ஸ்கூட்டருக்கு இந்த கதி ஆகும்னு நினைச்சே பார்க்கல!! பொங்கி எழுந்த ஹோண்டா சிட்டி கார் ஓட்டுனர்
சாலையில் வாகன ஓட்டிகளுக்கு இடையே மோதல் ஏற்படுவதெல்லாம் இந்தியாவில் சாதராணமாக நடக்கக்கூடிய ஒரு விஷயமாகும். அவ்வாறு குஜராத், ராஜ்கோட்டில் இரு வாகன ஓட்டிகளுக்கு இடையே நடந்த மோதலை பற்றி தான் இந்த செய்தியில் பார்க்க போகிறோம்.

அமைதியான ராஜ்கோட் சாலை ஒன்றில் இரு பக்கங்களில் இருந்து வந்த ஹோண்டா சிட்டி கார் மற்றும் ஒரு ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர், ஒரு கட்டத்தில் மோதுவது போல் நிற்கின்றன.
அதற்கு பிறகு நடந்த விஷயங்களை மேல் உள்ள சிசிடிவி வீடியோவில் காணலாம். ஆக்டிவாவில் இரு இளைஞர்கள் வருகிறார்கள். அவர்கள் தான் முதலில் இந்த பிரச்சனையை பெரிதாக்குகிறார்கள்.

ஹோண்டா சிட்டி காரின் கண்ணாடிகளை பிடித்து இழுத்த அவர்கள் தொடர்ந்து கார் ஓட்டுனரையும் வம்புக்கு இழுத்துள்ளனர். அவர்களிடம் இருந்து கார் ஓட்டுனர் தப்பித்து செல்கிறார்.

ஆனால் அவர் மீண்டும் திரும்ப வந்த சாலையில் இருந்த ஸ்கூட்டரை நொறுக்கி தள்ளுவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. அவர் மோதியதில் ஸ்கூட்டரை ஓட்டி வந்தவர்களுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை என்றாலும், ஸ்கூட்டர் பறந்தது.

மேலும் அவர் மோதிய வேகத்தில் நிறுத்த முடியாமல் அருகில் இருந்த மற்றொரு காரின் மீதும் மோதிவிடுகிறார். ஸ்கூட்டரை ஓட்டி வந்தவர்களில் ஒருவர் மயிரிழையில் தான் தப்பித்துள்ளார் என்பதும் வீடியோ பார்க்கும்போது தெரிய வருகிறது.

பறந்த வேகத்திற்கு ஸ்கூட்டரை இனி பயன்படுத்தவே முடியாது என்று தான் நினைக்கிறோம். ஹோண்டா சிட்டியை காட்டிலும் மோதலில் சிக்கிய மூன்றாவது வாகனத்தின் பின்புறத்திற்கு தான் அதிகளவில் சேதம் ஏற்பட்டிருக்க வேண்டும்.

இத்தனைக்கும் ஹோண்டா சிட்டி கார் ரிவர்ஸில் தான் வந்து மோதியுள்ளது. ரிவர்ஸில் வந்ததால் சிட்டி காரின் ஓட்டுனரால் அடுத்த சில நொடிகளிலேயே அந்த இடத்தில் இருந்து கிளம்ப முடிந்துள்ளது.

மோதலுக்கு உள்ளான மூன்றாவது கார் ஹூண்டாய் ஐ20 ஆகும். இந்த சிசிடிவி வீடியோவை வைத்து ஆராய்ந்ததில் ஹோண்டா சிட்டி காரின் உரிமையாளரின் பெயரின் பெயர் ஜெயராஜ் டவ்டா ஆகும்.

இது பார்த்தால் முழுக்க முழுக்க சாலையில் நடைபெறும் வழக்கமான சண்டை போல் தான் தெரியும். ஆனால் இது திட்டமிட்டு நடத்தப்பட்ட மோதலாக கூட இருக்கலாம். ஏனென்றால் ஹோண்டா சிட்டி கார் ஓட்டுனர் கடைசி வரை காரில் இருந்து வெளியே வரவில்லை.

கருப்பு நிற கண்ணாடியால் அவரது முகம் மறைந்துள்ளது. இவ்வாறு காரில் இருந்து வெளியே வந்து ஸ்கூட்டரில் வந்தவரை கண்டிக்காதவர் இப்படி பெரிய மோதலை உண்டு செய்திருப்பது சற்று சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. மூன்றாவது வாகனத்தை சேதம் அடைய வைப்பதற்காக கூட இந்த மோதல் திட்டமிடப்பட்டிருக்கலாம்.

இவ்வாறு தான் நிச்சயம் அந்த ஹூண்டாய் ஐ20 கார் உரிமையாளரும் சந்தேகிப்பார். இவ்வாறு சந்தேகத்திற்குள்ளாமல் இருக்க வேண்டும் என்றால், பயணங்களின் போது அதிகம் கோபமடையக்கூடாது. மனதை ஒரே நிலைப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.

ஸ்கூட்டரில் வந்தவர்கள் தப்பித்து இருப்பார்கள். ஹோண்டா சிட்டி கார் ஓட்டுனரை ஹூண்டாய் ஐ20 உரிமையாளர் தேடி சென்றிருப்பார். எனவே இவ்வாறான நிகழ்வுகளை சந்திக்க நேர்த்தால் இந்த வீடியோவினை ஒருமுறை நினைத்து பாருங்கள்.


Click it and Unblock the Notifications








