Just In
- 3 hrs ago
ஐஆர்சிடிசில பஸ் டிக்கெட் புக் பண்ணா இவ்வளவு லாபமா? எப்படி பண்ணணும் தெரியுமா?
- 4 hrs ago
டாடாவிற்கு சரியான போட்டி தயார்... இந்த மஹிந்திரா எலக்ட்ரிக் காரை போட்டி போட்டு புக் பண்றாங்க!!
- 6 hrs ago
எந்த ஸ்கூட்டரிலும் இவ்ளோ பெரிய-அகலமான டயரை பார்க்க முடியாது.. சொன்னபடியே விற்பனைக்கு வந்தது ஸும் ஸ்கூட்டர்!
- 6 hrs ago
பெரிய பெரிய ஜாம்பவான்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி நம்பர் 1 இடத்தை பிடித்த டொயோட்டா! உலகின் முதல் இடம்!
Don't Miss!
- News
ஆளுநர் அளித்த தேநீர் விருந்தில் கலந்து கொண்டது அரசியல் பின் வாங்கலா? முதல்வர் மு.க ஸ்டாலின் பதில்
- Sports
உலக கிரிக்கெட் வரலாற்றில் புது முயற்சி.. பயிற்சியாளர் விசயத்தில் பாக். ஏற்பாடு.. ஆப்ரிடி எதிர்ப்பு
- Finance
அதானி குழுமத்திற்கு ஜாக்பாட் நியூஸ்.. அபுதாபி நிறுவனம் ரூ.3200 கோடி முதலீடு செய்ய திட்டம் !
- Movies
பேயாட்டம் ஆடிய காஜல் அகர்வால்.. கருங்காப்பியம் டிரைலர்.. மிரண்டு போன விஜய்சேதுபதி!
- Lifestyle
February Horoscope 2023: பிப்ரவரி மாசம் இந்த ராசிக்காரங்க ரொம்ப கஷ்டப்பட போறாங்க.. உங்க ராசி இதுல இருக்கா?
- Technology
Oppo: வெயிட்டான கேமரா செட்டப்.. கதகளி ஆடப்போகும் புதிய ஒப்போ போன்.. பிப்.3-ல் அறிமுகம்!
- Travel
ரயில் பயணிகளின் கவனத்திற்கு – சுவையான உணவுகளுடன் திருத்தப்பட்ட IRCTCயின் மெனு!
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
போலீஸ் உங்கள் நண்பன் என்பதை தப்பா புரிஞ்சிக்கிட்டார் போல!! ஹெல்மெட் அணியாததால் இணையத்தில் வைரலான வாகன ஓட்டி...
ஹெல்மெட் அணியுங்கள்... ஹெல்மெட் அணியுங்கள் என்று நாடு முழுவதும் போலீஸார் கடந்த பல வருடங்களாக கூக்குரலிட்டு வருகின்றனர். அத்துடன் அபராதங்கள் விதிப்பதற்கும் அவர்கள் மறப்பதில்லை. சமீபத்தில் நமது சென்னையில் கூட 2-வீலர்களில் பின் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம் எனவும், லிஃப்ட் கொடுப்பவர்கள் அவர்களுக்கும் ஹெல்மெட்டை கொடுக்க வேண்டும் அல்லது அவர்களுக்கும் சேர்த்து அபராதம் விதிக்கப்படும் எனவும் சில கடுமையான விதிமுறைகளை கொண்டுவந்தது.
இதன் விளைவாக ஹெல்மெட் அணிந்து பயணம் செய்யும் இருசக்கர வாகன ஓட்டிகளின் எண்ணிக்கை சமீப காலங்களில் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. என்றாலும், ஹெல்மெட்டை புறக்கணிப்பவர்கள் இப்போதும் இருக்க தான் செய்கின்றனர். அத்தகைய விதி மீறுபவர்களை அடையாளம் காணவே ஒவ்வொரு சிக்னலுக்கும் சிசிடிவி கேமிராக்களை போலீஸார் பொருத்தியுள்ளனர். இந்த கேமிராக்கள் போக்குவரத்து போலீஸாரின் வேலையை மிகவும் எளியதாக்கி உள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

ஹெல்மெட் அணியாதது மட்டுமின்றி, அதிவேகமாக பயணம் செய்வது, நோ எண்ட்ரியில் நுழைவது உள்பட சாலை போக்குவரத்து விதிகளை மீறிவோரை அடையாளம் காணுவதற்கு பயன்படுத்தப்படுகின்ற இந்த கேமிராக்கள் மூலமாக வாகன ஓட்டிகளுடன் எந்தவொரு நேரடி தொடர்புமின்றி, நேரடியாக மெயிலின் மூலமாக அபராத செல்லானை போலீஸார் அனுப்பி விடுகின்றனர். அதாவது போலீஸாரின் இந்த நடவடிக்கை மற்றும் அபராத பண பரிவர்த்தனை அனைத்தும் இணையத்திலேயே நடந்து முடிந்துவிடுகின்றன.
சில விதிமீறல்களை, மற்றவர்களும் விழிப்புணர்வு அடைய வேண்டும் என்பதற்காக சமூக வலைத்தளங்களிலும் சில நேரங்களில் போலீஸார் பதிவிடுகின்றன. இவ்வாறு பதிவிடப்படும் பதிவுகள் சுவாரஸ்யமான விஷயங்களால் சில சமயங்களில் வைரலாகி உள்ள நிகழ்வுகளும் அரங்கேறியுள்ளன. சமீபத்தில் கூட ஹெல்மெட் அணியாமல் சென்ற இருசக்கர வாகன ஓட்டியின் பைக்கை மட்டும் ஸூம் செய்து போலீஸார் சமூக வலைத்தளங்களில் பதிவிட, அதனை கண்ட சம்மந்தப்பட்ட வாகன ஓட்டி "முகத்தை காட்டவில்லையே... நான் ஹெல்மெட் அணியவில்லை என்பதற்கு என்ன ஆதாரம்?" என திருப்பி கேள்வி எழுப்பினார்.
அதற்கு உடனே அந்த போலீஸார் ஹெல்மெட் அணியாத அவரது முழு படத்தையும் வெளியிட, அந்த நிகழ்வு அந்த சமயத்தில் இணையத்தில் வைரலானது. அதேபோன்று தான் தற்போது புனேவில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. ராயல் என்பீல்டு பைக்கில் சென்ற ஓர் வாகன ஓட்டி ஹெல்மெட் அணியாமல் இருந்துள்ளார். கேமிரா மூலம் அவரை அடையாளம் கண்ட போலீஸார் வழக்கம்போல் அபராத செல்லானை அனுப்பி வைத்துள்ளனர். அதனை கண்ட மெல்வீன் செரியன் என பெயர் கொண்ட அந்த வாகன ஓட்டி டுவிட்டரில் புனே போலீஸாரை டேக் செய்து நன்றி தெரிவித்து ஓர் பதிவு போட்டுள்ளார்.
நன்றி எதற்கென்றால்... போலீஸார் அனுப்பிய சிசிடிவி கேமிரா படத்தில் தான் அழகாக தெரிவதாக மெல்வீன் செரியன் குறிப்பிட்டுள்ளார். மேலும், அபராத தொகையை செலுத்துவதாகவும் அந்த பதிவில் தெரிவித்துள்ளார். இந்த டுவிட்டர் பதிவினை பின்னர் கண்ட புனே போலீஸார் மெல்வீனின் நன்றியை ஏற்று கொண்டதுடன், "நீங்கள் அணிந்திருக்கும் கருப்பு நிற ஜாக்கெட்டிற்கு கருப்பு நிற ஹெல்மெட் சூப்பராக இருக்கும்" என்று தங்களது பரிந்துரையையும் தெரிவித்துள்ளனர்.
புனே போலீஸாரின் இந்த பதிவிற்கு பின்னர் பதிலளித்த மெல்வீன் செரியன் ரூ.500 அபராதம் செலுத்தப்பட்டதை தெரியப்படுத்தும் படத்துடன், நீங்கள் பரிந்துரைத்தது போல் சிறப்பான கருப்பு நிற ஹெல்மெட் ஒன்றை வாங்குவேன் என்று உறுதியளிக்கிறேன் என கூறியுள்ளார். அத்துடன், சமூக வலைத்தளங்கள் என்னை பிரபலமாக்கி உள்ளன என்றும், உடற்பயிற்சி ஆலோசகரான தன்னை நேற்றில் இருந்து மட்டும் 5-6 வாடிக்கையாளர்கள் இந்த பதிவுகளின் வாயிலாக சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
மெல்வீன் செரியன் & புனே போலீஸார் இடையேயான இந்த உரையாடலுக்கு நெட்டிசன்கள் பலர் தங்களது கருத்துகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக, பலர், "அழகிற்காக பார்க்காதீர்கள்... ஹெல்மெட் என்பது உயிர் கவசம்" என தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். ஆகையால் சாலை விதிகளை மீறி இவ்வாறு அபராதங்களை செலுத்துவதற்கு பதிலாக, சாலை விதிகளை முறையாக பின்பற்றுவது சிறந்தது. அதையே போலீஸாரும், அரசாங்கமும் வேண்டுகிறது.
-
ரிஷப் பண்ட்டை காப்பாற்றியவர்களுக்கு இவ்ளோ பெரிய பரிசா! நாடே இன்னைக்கு அவங்களை பத்திதான் பேசிகிட்டு இருக்கு!
-
இன்னும் என்ன யோசனை... ரொம்ப நாளாக எதிர்பார்த்த டீசல் டொயோட்டாவிற்கான புக்கிங் மீண்டும் தொடங்கியிருக்கு!
-
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!