Just In
- 42 min ago இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
- 1 hr ago சாதாரணமா பஸ்ஸில் பயணம் செய்தது இவ்ளோ பெரிய ஆளா... முகத்தை நல்லா உத்து பார்த்ததும் ஷாக் ஆன மக்கள்...
- 2 hrs ago சிட்ரோன், ஜீப் காரை வாங்கப்போறீங்களா? இப்ப போன பணத்தை மிச்சம் பண்ணலாம்! ஏப்30க்கு பிறகு காஸ்ட்லியாகிடும்!
- 3 hrs ago இது கார் இல்ல மிதக்கும் கப்பல்!! புதுசா வாங்கியிருக்கும் இந்த நடிகர் யாரென்று தெரிகிறதா?
Don't Miss!
- Sports IPL 2024 CSK : உங்களுக்கு வேற வேலையே இல்லையா.. நிம்மதியா இருக்க விடுங்க.. அடிக்க வந்த தோனி
- News இந்தியாவில் எந்த ஜாதி, மத மக்களிடம் அதிக தங்கம் இருக்கு தெரியுமா? டாப்பில் இவங்களா? முழு டேட்டா
- Lifestyle கேரளாவின் அடையாளங்களில் ஒன்றான இந்த குட்டி மாட்டின் பால்தான் உலகிலேயே சத்தான பாலாம் தெரியுமா?
- Movies பேயாட்டம்!.. கில்லி படத்தை பார்த்துட்டு தியேட்டரில் பெண்கள் பார்த்த வேலை.. பசங்களே மிரண்டுட்டாங்க!
- Finance ரூ.12,500 முதலீடு செஞ்சா ரூ. 1 கோடி கிடைக்குமா.. செம சான்ஸ்..! சூப்பர் திட்டம்.. மிஸ் பண்ணிடாதீங்க!
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
போலீஸ்னா இப்படித்தான் இருக்கணும்... வாகன ஓட்டிகளுக்கு அபராதம் இல்லை... அதற்கு பதில் என்ன தெரியுமா?
போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிப்பதற்கு பதிலாக, போலீசார் மேற்கொண்டுள்ள ஒரு முயற்சிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
உலகில் சாலை விபத்துக்களால் அதிக உயிர்களை பறிகொடுக்கும் நாடுகளில் ஒன்று இந்தியா. இங்கு ஒரு ஆண்டுக்கு சுமார் 1.50 லட்சம் பேர் சாலை விபத்துக்களால் உயிரிழப்பதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன. பெரும்பாலான வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதே இதற்கு மிக முக்கியமான காரணமாக உள்ளது.
எனவே வாகன ஓட்டிகள் அனைவரையும் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்ற வைக்கும் விதமாக புதிய மோட்டார் வாகன சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதில், போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராத தொகைகள் மிக கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளன. எனவே வாகன ஓட்டிகள் அனைவரும் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றுவார்கள் என மத்திய அரசு நம்புகிறது.
இதன் மூலம் இந்தியாவில் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறையும் எனவும் மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது. இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில், கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் புதிய அபராத தொகைகள் அமலுக்கு கொண்டு வரப்பட்டன. ஆனால் அபராத தொகைகள் மிக கடுமையாக உள்ளதால் பல்வேறு மாநில அரசுகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
ஒரு சில மாநிலங்கள் புதிய அபராத தொகைகளை அமலுக்கு கொண்டு வருவதை நிறுத்தி வைத்துள்ளன. இன்னும் சில மாநிலங்கள் அபராத தொகைகளை குறைத்து விட்டன. மேலும் சில மாநிலங்கள் அபராத தொகைகளை குறைப்பது குறித்து பரிசீலித்து வருகின்றன. புதிய அபராத தொகைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மாநிலங்களில் தெலங்கானாவும் ஒன்று.
அங்கு புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு கொண்டு வரப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் தெலங்கானா மாநிலம் ரச்சகொண்டா போக்குவரத்து போலீசாரின் ஒரு நடவடிக்கைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிப்பதற்கு பதிலாக இலவச ஹெல்மெட்களை வழங்கும் முயற்சியை அவர்கள் கையில் எடுத்துள்ளனர்.
அத்துடன் மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ், இன்சூரன்ஸ் மற்றும் டிரைவிங் லைசென்ஸ் ஆகியவற்றை வாகன ஓட்டிகள் பெறுவதற்கான ஏற்பாடுகளையும் அவர்கள் செய்துள்ளனர். அத்துடன் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அதன் முக்கியத்துவம் குறித்து போக்குவரத்து போலீசார் கவுன்சிலிங்கும் கொடுக்கின்றனர்.
இதுகுறித்து ரச்சகொண்டா போலீஸ் கமிஷனர் மகேஷ் பகவத் கூறுகையில், ''அதிக அபராதம் செலுத்துவதற்கு பதிலாக ஹெல்மெட்களை வாங்கும்படி வாகன ஓட்டிகளுக்கு கவுன்சிலிங் கொடுக்கிறோம். ஒரு நல்ல ஐஎஸ்ஐ தர ஹெல்மெட்டின் விலை சுமார் 800 ரூபாய். ஆனால் ஹெல்மெட் அணியாவிட்டால் 1,000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்.
எனவே அபராதம் செலுத்துவதற்கு பதிலாக ஹெல்மெட் வாங்கி அணியும்படி வாகன ஓட்டிகளை கேட்டு கொள்கிறோம். அதேபோல் மாசு கட்டுப்பாட்டு சான்றிதழுக்கான செலவு வெறும் 50 ரூபாய் மட்டுமே. ஆனால் புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி இதற்கான அபராதம் கடுமையானது. எனவே உங்கள் பணத்தை அபராதங்களில் இழக்க வேண்டாம் என விதிமுறைகளை மீறுபவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கிறோம்.
அத்துடன் அதற்கு பதிலாக அந்த பணத்தை அனைத்து ஆவணங்களையும் சரியாக வைத்து கொள்ள பயன்படுத்தும்படியும் கேட்டு கொள்கிறோம். வாகன ஓட்டிகளிடம் இருந்து அபராதம் வசூலிக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கம் கிடையாது. அவர்களின் பாதுகாப்பிற்காக அவர்களை விதிகளை கடைபிடிக்க வைக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்'' என்றார்.
இதனிடையே ஆர்டிஓ அலுவலகத்துடனும், போலீசார் கூட்டணி அமைத்துள்ளனர். இதன் மூலம் டிரைவிங் லைசென்ஸ் இல்லாத வாகன ஓட்டிகளுக்கு அதனை பெற ஏற்பாடு செய்யப்படுகிறது. ரச்சகொண்டா போலீசாரின் இந்த நடவடிக்கை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அத்துடன் பலரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.
-
இவரு நெனச்சா 10 ரோல்ஸ் ராய்ஸ் காரை ஒரே நேரத்துல இறக்க முடியும்! ஆட்டோவை ஓட்டிட்டு வந்தது அவ்ளோ பெரிய மனுசனா!!
-
ஃபார்ச்சூனரில் தலைவன் பதிப்பை அறிமுகம் செய்த டொயோட்டா.. பேருல மட்டுமல்ல மத்ததுலையும் இது தலைவன்தான்!
-
வெளிநாட்டுகாரன் எல்லாம் உஷாராகிட்டான் ! இந்த கம்பெனி வண்டியோட ஏற்றுமதி படுத்துக்கிச்சு!