ஜப்பானுடன் கை கோர்க்கும் பஞ்சாப் மாநில அரசு... எதற்காக தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..!

மாநிலத்தில் மின் வாகனங்களை களமிறக்குவதற்காக ஜப்பான் நாட்டின் மின்சார வாகன உற்பத்தி நிறுவனத்துடன் பஞ்சாப் அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜப்பானுடன் கை கோர்க்கும் பஞ்சாப் மாநில அரசு... எதற்காக தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..!

எரிபொருள் வாகனங்களால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு தீர்வு காணும் விதமாக மின் வாகனங்களின் பயன்பாட்டை நாடு முழுவதும் ஒவ்வொரு மாநில அரசும் ஊக்குவித்து வருகின்றன.

இதற்காக பல்வேறு சிறப்பு சலுகைகளை அறிவித்து வரும் அரசுகள், கூடுதலாக மின்வாகன உற்பத்தி மீதான முதலீட்டை ஊக்குவிக்கும் முயற்சிகளிலும் களமிறங்கியுள்ளது.

ஜப்பானுடன் கை கோர்க்கும் பஞ்சாப் மாநில அரசு... எதற்காக தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..!

அந்தவகையில் பஞ்சாப் அரசு, மாநிலம் முழுவதும் மின்சார வாகனங்களை களமிறக்குவதற்காக ஜப்பான் நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் ஜெட்ரோ என்ற நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது. இந்நிறுவனம், ஜப்பான் அரசாங்கத்துடன் தொடர்புடைய ஓர் அமைப்பாகும்.

ஜப்பானுடன் கை கோர்க்கும் பஞ்சாப் மாநில அரசு... எதற்காக தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..!

மேலும், இது ஜப்பானிய நிறுவனங்களுக்கு பிற நாடுகளிடம் இருந்து வர்த்தகம் மற்றும் முதலீடுகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையிலும் செயல்பட்டு வருகின்றது.

ஜப்பானுடன் கை கோர்க்கும் பஞ்சாப் மாநில அரசு... எதற்காக தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..!

இதுமட்டுமின்றி, விரைவில் இந்தியாவிற்கான ஜப்பானிய தூதர் தலைமையில் நடைபெற உள்ள உச்சி மாநாட்டில் மிட்சுய், எஸ்.எம்.எல். இசுசு, மிட்சுபிஷி மற்றும் யன்மார் ஆகிய நிறுவனங்கள் கலந்துக் கொண்டு முதலீடு செய்ய இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனை, அம்மாநில கூடுதல் முதலீட்டு ஊக்குவிப்பு அதிகாரி வினி மஹாஜன் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஜப்பானுடன் கை கோர்க்கும் பஞ்சாப் மாநில அரசு... எதற்காக தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..!

தொடர்ந்து, மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துடன் இணைந்து வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் சிறந்து விளங்கும் மையத்தை அமைப்பதற்கான முயற்சிகளிலும் பஞ்சாப் அரசு ஈடுபட்டு வருகின்றது.

ஜப்பானுடன் கை கோர்க்கும் பஞ்சாப் மாநில அரசு... எதற்காக தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..!

இதுதவிர, மாநிலத்தில் எரிபொருள் வாகனங்களுக்கு முட்டுக்கட்டை போடும்விதமாக, மின்வாகன முதலீட்டை ஊக்குவிக்கும் முயற்சியிலும் அது ஈடுபட்டு வருகின்றது.

ஜப்பானுடன் கை கோர்க்கும் பஞ்சாப் மாநில அரசு... எதற்காக தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..!

முன்னதாக இதேபோன்று முதலீட்டை ஈர்க்கும்விதமாக தமிழக முதலமைச்சர் மற்றும் அரசு முக்கிய அதிகாரிகள் கொண்ட குழு வெளிநாடு சென்றதன் பயனாக 20,351 பேருக்கு புதிய வேலை வாய்ப்புகள் உருவாகின்ற சூழல் ஏற்பட்டுள்ளது.

ஜப்பானுடன் கை கோர்க்கும் பஞ்சாப் மாநில அரசு... எதற்காக தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..!

இதில், சீனாவை மையமாகக் கொண்டு இயங்கும் பிஒய்டி, ஏத்தர் எனர்ஜி, ஐடிசி பேப்பர் போர்டு, மிட்சுபா சிக்கால், ஸ்ரீவாரி எனர்ஜி சிஸ்டம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய உள்ளன.

புகைப்படங்கள் உதாரணத்திற்காக வழங்கப்பட்டவை

More from DriveSpark

Article Published On: Tuesday, December 3, 2019, 15:23 [IST]
English summary
Punjab Government In Talk With Japan To Launch EV Buses. Read In Tamil.
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+