2.0 படக்குழுவினரின் ஹெலிகாப்ட்டர் என்ட்ரி... துபாயில் அசத்தும் 2.0 பட பிரமோஷன்..!!
2.0 படக்குழுவினரின் ஹெலிகாப்ட்டர் என்ட்ரி... துபாயில் அசத்தும் 2.0 பட பிரமோஷன்..!!
சாலை வழி, ரயில் பயணங்களை ஆகியவற்றை விடுத்து, தற்போது பிரபலங்கள் பலர் வான் போக்குவரத்தை மட்டுமே செய்ய தொடங்கிவிட்டனர். இனி இதுதான் டிரென்டு போலும்.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் 2.0 படத்தின் இசை வெளியீட்டு விழா துபாயில் பிரம்மாண்டமாக பிரம்மாண்டமாக நடக்கவுள்ளது.

இந்திய சினிமாவின் டிரென்டையே மாற்றக்கூடிய படமாக எதிர்பார்க்கப்படும் 2.0, இனி வரும் காலங்களில் நடிகர்களின் போக்குவரத்து பயன்பாட்டிற்கும் புது டிரென்டை வகுக்கும் போல.

நுழைவுவாயிலில் சிவப்பு நிறக்கம்பள வரவேற்பில் வந்து நிற்கும் காரில் இருந்து இறங்கி, பொதுமக்கள் மத்தியில் புகைப்படங்கள் புடை சூழ ஸ்டைலாக போஸ் கொடுக்கும் காலங்கள் எல்லாம் மலையேறிவிட்டது.

வரும் காலங்களில் ஹெலிகாப்டரில் வந்திறங்கி, ஹெலிபேடில் நின்று அங்கியிருந்து ஸ்டைலாக கேமராக்களுக்கு போஸ் கொடுப்பது தான் டிரென்டு.
Recommended Video


திரை பிரபலங்கள் தரை வழியை விட வான் வழிக்கு மாறி வெகுகாலம் ஆகிவிட்டது என்பதை 2.0 பட பிரோமேஷன் நிகழ்வுகள் நமக்கு உணர்த்துக்கின்றன.
Trending On DriveSpark:

2.0 படத்தின் இசைவெளியீடு நாளை நடைபெறுகிறது. இதற்காக ரஜினிகாந்த், ஷங்கர், ஏ.ஆர். ரஹ்மான் உட்பட படக்குழுவினர் அனைவரும் துபாயில் மையமிட்டுள்ளனர்.

இந்திய சினிமா கண்டிராத மிக பிரம்மாண்டமான விழாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆம் அது உண்மைதான் என்பது போல அதற்கான டிரைலராக இன்று துபாயில் 2.0 படத்திற்கான செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது.

துபாயின் 3வது பெரிய கட்டிடமாக உள்ள புருஜ் அல் அராப் என்ற ஏழு நட்சத்திர ஹோட்டலில் நடந்த இந்த சந்திப்பிற்கு, ரஜினிகாந்த், அக்ஷய் குமார், ஷங்கர், ஏ.ஆர். ரஹ்மான், ஏமி ஜாக்சன் ஆகியோர் ஹெல்காப்டரில் வந்திறங்கினர்.

ரஜினி காந்த், ஏமி ஜாக்சன் மற்றும் இணை விமானி ஆகியோர் ஒரு ஹெலிகாப்டரில் சென்றனர். அக்ஷய் குமார், இயக்குநர் ஷங்கர் மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் மற்றொரு ஹெலிகாப்டரில் சென்றனர்.

செய்தியாளர் சந்திப்பிற்கு ஹெலிகாப்டரில் செல்வதாக கூறி, ஏ.ஆர். ரஹ்மான், ஷங்கர் உடன் பயணிக்கும் புகைப்படத்தை அக்ஷய் குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

பதிவிட்ட சில நிமிடங்களிலேயே பரபரப்பாக லைக்ஸூகளை வாரி குவித்த இந்த படம், ட்விட்டர் உள்ளிட்ட சில சமூக வலைதளங்களில் டிரென்டிங்காகி வருகிறது.

விழா நடைபெற்ற புர்ஜ் அல் அரேப் ஹோட்டலுக்கு சில கி.மீ தொலைவில் தான் ரஜினி உட்பட 2.0 படக்குழுவினர் தங்கியுள்ளனர்.
அதற்காக தரை வழி பயணத்தை பயன்படுத்தாமல், 2.0 படக்குழுவினர் ஹெலிகாப்டரில் வந்திறங்கியது தான் இன்று இந்திய சினிமாவின் டாக் ஆஃப் தி டவுன்.

பிரபலங்களின் போக்குவரத்து தேவைகள் 2.0 படத்தின் சந்திப்பு மூலம் நமக்கு தெரியவந்தாலும், இந்த மாற்றம் எப்போதோ நமது திரைப்பிரபலங்கள் மத்தியில் ஏற்பட்டு விட்டது.

குறிப்பாக பாலிவுட் நடிகர்கள் பலர் தங்களது தேவைகளுக்காக பிரைவேட் ஜெட் ரக விமானங்களை பயன்படுத்தி வருகின்றனர்.
அதில் அமிதாப் பச்சன், , ஷாருக்கான், சல்மான் கான், ஹிருத்திக் ரோஷன் பல முன்னணி நடிகர்களும் அடங்குவர்.

நடிகைகளில் ஷில்பா ஷெட்டி மட்டுமே கருப்பு ரக பிரைவேட் ஜெட்டை வைத்திருக்கிறார். ப்ரியங்கா சோப்ராவிடமும் இதுபோன்ற விமானம் இருப்பதாக சொல்லப்படுகிறது.

நமது தென்னக திரைநட்சத்திரங்கள் பலர் பெரும்பாலும் இந்தியாவிலேயே தேவைகளை முடித்துக்கொள்வதால் பெரியளவில் பிரைவேட் ஜெட் இதுவரை இல்லாமல் இருந்தது.

ஆனால் 2.0 படத்தின் பிரஸ் மீட்டிற்கு ஹெலிகாப்டரில் வந்த ரஜினி, ரஹ்மான், ஷங்கர் உள்ளிட்டவர்களை பார்த்து தென்னக சினிமாத்துறையை சார்ந்த நடிகர்கள் இனி பிரைவேட் ஜெட் அல்லது ஹெலிகாப்டர்களை போக்குவரத்திற்கு பயன்படுத்தும் சூழ்நிலை உருவாகலாம்.

அதற்கு ஏற்றவாறு ரோல்ஸ்-ராய்ஸ், ஹோண்டா, பியாகியோ போன்ற நிறுவனங்கள் கட்டுபடியாகும் விலையில் பிரைவேட் ரக விமானங்களை தயாரித்து வழங்குகின்றன.

2.0 படத்தின் செய்தியாளர் சந்திப்பிற்கே இந்த பிரம்மாண்டம் என்றால், நாளை இசைவெளியீட்டு விழாவில் என்ன என்ன இருக்கும் என இப்போதே வெர்ச்சுவலில் கற்பனை செய்ய ஆரம்பித்துவிட்டனர் நெட்டிசன்கள்


Click it and Unblock the Notifications








