Just In
- 21 min ago தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- 1 hr ago அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- 1 hr ago ஆணுக்கு இணையா பந்தயத்துக்கு வரிசைக்கட்டி நின்ற பெண் பைக் ரேஸர்கள்!! போட்டி தீயாய் இருந்துச்சு... முழு வீடியோ!
- 3 hrs ago மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
Don't Miss!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Movies Rajinikanth: வாவ் சூப்பர் கெட்டப்பில் ரஜினி.. தலைவர் 171 டைட்டில் ரிலீஸ்.. தேதியை அறிவித்த லோகேஷ்!
- News தமிழ்நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு சம்பளம் எவ்வளவு.. இவ்வளவு சலுகைகளா? ஆச்சர்யமான தகவல்கள்
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
ஈஃபிள் டவரை மிஞ்சிய உலகின் உயரமான காஷ்மீர் ரயில்வே பாலத்திற்கு விரைவில் திறப்பு விழா..!!
உலகின் உயரமான காஷ்மீர் ரயில்வே பாலம் விரைவில் கட்டிமுடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈஃபிள் டவரை விட 30 மீட்டர் உயரத்தில் ஜம்மு காஷ்மீரில் கட்டப்பட்டு வரும் உலகின் மிக உயரமான வளைவு ரயில்வே பாலத்தின் கட்டமைப்பு பணிகள் 2019 ஜூன் மாதத்தில் நிறைவடையும் என கூறப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் கத்ரா மற்றும் பனிஹல் பகுதிகளுக்கு இடையே, உலகின் மிக உயரமான இரும்பு ரயில்வே பாலம் கட்டப்பட்டு வருகிறது.
செனாப் ஆற்றின் மேல் கட்டப்பட்டு வரும் இது, தரைமட்டத்தில் இருந்து சுமார் 359 மீட்டர் உயரத்தில் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது.
ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள ரெய்ஸி மாவடத்தின் கத்ரா மற்றும் பனிஹல் பகுதிகளுக்கு இடையே இந்த பாலத்தின் கட்டமைப்பு பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
2004ம் ஆண்டு தொடங்கப்பட்ட இதற்கான கட்டமைப்பு பணிகள் காற்றின் வேகம் அதிகமாக இருந்த காரணத்தினால் 2008 முதல் 2009 ஆண்டுகளில் நிறுத்தப்பட்டன.
காற்றின் வேகத்தை தெரியப்படுத்தும் தானியங்கி சமிக்ஞை அமைப்பு மற்றும் காற்றின் வேகத்தை அளக்கும் அனமீமீட்டர் போன்ற உபகரணங்கள் பொருத்தப்பட்ட பிறகு பணிகள் தொடங்கின
இதற்கு பிறகு ஒரு மணி நேரத்திற்கு 90 கி.மீ வேகத்தில் காற்று அடிக்கும் போது மட்டும் பணிகளை நிறுத்த முடிவு செய்யப்பட்டு, மீண்டும் பாலத்திற்கான கட்டமைப்பு பணிகள் தொடங்கி தற்போது வரை நடைபெற்று வருகின்றன.
பாலம் கட்டும் பணியில் உள்ள பொறியாளர் ஆர். ஆர். மாலிக் இந்த இரும்பு ரயில்வே பாலம் சுமார் 120 ஆண்டுகள் வரை வலிமையுடன் தாங்கி நிற்கும் என கூறுகிறார்.
மேலும் இந்த பாலத்தின் மீது ரயில்கள் ஒரு மணி நேரத்திற்கு 260 கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல முடியும் என்றும் பொறியாளர் ஆர். ஆர். மாலிக் தெரிவிக்கிறார்.
பாலத்தின் மீதுமட்டுமல்லாமல் செனாப் ஆற்றின் மறுபகுதியில் ரயில்கள் செல்வதற்கு 5.9 கி.மீ , 9.3 கி.மீ மற்றும் 13 கி.மீ நீளங்களில் மூன்று சுரங்க வழிப்பாதைகள் தயாராகி வருகின்றன.
இந்த சுரங்களை கட்டமைப்பது மிக சவாலான பணியாக உள்ளது.கொங்கண் ரயில்வே கட்டமைத்து வரும் பணிகளின் பாலங்களுக்கான துணைத்தூண் கட்டும் பணிகளும் மிக சவாலாக இருப்பதக இதில் பணியாற்றும் பொறியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த ரயில்வே பாதையில் பயணிக்கும் ரயில்கள் அனைத்தும் 80 சதவீதம் சுரங்க வழிப்பாதையில் தான் பயணிக்கும் என்று கூறுகிறார் இந்த கட்டமைப்பிற்கான திட்ட மேலாளர் எஸ்.எம். விஸ்வமூர்த்தி.
உதம்புரில் இருந்து பாரமுல்லாவை இணைக்கும் வகையில் செனாப் நதியின் மீது கட்டப்பட்டு வரும் இந்த இரும்பு பாலம் கட்டி முடிக்கப்பட்ட பின்னர் உலகின் மிக உயரத்தில் இருக்கும் வளைவு ரயில் பாலம் என்ற பெருமையைப் பெறும்.
கத்ரா- பனிஹல் இரும்பு வளைவு ரயில்வே பாலத்தில், 2019 இறுதியில் ரயில்களை இயக்கி சோதித்து பார்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
உலகின் உயரமான வளைவு இரும்பு ரயில்வே பாலம் என்ற பெயர் பெறப்போகும் இதன் மீது முதல் ரயில் உத்தம்பூர்- ஸ்ரீநகர் நகரங்களுக்கு இடையே 2020ல் ஓடத்துவங்கும்.
-
பேடிஎம் ஆப் மூலம் இனி ஃபாஸ்ட் டேக் கார்டுகளை ரீசார்ஜ் செய்யலாம்! வந்துவிட்டது புதிய வழி
-
குடிநீரில் கழுவினால் அபராதம்! பெங்களூர் கார் ஓனர்கள் கையில் எடுத்த புதிய ட்ரிக்! இது நமக்கு தெரியாம போச்சே!
-
நடிகர் தனுஷை வைத்து படம் எடுத்தவர் இன்று விலையுயர்ந்த காரில்!! ஷோரூமுக்கு குடும்பத்துடன் போய்ட்டாரு!