. பிரதமர் மற்றும் குடியரசு தலைவர்களின் பாதுகாப்பு நலனைக் கருத்தில் கொண்டு இந்த விமானங்கள் வாங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது.
-
மஹிந்திராவோட இந்த புதிய காரை எல்லாரும் லட்டு மாதிரி அள்ளிட்டு போக போறாங்க.. புதிய டீசர் என்ன சொல்லுது?..
-
நாசாவே அசந்து போகும் முக்கிய கருவியை உருவாக்கிய இஸ்ரோ! இனி உலகமே நம்ம கிட்ட தான் இந்த ஐடியாவை கேட்கும்!
-
இங்கே வெயில் பொளக்குது... துபாயில் செம மழை!! வறண்டு கிடக்கும் இண்டர்நேஷ்னல் ஏர்போர்ட்டை இப்போது பாருங்க!