Just In
- 49 min ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- 1 hr ago எவ்வளவு பெரிய கிரிக்கெட்டர், குழந்தை போல் ராயல் என்ஃபீல்டு பைக்கில் ரைடு!! ஓட்டி பார்த்த பின் அவர் சொன்னது...
- 2 hrs ago உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- 3 hrs ago தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
Don't Miss!
- Lifestyle உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- News 664 மனு நிராகரிப்பு! தமிழக லோக்சபா தேர்தலில் 1085 வேட்புமனு ஏற்பு! எந்த தொகுதியில் அதிகம் தெரியுமா
- Sports RR vs DC : எமோஷனலாக இருக்கேன்.. சஞ்சு சாம்சன் உள்ளே வந்து ஒன்றை சொன்னார்.. ரியான் பராக் நெகிழ்ச்சி!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
கார் டிரைவர் செய்த காரியத்தால் உறைந்து போன போலீஸ்காரர்... வீடியோ பாக்கறப்பவே அடி வயிறு கலங்குது...
அதிவேகத்தில் வந்த காரை நிறுத்துவதற்கு, போக்குவரத்து காவலர் முயற்சித்தபோது, ஓட்டுனர் செய்த காரியம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் சாலை விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருப்பதற்கு, வாகன ஓட்டிகள் விதிமுறைகளை மீறுவதே முக்கியமான காரணமாக உள்ளது. எனவே விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது, போக்குவரத்து காவல் துறையினர் வாகன தணிக்கை நடத்தி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
ஆனால் சமீப காலமாக தொடர்ந்து நடைபெற்று வரும் ஒரு சில நிகழ்வுகள், போக்குவரத்து காவல் துறையினரின் உயிருக்கே பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளன. தலைநகர் புது டெல்லியில் கடந்த திங்கள் கிழமையன்று, போக்குவரத்து காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது விதிமுறையை மீறிய ஒரு காரை நிறுத்தி விசாரணை நடத்தினர்.
ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!
ஒரு போக்குவரத்து காவலர், காரின் முன்னால் நின்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அங்கிருந்து தப்பிக்கும் நோக்கத்துடன் ஓட்டுனர் காரை எடுக்க, முன்னால் நின்று கொண்டிருந்த காவலர், பானெட்டின் மீது தவறி விழுந்தார். ஆனால் ஓட்டுனர் காரை நிறுத்தாமல், தொடர்ந்து ஓட்டி சென்றார். காரின் பானெட்டை பிடித்து தொங்கியபடியே காவலர் சென்ற இந்த காணொளி, சமூக வலை தளங்களில் வேகமாக பரவியது.
கொஞ்ச தூரம் சென்ற பிறகு, அந்த காவலர் சாலையில் தவறி விழுந்தார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் இதே பாணியில் மற்றொரு சம்பவம், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்றுள்ளது. டெல்லி சம்பவம் நடைபெற்றதற்கு மறுநாள், அதாவது கடந்த செவ்வாய்கிழமையன்று ராஜஸ்தானில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
அதிவேகத்தில் வந்த காரை தடுத்து நிறுத்த முயற்சி செய்தபோது போக்குவரத்து காவலர் கிருஷ்ண குமார் என்பவர், பானெட்டில் தவறி விழுந்தார். ஆனால் மனிதாபிமானமற்ற அந்த ஓட்டுனர் காரை நிறுத்தாமலேயே ஓட்டி சென்றார். எனவே போக்குவரத்து காவலர் கிருஷ்ண குமார் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு காரின் பானெட்டை பிடித்து தொங்கியபடியே சென்றதாக கூறப்படுகிறது.
ஒரு கட்டத்தில் காரில் இருந்து அவர் குதித்துள்ளார். இதனால் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. எனினும் காயங்களுடன் அவர் உயிர் தப்பி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காரின் பானெட்டை பற்றிக்கொண்டே போக்குவரத்து காவலர் கிருஷ்ண குமார் செல்லும் காணொளியும் தற்போது சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இந்த கொடூரத்தை கண்ட ஒரு சிலர், காரை நிறுத்துவதற்காக சாலையின் மைய பகுதிக்கு விரையும் காட்சிகளையும் இந்த காணொளியில் நம்மால் பார்க்க முடிகிறது. ஆனால் ஓட்டுனர் காரை நிறுத்தாமலேயே ஓட்டி சென்றுள்ளார். இந்த காரின் ஓட்டுனர் மணிக்கு 82 கிலோ மீட்டர்கள் வேகத்தில் வந்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
ஆனால் அந்த பகுதியில் மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. அந்த காரின் ஓட்டுனர் வேக வரம்பை மீறியதுடன், போக்குவரத்து காவலரின் உயிருக்கே அச்சுறுத்தலை ஏற்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அந்த நபரை காவல் துறையினரால் இன்னும் பிடிக்க முடியவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
காரின் பதிவு எண் மூலமாக முகவரியை கண்டுபிடிக்க காவல் துறையினர் முயற்சி செய்துள்ளனர். ஆனால் கொடுக்கப்பட்ட முகவரி போலியானது என்பது அப்போதுதான் தெரியவந்துள்ளது. எனினும் அவரை கைது செய்யும் முயற்சியில் காவல் துறையினர் தற்போது தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவது, போக்குவரத்து காவல் துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
-
ரோபோ சங்கர் மகள் திருமணத்திற்கு சீதனமா இந்த காரை கொடுத்தாரா? இதோட விலை என்ன தெரியுமா?
-
சீன நிறுவனம் காரையே புளிப்பு மிட்டாய் கணக்கா உற்பத்தி பண்ணிட்டு இருக்கா.. நம்பவே முடியல 7 மில்லியனை தொட்ருச்சு
-
குடிநீரில் கழுவினால் அபராதம்! பெங்களூர் கார் ஓனர்கள் கையில் எடுத்த புதிய ட்ரிக்! இது நமக்கு தெரியாம போச்சே!