ராஜ்தானி, சதாப்தி ரயில்களில் அதி நவீன சேவைகள் அறிமுகம்; இந்திய ரயில்வே அறிவிப்பு..!!
இந்தியளவில் தற்போது அதிவேக சேவையை வழங்கி வரும் சதாப்தி மற்றும் ராஜ்தானி ரயில்கள் ஆடம்பர சேவைக்கு மாற்றப்பட உள்ளன.
தேஜஸ் ரயிலில் இருப்பது போன்ற ஆடம்பர வசதிகளுடன் ராஜ்தானி மற்றும் சதாப்தி ரயில்கள் மேம்படுத்த இந்திய இரயில்வே நிர்வாகம் திட்டமிட்டு வருகிறது.

இந்தியாவில் ப்ரீமியம் தர பயண சேவைகளை வழங்கி வரும் ராஜ்தானி மற்றும் சதாப்தி ரயில்களுக்கு என்று பெருங்கூட்டம் இருந்து வருகிறது.

பல நூறு பயணிகள் பயணிப்பதாலோ என்னமோ, சதாப்தி மற்றும் ராஜ்தானி ரயில்கள் பொலிவிழந்து, சுத்தமின்றி மோசமான சூழ்நிலையுடன் காணப்படுகிறது.

பல ஆண்டுகளாக பயணிகள் இந்த ரயில்களை குறித்து தெரிவித்து வரும் புகார்கள் இந்திய ரயில்வேயின் காதில் தற்போது தான் விழுந்து இருக்கின்றன.

ப்ரீமியம் தர பயணங்களை வழங்கும் இந்த ரயில்களை அந்த தரத்திற்கு மேம்படுத்த இந்தியன் ரயில்வே ‘ஆப்ரேஷன் ஸ்வரன் (தங்கம்)' என்ற செயல்பாட்டை அறிமுகம் செய்துள்ளது.

அதன்படி, வைஃபை, எல்.இ.டி திரை, காஃபி மேக்கர், தரமான உணவுகள் என்று தேஜஸ் ரயிலில் உள்ளது போலவே, ஆடம்பர வசதிகள் சில இந்த ரயில் சேவைகளில் இடம்பெறுகின்றன.

இந்தியளவில் பயன்பாட்டில் உள்ள 15 சதாப்தி ரயில்கள் மற்றும் 15 ராஜ்தானி ரயில்களை இதற்காக ரயில்வே நிர்வாகம் தேர்வு செய்து உள்ளதாக தெரிகிறது.

மேலும், ராஜ்தானி மற்றும் சதாப்தி ரயில் சேவைகளில் மேற்கொள்ளப்படும் இந்த புணரமைப்பு பணிகளுக்காக ரூ. 25 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஆப்ரேஷன் ஸ்வரனின் முதற்கட்ட செயல்பாட்டில், மும்பை முதல் டெல்லி வரை செல்லும் ராஜ்தானி விரைவு ரயில் மற்றும்
மும்பை முதல் அகமதாபாத் வரை செல்லும் சதாப்தி விரைவு ரயில் ஆகியவற்றில் புணரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

செப்டம்பர் மாதம் 26 முதல் புணரமைப்பு பணிகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டு, அந்த இரண்டு ரயில்களும் ப்ரீமியம் தரத்திற்கு உயரத்தப்படுகிறது.

தேஜஸ் ரயில்கள் அறிமுகமான பிறகு மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, முற்றிலும் ஏசி கொண்டு குளிரூட்டப்பட்ட ஹம்சஃபர் விரைவு ரயிலை அறிமுகம் செய்து வைத்தார்.

இதே வசதி உடன் கூடிய மாஹாமனா மற்றும் கதிமான் போன்ற இரவு நேரங்களில் இயக்கப்படும் ரயில்களும் அறிமுகமாயின.

ஹம்சஃபர் ரயிலில் காபி மேக்கர் மெஷின்கள், தீ மற்றும் புகையை எச்சரிக்கும் கருவிகள் மற்றும் சொகுசான இருக்கைகள் ஆகியவற்றுடன் பாதுகாப்பிற்காக சிசிடிவி கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது.

மேலும் மஹாமனா விரைவு ரயிலில் மேல் தளத்திற்கு செல்வதற்காக ஏணிகள், நொறு வகைகளை சாப்பிட பிரத்யேக மேசைகள், புத்தகத்தை வாசிக்க எல்.இ.டி விளக்குகள், மின்சாரத்தால் இயங்கும் சிம்னி போன்ற வசதிகள் உள்ளன.


Click it and Unblock the Notifications








