சரியான நேரத்தில் உதவுறாங்க!! முன்கள பணியாளர்களுக்கு ராபிடோவின் கொரோனா பாதுகாப்பு பொருட்கள்..!
கொரோனாவின் இரண்டாவது அலை பரவி வரும் தற்போதைய சூழலில் நாம் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளோம். தற்போதைக்கு இத்தகைய தடுப்பு நடவடிக்கையே சரியானது.

சில முக்கியமான ஊழியர்களை தவிர்த்து மற்றவர்கள் அனைவருக்கும் வீட்டில் இருந்தப்படியே பணிப்புரிவதற்கு பெரும்பாலான தனியார் நிறுவனங்கள் அனுமதி அளித்துள்ளன. ஆனால் முன்கள பணியாளர்கள் விடுமுறை இல்லாமல் தினந்தோறும் நமது பாதுகாப்பிற்காக உழைத்து வருகின்றனர்.

இதனாலேயே இவர்களுக்கு முன்கள பணியாளர்கள் என்று பெயர். இவர்களுக்கு ஊதியத்துடன் சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கூறிவரும் நிலையில் ராபிடோ நிறுவனம் பெங்களூரில் முன்கள பணியாளர்களுக்கு கோவிட் பாதுகாப்பு கருவிகளை வழங்கியுள்ளது.

இந்தியாவின் மிக பெரிய பைக் டாக்ஸி ப்ளாட்ஃபாரமாகவும், மூன்றாவது மிக பெரிய டாக்ஸி ப்ளாட்ஃபாரமாகவும் விளங்கும் ராபிடோ, கொரோனா வைரஸை எதிர்த்து போராடி வரும் இந்திய அரசாங்கத்திற்கு ஆரம்பத்தில் இருந்தே தனது உதவிகரத்தை வழங்கி வருகிறது.

இந்த வகையில் தான் தற்போது பெங்களூரில் சோதனை சாவடிகளில் பணிப்புரியும் போலீஸார், மருத்துவர், நர்ஸ் உள்பட சுகாதார பணியாளர்கள், ஆஷா பணியாளர்கள் மற்றும் நகரத்தின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றும் மாநகராட்சி பணியாளர்களுக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்களை ராபிடோ வழங்கியுள்ளது.

ராபிடோ நிறுவனத்தின் சார்பாக ராபிடோ ஓட்டுனர்கள் முக கவசங்கள், கை சுத்திகரிப்பான், உணவு மற்றும் தண்ணீரை மேற்கூறப்பட்ட முன்கள பணியாளர்களுக்கு அவர்களது இடத்திற்கே சென்று வழங்கியுள்ளனர். மேலும் பெங்களூர் உடன் அதனை சுற்றியுள்ள டயர் 2 மற்றும் டயர் 3 நகரங்களுக்கும் இந்த #ராபிடோபிஸ்டாப் (#Rapidopitstop) திட்டத்தை விரிவுப்படுத்த ராபிடோ திட்டமிட்டு வருகிறது.

இவ்வாறு கொரோனா பாதுகாப்பு பொருட்களை வழங்குவதோடு, ஏற்கனவே கூறியதுபோல் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளிலும் ராபிடோ அந்தந்த மாநில அரசாங்கங்களுடன் இணைந்து செயலாற்றி வருகிறது. இதன்படி தனது நிறுவனத்தில் இயங்கும் டிரைவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதை நகரவாரியாக இந்த நிறுவனம் உறுதி செய்து வருகிறது.

சென்னையிலும் அதன் டிரைவர்களுக்கு சென்னை மாநகராட்சி உடன் இணைந்து ராபிடோ கொரோனா தடுப்பூசிகளை வழங்கி வருகிறது. தடுப்பூசி கண்டறிவதற்கு முன்னர், அதாவது கடந்த ஆண்டில் அவசர வேலையாக வெளியே செல்வோர்க்காக தொடர்ந்து பைக் டாக்ஸி சேவையை வழங்கி வந்த ராபிடோ, அப்போது தனது பைக்குகளில் மத்தியில் ஓட்டுனரிடம் இருந்து பயணியை பிரிக்கும் விதத்தில் கவசத்தை பொருத்தியது நினைவிருக்கலாம்.

அதேபோல் ஓட்டுனர் அல்லது வாடிக்கையாளர் முக கவசம் அணியாமல் வந்தால் அந்த பயணத்தை தடை செய்யும் புதிய கொள்கையையும் கடந்த ஆண்டில் ராபிடோ அமலுக்கு கொண்டுவந்தது. இவற்றுடன் #தடுப்பூசிக்கான பயணம் என்கிற திட்டத்தையும் சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் தடுப்பூசியை செலுத்தி கொள்ள குறிப்பிட்ட மருத்துவமனைக்கு இலவசமாக செல்லலாம்.


Click it and Unblock the Notifications








