Just In
- 3 hrs ago இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- 3 hrs ago 7 பேர் போற கார் இவ்ளோ மைலேஜ் குடுக்குமா! விலை அதை விட ஆச்சரியம்! எவ்ளோனு தெரிஞ்சா அடுத்த நிமிஷமே வாங்கீருவீங்க
- 4 hrs ago இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
- 5 hrs ago உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!
Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
மணிக்கு 600 கிமீ வேகத்தில் செல்லும் ரயில்களை இயக்க ரயில்வே அமைச்சகம் தீவிரம்!
மணிக்கு 600 கிமீ வேகம் வரை செல்லும் ரயில்களை இயக்குவதற்கான முயற்சிகளில் மத்திய ரயில்வே அமைச்சகம் இறங்கி இருக்கிறது. இதற்காக, அதிவேக ரயில்களை தயாரிக்கும் வெளிநாட்டு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த
மணிக்கு 600 கிமீ வேகம் வரை செல்லும் ரயில்களை இயக்குவதற்கான முயற்சிகளில் மத்திய ரயில்வே அமைச்சகம் இறங்கி இருக்கிறது. இதற்காக, அதிவேக ரயில்களை தயாரிக்கும் வெளிநாட்டு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் புதிய ரயில் திட்டங்களை துவக்கி வைப்பதற்காக மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு நேற்று சென்னை வந்தார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்த விழாவில் அவர் புதிய ரயில் திட்டங்களை துவங்கி வைத்தார்.
இதன்பின்னர், இன்று சென்னையில் நடந்த மற்றொரு விழாவில் அவர் பங்கேற்றார். அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய சுரேஷ் பிரபு," நம் நாட்டின் ரயில்வே கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக விஷன் 2030 என்ற புதிய திட்டத்தை கையில் எடுத்திருக்கிறோம். அதன்படி, அதிவேக ரயில்களை இயக்குவதற்கான திட்டங்களை விரைந்து செயல்படுத்த உத்தேசித்துள்ளோம்.
மணிக்கு 350 கிமீ வேகத்திற்கு மேல் செல்லும் ரயில்களை தயாரிக்கும் 6 வெளிநாட்டு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அந்த நிறுவனங்களிடம் மணிக்கு 600 கிமீ வேகம் வரை செல்லக்கூடிய ரயில்களை தயாரிக்கும் தொழில்நுட்பமும் உள்ளது.
அதுபோன்ற அதிவேக ரயில்களை இந்தியாவில் கொண்டு வருவதற்கு அந்த நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். அடுத்த 10 ஆண்டுகளில் அதிவேக ரயில்களை இந்தியாவில் இயக்குவதற்கு இலக்கு வைத்துள்ளோம். அந்த ரயில்கள் மணிக்கு 600 கிமீ வேகம் வரை செல்லும் திறன் வாய்ந்ததாக இருக்கும்," என்று கூறினார்.
மணிக்கு 600 கிமீ வேகத்தில் செல்லும் ரயில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டால், சென்னையிலிருந்து சில மணிநேரங்களில் டெல்லியை அடைந்துவிடலாம். இதேபோன்று, நாட்டின் எந்தவொரு மூலையையும் சில மணிநேரங்களில் தரை வழி போக்குவரத்து மூலமாக சென்றுவிடும் வாய்ப்பு கிடைக்கும்.
இந்த தகவல் ரயில் பயணிகளின் ஆவலை அதிகரித்துள்ளது. மும்பை- ஆமதாபாத் இடையே நாட்டின் முதல் புல்லட் ரயிலை இயக்குவதற்கான கட்டமைப்பை உருவாக்குவதற்கான பணிகள் சமீபத்தில் துவங்கப்பட்டன. இந்த ரயில் மணிக்கு 300 கிமீ வேகத்தில் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், தற்போது மணிக்கு 600 கிமீ வேகம் வரை செல்லும் ரயில் கட்டமைப்பை உருவாக்குவதற்கான முயற்சிகளிலும் ரயில்வே துறை இறங்கி இருக்கிறது. மேலும், மணிக்கு 1,100 கிமீ வேகத்தில் செல்லும் ஹைப்பர்லூப் போக்குவரத்து சாதனத்திற்கான வழித்தட கட்டமைப்பை இந்தியாவில் உருவாக்குவதற்கும், அதனை உருவாக்கி வரும் ஹைப்பர்லூப் ஒன் நிறுவனம் மத்திய அரசுடன் தீவிரமாக பேச்சு நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.
அடுத்த 10 ஆண்டுகளில் நாட்டின் எந்த மூலைக்கும் விரைவான தரைவழி போக்குவரத்தை ரயில்வே நிர்வாகம் கட்டமைத்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய ஹோண்டா சிவிக் காரின் படங்கள்!
புதிய ஹோண்டா சிவிக் காரின் படங்களை கீழே உள்ளே கேலரியில் காணலாம்.
-
நானோ காரை நமக்கு தெரியும்! ஆனா இது அது கிடையாது... டாடா உருவாக்கிய இந்த கார் கடைசி வர வெளியே வராமல் போய்டுச்சே
-
கார் கப்பல் மாதிரி இருக்காம்! இவ்ளோ மைலேஜ் வேற தருதா! மொத்த கூட்டமும் மாருதி சுஸுகி ஷோரூம்லதான் இருக்கு!
-
செஞ்சது என்னமோ சின்ன உதவிதான்.. ஆனா அந்த சமையல்கார அம்மா குடும்பத்துக்கு அது ரொம்ப பெருசு! செம ஸ்டோரி!!