Just In
- 1 hr ago இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- 1 hr ago வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- 2 hrs ago பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- 3 hrs ago பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
Don't Miss!
- News பிறந்ததேதி இடிக்குதே! எடப்பாடியை விட சசிகலா பெரியவரா? உதயநிதிக்கு பதில் கூறிய ஈபிஎஸ்க்கு புது தலைவலி
- Finance புதிய துறையில் அடியெடுத்து வைத்த கௌதம் அதானி.. இதுவும் குஜராத்துக்கு தான்..!!
- Sports அவங்க 2 பேசிட்டு இருந்தாங்க.. நான் குடுகுடுனு நடந்து வந்துட்டேன்.. அஸ்வினால் ஷாக்கான ராஜஸ்தான் அணி!
- Movies Baakiyalakshmi: சரியாயிடுச்சு.. மீண்டும் இணைந்த செழியன் -ஜெனி.. சாதித்த பாக்கியா!
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
முதல் முறையாக ரஃபேல் போர் விமானங்களை பயன்படுத்த திட்டம்... எப்போது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!!
ரஃபோல் போர் விமானங்கள் முதல் முறையாக காட்சிக்குள்ளாக இருக்கின்றன. எப்போது என்பது பற்றிய சிறப்பு தகவலை இப்பதிவில் காணலாம்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அதிகக் கட்டுப்பாடுகளுடன் இந்த வருடம் குடியரசு தினம் அனுசரிக்கப்பட இருக்கின்றது. எந்த வருடத்திலும் இல்லாத வகையில் நடப்பாண்டில் மிக அதிக கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்பட இருக்கின்றன. குறிப்பாக வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துகின்ற வகையிலான கட்டுப்பாடுகள் மிக தீவிரமாக காண முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதனை உறுதிப்படுத்துகின்ற வகையில் பல்வேறு சிறப்பு நிகழ்வுகளுக்கு அதிகாரிகள் தடை விதித்திருக்கின்றனர். மேலும், குறைந்தளவில் மட்டுமே பார்வையாளர்களை அனுமதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இன்னும் 3 நாட்களே இருப்பதால் இதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
ஒரு பக்கம் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தும் முயற்சியில் இருக்கும் அதிகாரிகள் மறு பக்கம் குடியரசு தினத்தை இதுவரை இல்லாத வகையில் சிறப்பானதாக மாற்ற வேண்டும் என்கிற முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், நடப்பாண்டில் நடைபெற இருக்கும் குடியரசு தின விழாவில் புதிதாக விமான பாதுகாப்பு படையில் இணைக்கப்பட்ட ரஃபேல் போர் விமானங்களைக் காட்சிப்படுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த ஆண்டு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடம் இருந்து 36 ரஃபோல் போர் விமானங்களை முழுமையாக கட்டமைக்கப்பட்ட நிலையில் மத்திய அரசு வாங்கியது. இதில், முதல் ஐந்து போர் விமானங்கள் கடந்த ஜூலை மாதம் இந்தியா வந்திறங்கின. இவற்றையே வரும் ஜனவரி 26ம் தேதி அன்று குடியரசு தின கொண்டாட்டத்தில் ஈடுபடுத்தப்பட திட்டமிடப்பட்டிருக்கின்றது.
நிகழ்வின்போது சில சாகச செயல்பாடுகளை இந்த விமானங்கள் மேற்கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதாவது, அதன் சிறப்பு திறன்களான செங்குத்தாக வானில் ஏறுவது, அதிக வேகத்தில் பறப்பது உள்ளிட்ட சாகசங்களில் இந்த விமானங்கள் ஈடுபடலாம் என தெரிகின்றது. இந்த விமானங்கள் குடியரசு தின கொண்டாட்டத்தில் ஈடுபடுவதை இந்திய விமானப்படை உறுதி செய்திருக்கின்றது.
அண்டை நாடுகளிடம் இருந்து நாளுக்கு நாள் அச்சுறுத்தல் அதிகமாகிய வண்ணம் இருக்கின்றது. இதனை மனத்தில் கொண்டும், நாட்டின் பாதுகாப்பைப் பலப்படுத்த வேண்டும் என்ற நோக்கிலும் இந்த விமானங்கள் வாங்கப்பட்டது குறிப்பிடத்தகுந்தது. இந்த ரஃபேல் போர் விமானங்கள் 4.5 தலைமுறையைச் சார்ந்தவையாகும்.
எதிரி நாட்டின் ரேடார்களில் சிக்காத வண்ணம் பல்வேறு தொழில்நுட்பங்களை இவ்விமானம் பெற்றிருக்கின்றது. அதாவது, டெல்டா விங் எனும் இறக்கை அமைப்பை இது பெற்றிருக்கிறது. இத்துடன் எதிரிகளை துள்ளியமாக கண்டுபிடித்து இலக்கை குறி வைத்து தாக்கும் திறன் இந்த விமானத்திற்கு கொடுக்கப்பட்டிருக்கின்றது.
இதுமட்டுமின்றி பிற ஏவுகனை தாக்குதல்களில் இருந்தும் தப்பித்துக் கொள்ளும் சுய பாதுகாப்பு திறனையும் ரஃபேல் போர் விமானம் பெற்றிருக்கின்றது. தற்போது சீன படையில் பயன்படுத்தப்பட்டு வரும் ஜே-20 விமானத்தின் திறனுக்கு சற்றும் சலைத்தது அல்ல இந்த ரஃபேல் போர் விமானங்கள். எனவேதான், சீனாவின் அச்சுறுத்தலை மிக சுலபமாக இந்தியாவால் இவ்விமானங்களைக் கொண்டு சமாளிக்க முடியும் என்றும் நம்பப்படுகிறது.
-
ஒரு புறாவுக்கு இவ்வளவு பெரிய அக்கப்போரா!! இலவச பஸ் டிக்கெட் இருந்தும் பெரிய தொகையை செலவழித்த பாட்டி - பேத்தி!
-
மெழுகு சிலை மாதிரி இருக்காங்க... இவங்க அந்த படத்துல நடிச்சவங்களா... வீடியோவை கண் இமைக்காமல் பார்க்கும் இளசுகள்
-
இந்தியாவுக்கு எதாவது பாதிப்பா? ஒரு சின்ன மிஸ்டேக் எங்க கொண்டுவந்து நிறுத்தி இருக்கு!!