Just In
- 1 hr ago இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- 7 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- 7 hrs ago உத்தர பிரதேசத்தை இந்த விஷயத்தில் தமிழ்நாடு முந்த இன்னும் பல காலம் ஆகும்!! மாநில அரசு கொஞ்சம் வேகமா செயல்படனும்
- 10 hrs ago ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
Don't Miss!
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
சுங்க சாவடியில் கார்டு பயன்படுத்தி பணம் செலுத்தியவரிடம் ரூ.87,000 திருட்டு... எச்சரிக்கை..!!
எச்சரிக்கை: சுங்க சாவடியில் கார்டு பயன்படுத்தி பணம் செலுத்தியவரிடம் ரூ.87,000 திருட்டு..!!
சுங்க சாவடியில் டெபிட் கார்ட் மூலம் கட்டணம் செலுத்தப்பட்ட சில மணி நேரங்களில், அதில் இருந்து ரூ.87 ஆயிரம் திருடப்பட்ட சம்பவம் இந்தியளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மஹாராஷ்டிராவின் ஒரு பகுதியில் இருந்து பூனேவிற்கு திரும்பிக்கொண்டு இருந்தார் தர்ஷன் படேல். இடையில் கலாபூர் என்ற இடத்தில் சுங்க சாவடிக்காக கட்டணம் செலுத்த டெபிட் கார்டை பயன்படுத்தியுள்ளார்.
ரூ.230 சுங்க கட்டணத்தை டெபிட் கார்டு மூலம் செலுத்தி விட்ட அவர் அங்கு இருந்து புறப்பட்டு மீண்டும் பூனேவை நோக்கி காரை ஓட்டி சென்றார்.
இரண்டு மணி நேரங்களுக்கு பிறகு அவரது கைப்பேசியில் குறுந்தகவல் ஒன்று வந்துள்ளது. அதில் டெபிட் கார்டு மூலம் ரூ.20,000 எடுக்கப்பட்டதாக தகவல் வந்திருந்தது.
இதை படித்து அதிர்ச்சியில் உறைந்த போன தர்ஷன் பட்டேலுக்கு தொடர்ந்து மேலும் 6 குறுந்தகவல்கள், அனைத்து பண பரிமாற்றம் சம்பந்தப்பட்ட தகவல்கள்.
கலாபூர் சுங்கச் சாவடியில் மாலை 6.23 மணிக்கு பணம் செலுத்திய பிறகு, தர்ஷன் படேல் அந்த டெபிட் கார்டை எங்கும் பயன்படுத்த இல்லை.
ஆனால் அதே நாளில் இரவு 8.34 மணிக்குள் ரூ.87,000 வரை டெபிட் கார்டு மூலம் பயன்படுத்தியதாக தகவல்கள் வந்துள்ளன.
அதிர்ச்சியில் மூழ்கிப்போன தர்ஷன் படேல், தனது வங்கி கிளையை அணுகி, இந்த சம்பவம் குறித்த அதிகாரிகளுக்கு தெரிவித்தார். அதை தொடர்ந்து இந்த மோசடி பற்றி காவல்நிலையத்தில் எழுத்துபூர்வமாக புகார் கொடுத்தார்.
தர்ஷன் படேல் தனது புகாரில் "எனது டெபிட் கார்டு கடவு எண்ணை எப்போதும் நானே தான் பயன்படுத்துவேன். அதையும் தாண்டி என்னுடைய கடவு எண் திருடப்பட்டு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த புகாரில், கலாபூரில் படேல் சுங்க கட்டணம் செலுத்திய சாவடி, சாலையில் இருந்து கட்டணம் செலுத்தும் பகுதி சிறிது உயரமாக இருந்தள்ளது.
அந்த இடத்தின் மேல் சிசிடிவி கேமராவும் இருந்துள்ளது. அதன் மூலம் தனது கடவு எண் திருடப்பட்டு இருக்கலாம் என படேல் சந்தேகிக்கிறார்.
செப்டம்பர் 9ம் தேதி நடைபெற்ற இந்த சம்பவத்திற்கு 11ம் தேதி தான் பண பரிமாற்றம் குறித்த மின்னஞ்சல் வந்துள்ளது.
இதற்கிடையில் கார்டு பயன்படுத்திய நாட்களில் எந்தவிதமான OTP கேட்டு குறுந்தகவல் வரவில்லை. அதனால் இந்த மோசடியில் OTP பயன்படுத்தப்பட்டு பண பரிமாற்றம் நடக்கவில்லை என்று தெரியவருகிறது.
இந்த வழக்கை விசாரித்து வரும் பூனே நகர காவலர்கள், சம்பவம் நடைபெற்ற தினத்தில் சிசிடிவி மூலம் தான் கடவு எண் திருடப்பட்டு இருக்க வேண்டும் என்று கருதுகிறார்கள்.
இதுதவிர டெபிட் கார்டு கடவு எண்களை திருட ஸ்கிம்மிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்ற ரீதியிலும் இதற்கான விசாரணையை பூனே போலீசார் தொடங்கியுள்ளனர்.
-
ரூ6.13 லட்சம் விலை, 19 கி.மீ மைலேஜ் தரும் இந்த காரை வாங்க லைன் நின்னாலும் உடனே கிடைக்காது! ஏன் தெரியுமா?
-
தலைக்கு மேல ஊட்டியையே தூக்கி வச்ச மாதிரி இருக்கும்! டிராஃபிக் போலீசாருக்கு ஏசி ஹெல்மெட் வந்தாச்சு!
-
இந்தியால ஒரு ஃபோக்ஸ்வேகன் கார் இந்தளவிற்கு சேல்ஸ் ஆகுதா! மாருதிக்குலாம் இந்நேரம் குளிர் காச்சலே வந்திருக்கும்!