Just In
- 2 hrs ago ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
- 2 hrs ago விமானம் தரையிறங்கும் முன் எரிபொருளை விமானிகள் வேண்டுமென்றே திறந்துவிடுவார்கள்.. நாடுவானில் ஏன் இத செய்யுறாங்க?
- 2 hrs ago லியோ படத்தில் விஜய்யுடன் நடிச்சாரு, இப்போது விலையுயர்ந்த டொயோட்டா காரில்!! கேரள நடிகையின் புது கார்!
- 5 hrs ago போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
Don't Miss!
- Technology கெத்தா வெளிவரும் Vivo V30e 5G.. வெல்வெட் ரெட் லுக்கில் தருமாறு அம்சங்கள்.. விலை என்ன இருக்கும்?
- News சரியான "அடி" தந்த வேங்கைவயல் மக்கள்.. யாருமே ஓட்டுப்போடல..விழுந்தடித்து ஓடிய ஆபீசர்ஸ்.. இப்ப பாருங்க
- Finance துபாயில் இருக்கும் இந்தியர்களே.. முதல்ல இதை படிங்க..!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Lifestyle தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்வது பாதுகாப்பானது தெரியுமா? இத்தனை ஸ்பூனுக்கு மேல தெரியாம கூட சாப்பிடாதீங்க...
- Movies Actor Vijay Antony: பணத்திற்காக வாக்கை விற்காதீர்கள்.. தெளிவுபடுத்திய நடிகர் விஜய் ஆண்டனி!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
ஹைட்ரஜனில் இயங்கும் ரயில் எஞ்சின்: ரயில்வே துறை தீவிரம்!
ஹைட்ரஜனில் இயங்கும் ரயில் எஞ்சினை உருவாக்கும் பணிகளில் ரயில்வே துறை தீவிரமாக களமிறங்கி இருக்கிறது.
ரயில் எஞ்சின்களால் சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிர்க்கும் வகையில், ஹைட்ரஜன் ஃப்யூவல் செல் மூலமாக இயங்கும் ரயில் எஞ்சினை தயாரிக்க ரயில்வே துறை தீவிரமாக இறங்கி இருக்கிறது.
அடுத்த 5 ஆண்டுகளில் நாடுமுழுவதும் அனைத்து ரயில் வழித்தடங்களும் மின்மயமாக்கப்படும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் ப்யூஷ் கோயல் அண்மையில் தெரிவித்திருந்தார். டீசல் எஞ்சின் பயன்பாடு முற்றிலும் ஒழிக்கவும் முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.
இதன்மூலமாக, சுற்றுச்சூழல் மாசு குறைக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. இருப்பினும், சில சில மின் உற்பத்தி முறைகளின் மூலமாக தொடர்ந்து சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவது தவிர்க்க முடியாத விஷயமாகவே இருந்து வருகிறது.
இந்த நிலையில், மாற்று எரிபொருளில் இயங்கும் ரயில் எஞ்சினை உருவாக்குவதற்கு ரயில்வே துறை தீவிரமாக இறங்கி இருக்கிறது. அதன்படி, ஹைட்ரஜன் எரிபொருளை பயன்படுத்தி இயங்கும் ரயில் எஞ்சினை தயாரிக்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது.
இந்திய ரயில்வே துறை தயாரிக்க இருக்கும் ஃப்யூவல் செல் ரயில் எஞ்சின் 300kW மின் உற்பத்தி திறன் கொண்டதாக இருக்கும். வாரணாசியில் இருக்கும் டீசல் எஞ்சின் தயாரிப்பு தொழிற்சாலையில் இந்த புதிய ரயில் எஞ்சின் உருவாக்கும் பணிகள் நடக்க இருக்கின்றன.
இந்த ரயில் எஞ்சினில் கார்பன் ஃபைபர் மற்றும் உயர்வகை அலுமினியத்தால் உருவாக்கப்பட்ட 2 ஹைட்ரஜன் எரிபொருள் சேமிப்புத் தொட்டிகள் பொருத்தப்பட்டு இருக்கும்.
ஃப்யூவல் செல் ரயில் எஞ்சினில் காற்று குளிர்விப்பு வசதியுடன் கூடிய தலா 100kW மின்திறன் கொண்ட மூன்று மின் உற்பத்தி மையங்கள் இருக்கும். இவற்றின் மூலமாக ட்ரான்ஸ்ஃபார்மர் மூலமாக ரயில் எஞ்சினில் பொருத்தப்பட்டிருக்கும் சக்திவாய்ந்த மின்மோட்டார்கள் மூலமாக சக்கரங்கள் இயக்கப்படும்.
தற்போது பயன்படுத்தப்படும் 21 டன் ஆக்ஸில்லோடு கொண்ட ரயில் எஞ்சின் அடிச்சட்டத்தை பயன்படுத்தி இந்த புதிய ஃப்யூவல் செல் ரயில் எஞ்சின் உருவாக்கப்பட உள்ளது. டீசல் எஞ்சினில் பயன்படுத்தப்படும் ட்ராக்ஷன் மின்மோட்டார்கள், விஜிலென்ஸ் கன்ட்ரோல் சாதனம், ஏர் பிரேக், ஏர் ஹாரன் போன்றவை அப்படியே இந்த புதிய எஞ்சினிலும் பயன்படுத்திக் கொள்ள திட்டமிடப்பட்டு இருக்கிறது.
இந்த திட்டத்தில் இணைந்து பணியாற்றுவதற்கும், உதிரிபாகங்களை சப்ளை செய்வதற்கும் வாரணாசி டீசல் எஞ்சின் உற்பத்தி ஆலை நிர்வாகம் சார்பில் டென்டர் விடப்பட்டு இருக்கிறது. இதில், தேர்வு செய்யப்படும் உதிரிபாக சப்ளையர்களுடன் இணைந்து பணியாற்ற வாரணாசி டீசல் எஞ்சின் தயாரிப்பு ஆலை முடிவு செய்துள்ளது.
புரோட்டோடைப் எஞ்சின் தயாரிக்கப்பட்டு விட்டால், மூன்று மாதங்களில் சோதனை ஓட்டங்களை நடத்தி முடிக்கவும் ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது.
வெளிநாடுகளில் இப்போது ஹைட்ரஜன் எரிபொருள் மூலமாக இயங்கும் மின்சார ரயில் எஞ்சின்கள் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை. இந்த நிலையில், ஃப்யூவல் செல் ரயில் எஞ்சின் தயாரிப்புக்கு ரயில்வே துறை முக்கியத்துவம் கொடுத்திருப்பது வரவேற்கத்தக்க விஷயமாக இருக்கும்.
-
என்னதான் பைக் காதலரா இருந்தாலும் இதெல்லாம் ஓவருங்க.. நடிகர் ஜான் ஆபிரகாம் வாங்கிய இந்த பைக்கின் விலை இவ்வளவா!!
-
சினிமா ஹீரோயின் மாதிரி இருக்காங்க... புதுசா வாங்கன கார்ல வந்து இறங்கனது அவங்களா... மனசை பறிகொடுத்த இளசுகள்!
-
முதியவர்களுக்கு லோயர் பெர்த் கிடைக்க என்ன செய்யனும் தெரியுமா? சூப்பர் அட்வைஸ் சொன்ன ரயில்வே!