Just In
- 19 min ago சுஸுகி வி-ஸ்டார்ம் 800டிஇ பைக் இந்தியாவில் அறிமுகம்! இந்த பைக்க வாங்குற காசுல 2 மாருதி ஆல்டோ காரை வாங்கிடலாம்!
- 1 hr ago பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- 1 hr ago எலெக்ட்ரிக் ஸ்கூட்டரா இல்ல உல்லாச கப்பலா! இந்தியாவே காத்து கிடக்கும் வண்டிக்கு புக்கிங் தொடங்கியது!
- 3 hrs ago இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
Don't Miss!
- Lifestyle உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. வருகிற ஏப்ரல் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
- News மீண்டும் மீண்டுமா! அரவிந்த் கெஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்யக்கோரி டெல்லி ஹைகோர்ட்டில் மனுத்தாக்கல்
- Movies Aadujeevitham: முதல் நாளிலேயே பட்டையை கிளப்பிய ஆடு ஜீவிதம் வசூல்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!
- Finance TATA Sons நிறுவனத்தில் ஒரேயொரு பங்கு வைத்திருக்கும் மர்ம நபர்? யார் இவர்?! JRD டாடா-வுடன் நெருக்கம்!
- Sports 4,4,6.. உங்க ஸ்பின்னெல்லாம் என்னிடம் எடுபடாது.. கேகேஆர் அணியின் அஸ்திவாரத்தை ஆட்டிய கேமரூன் க்ரீன்!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
காங்கிரஸ் அலுவலகத்திற்கு எதிரே ரபேல் போர் விமானம்... நாட்டின் கவனத்தை ஈர்த்ததற்கு காரணம் இதுதான்...
காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு எதிரே ரபேல் போர் விமான மாதிரி நிறுவப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மிகவும் பரபரப்பாக விவாதிக்கப்பட்ட விஷயம் ரபேல் போர் விமான ஒப்பந்தம். குறிப்பாக நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரம் அனல் பறக்க விவாதிக்கப்பட்டது.
காங்கிரஸ் தலைமையிலான அரசு செய்த ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டு, அதிக விலை கொடுத்து ரபேல் போர் விமானங்களை வாங்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு புதிய ஒப்பந்தத்தை செய்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
அத்துடன் ரபேல் போர் விமானங்களை வாங்குவதில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளதாகவும், போதிய அனுபவம் இல்லாத தொழிலதிபர் அனில் அம்பானியின் பாதுகாப்பு நிறுவனத்திற்கு இது நன்மை பயக்கும் எனவும் அவர் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரங்களில் பேசினார்.
ஆனால் இவை எதுவும் மக்கள் மத்தியில் எடுபட்டதாக தெரியவில்லை. நாடாளுமன்ற தேர்தலில் பாஜக மீண்டும் அமோக வெற்றி பெற்று, நரேந்திர மோடி தொடர்ந்து 2வது முறையாக பிரதமர் பொறுப்பை ஏற்றுள்ளார்.
இந்த சூழலில் தலைநகர் டெல்லியில் உள்ள ஏர் சீப் மார்ஷல் பிஎஸ் தனோயாவின் வீட்டிற்கு வெளியே ரபேல் போர் விமானத்தின் மாதிரி தற்போது நிறுவப்பட்டுள்ளது. மத்திய டெல்லி பகுதியில் உள்ள அக்பர் சாலையில்தான் ஏர் சீப் மார்ஷல் பிஎஸ் தனோயா வசித்து வருகிறார்.
இவரது வீட்டிற்கு நேர் எதிரேதான், காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகம் இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றுள்ளதாக காங்கிரஸ் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்த நிலையில் இந்த விவகாரம் கவனம் ஈர்த்துள்ளது.
ஆனால் பிஎஸ் தனோயாவின் வீட்டின் முன்பு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே ரபேல் போர் விமான மாதிரி நிறுவப்பட்டு விட்டதாக இந்திய விமானப்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆரம்பத்தில் இருந்தே பல்வேறு சர்ச்சைகளை எழுப்பினாலும், ரபேல் இந்தியாவிற்கு தேவையான ஒன்றுதான்.
பிரான்ஸிடம் இருந்து மொத்தம் 36 ரபேல் போர் விமானங்களை வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. இதில், முதல் ரபேல் போர் விமானம் வரும் செப்டம்பர் மாதத்தில் இந்திய விமானப்படை வசம் ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன் வரும் 2022ம் ஆண்டிற்குள்ளாக 36 ரபேல் போர் விமானங்களும் இந்தியாவிற்கு வந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது. முந்தைய அரசில் பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமன் இந்த தகவலை கடந்த சில மாதங்களுக்கு முன் பாராளுமன்றத்தில் உறுதி செய்தார்.
ஏற்கனவே குறிப்பிட்டபடி, எதிரி நாடுகளிடம் இருந்து அச்சுறுத்தல் நிலவி வரும் சூழலில், ரபேல் போர் விமானங்கள் இந்தியாவின் பாதுகாப்பிற்கு தேவையான ஒன்றுதான். ரபேல் போர் விமானங்களை பிரான்ஸை சேர்ந்த டசால்ட் ஏவியேஷன் நிறுவனம் தயாரித்து வருகிறது.
டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் ரபேல், ட்வின்-ஜெட் போர் விமானம் ஆகும். ரபேல் போர் விமானத்தில், இரண்டு எம்88-2 இன்ஜின்கள் பொருத்தப்பட்டுள்ளன. SNECMA நிறுவனம் ரபேல் விமானங்களுக்கான இன்ஜினை தயாரித்துள்ளது.
ராணுவ போர் விமானங்களுக்கான இன்ஜின்கள் மட்டுமின்றி, வர்த்தக ரீதியிலான விமான இன்ஜின்களையும் இந்நிறுவனம் தனியாகவோ அல்லது கூட்டாகவோ இணைந்து தயாரிக்கிறது. அத்துடன் ராக்கெட் இன்ஜின்களையும் இந்நிறுவனம் உற்பத்தி செய்கிறது.
ரபேல் போர் விமானத்தின் நீளம் 15.30 மீட்டர். அகலம் 10.90 மீட்டர். உயரம் 5.30 மீட்டர். ஒரு முறை முழுமையாக எரிபொருள் நிரப்பினால், ரபேல் போர் விமானம் 3,700 கிலோ மீட்டர்கள் வரை பயணம் செய்யும். எரிபொருள் தீர்ந்து விட்டால் தரையிறங்க தேவையில்லை.
மற்றொரு விமானம் மூலமாக வானிலேயே எரிபொருள் நிரப்பி கொள்ளும் வசதியை ரபேல் போர் விமானம் பெற்றுள்ளது. ரபேல் போர் விமானங்கள் அதிகபட்சமாக மணிக்கு 2,130 கிலோ மீட்டர்கள் வேகத்தில் பயணிக்கும் திறன் பெற்றவை.
100 கிலோ மீட்டர்கள் தொலைவில் உள்ள 40 இலக்குகளை ஒரே நேரத்தில் கண்டறியும் மல்டி-டைரக்ஸனல் ரேடார் ரபேல் போர் விமானத்தில் வழங்கப்பட்டுள்ளது. அதே சமயம் எதிரி நாடுகளின் ரேடார் கண்களில் மண்ணை தூவி விடும் ஆற்றலையும் ரபேல் போர் விமானம் பெற்றுள்ளது.
எதிரிகளின் ரேடார் சிக்னல்களை 'ஜாம்' செய்யும் திறனுடைய ஸ்பெக்ட்ரா என்ற ஒருங்கிணைந்த பாதுகாப்பு உதவி அமைப்பு ரபேல் போர் விமானத்தில் வழங்கி விடும். எதிரி ஏவுகணைகள் அருகே நெருங்கினால் இது எச்சரிக்கை செய்யும்.
இவை அனைத்தையும் மீறி எதிரி ஏவுகணை, ரபேல் போர் விமானத்திற்கு மிக அருகே வந்து விட்டால், இது சிக்னல் அனுப்பும். பிரான்ஸ் விமானப்படை மற்றும் கப்பற்படை ஆகியவைகளின் பயன்பாட்டிற்காகவே ரபேல் போர் விமானங்கள் தயாரிக்கப்பட்டன.
ஆனால் தற்போது இவை வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்திய விமான படையை தவிர்த்து விட்டு பார்த்தால், எகிப்து விமான படை மற்றும் கத்தார் விமான படை ஆகிய அமைப்புகளும் ரபேல் போர் விமானங்களை பயன்படுத்துகின்றன.
-
எந்தவொரு பந்தாவும் இல்ல... பிரபல சீரியல் நடிகையின் புதிய கார்!! சிம்பிளா வந்து டெலிவிரி எடுத்துனு போய்ட்டாரு!
-
ஏப்.1ம் தேதி முதல் சுங்ககட்டணம் உயர்கிறது! எங்கு, எவ்வளவு உயர்கிறது தெரியுமா?
-
ரிசர்வ் பெட்டியில் கூட்டமா ஏறி டார்ச்சர் பண்ணுறாங்களா? இதை பண்ண சொல்லி ரயில்வே நிர்வாகமே சொல்லிடுச்சு