Just In
- 23 min ago டிவிஎஸ் அப்பாச்சி பைக்கை வாங்குபவர்களின் எண்ணிக்கை குறையுது!! காரணம் என்னவா இருக்கும்?
- 31 min ago மாருதி, டாடா, ஹூண்டாய் நிறுவனங்களை ஒரு கை பார்க்க வரும் நிஸான் கார்... போட்டி அனல் பறக்க போகுது...
- 1 hr ago இந்த காரை எல்லாம் நாம கண்ணால நேர்ல பார்த்தாலே அது நம்ம செஞ்ச புண்ணியம் தான்! காரோட ரேட் அப்படி!
- 1 hr ago 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
Don't Miss!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- News சிறையில் கணவர்.. இடைத்தேர்தலில் களமிறங்கும் ஜார்கண்ட் Ex முதல்வர் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
வீடியோ வைரல் ஆனதால் வாகன ஓட்டிக்கு ஏற்பட்ட சோகம்... என்ன ஆச்சுனு தெரியுமா?
அபாயகரமான முறையில் பைக் ஓட்டிய வீடியோ வைரல் ஆனதால், வாகன ஓட்டி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளை அதிகாரிகள் தற்போது தீவிரமாக கண்காணிக்க தொடங்கியுள்ளனர். சிசிடிவி கேமராக்கள் மூலமும், சமூக வலை தளங்களில் பதிவிடப்படும் வீடியோக்கள் மூலமும் விதிமுறைகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த வகையில் கேரளாவை சேர்ந்த இரு சக்கர வாகன ஓட்டி ஒருவர் மீது தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பைக்கை அவர் அபாயகரமான முறையில் ஓட்டும் வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியானது. இதன் அடிப்படையில் அவரது ஓட்டுனர் உரிமம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது. Green Punk46 என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. ஒரு சிலர் பைக்கில் பயணம் செய்வதை இந்த வீடியோ நமக்கு காட்டுகிறது.
இதில் மற்ற பைக் ஓட்டிகள் அனைவரும் லேன் விதிமுறைகளை முறையாக பின்பற்றுகின்றனர். ஆனால் அவர்களில் ஒருவர் மட்டும் பைக்கை அபாயகரமான முறையில் ஓட்டினார். எனவே அவர் மீது தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் சமூக வலை தளங்களில் வெளியாகும் வீடியோக்களின் அடிப்படையில் வாகன ஓட்டிகள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது இது முதல் முறை கிடையாது.
குஜராத் மாநிலம் சூரத் நகரை சேர்ந்த பெண் ஒருவர் மீது கூட சமீபத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர் அபாயகரமான முறையில் பைக் ஓட்டும் வீடியோ சமூக வலை தளங்களில் வெளியாகியிருந்தது. இதன் அடிப்படையில் அவருக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர். அவர் தலை கவசம் அணியாமல் சாலையில் பைக் மூலம் ஸ்டண்ட் செய்திருந்தார்.
இந்த வரிசையில் கேரளாவில் பைக் ரைடர் அபாயகரமான முறையில் பைக் ஓட்டிய வீடியோவும் சமூக வலை தளங்களில் வைரலானது. எனவே அதிகாரிகள் உடனடியாக அவருக்கு அபராதம் விதித்ததுடன், ஓட்டுனர் உரிமத்தையும் சஸ்பெண்ட் செய்தனர். ஆனால் அவருக்கு எவ்வளவு ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது? என்பது சரியாக தெரியவில்லை.
சாலையில் அபாயகரமான முறையில் வாகனங்களை ஓட்டுவது தவறானது. தற்போதைய நிலையில் சூப்பர் பைக்குகளில் ஸ்டண்ட் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. இதில், நீங்களும் ஒருவர் என்றால், பாதுகாப்பான இடங்களில் ஸ்டண்ட் செய்யலாம். அப்போது தலை கவசம் அணிவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருப்பது அவசியம்.
அதை விடுத்து விட்டு, பொது சாலையில் ஸ்டண்ட் செய்வதோ, மற்றவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை ஓட்டுவதோ தவறானது. இது உங்களுக்கு மட்டுமல்லாது, சாலையில் பயணிக்கும் மற்ற வாகன ஓட்டிகளுக்கும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அனைவரும் உணர வேண்டும்.
இந்தியாவில் சாலை விபத்துக்கள் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1.50 லட்சம் பேர் உயிரிழந்து வருகின்றனர். இதை குறைப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றன. வாகன ஓட்டிகளான நாம் போக்குவரத்து விதிமுறைகள் அனைத்தையும் முறையாக பின்பற்றுவதன் மூலம் அரசின் இந்த முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்குவது அவசியம்.
-
இந்த காரை எத்தன பேரு தங்களுக்கு பிடிச்சவங்களுக்கு பரிசா கொடுக்க போறாங்களோ! அஸ்டன் மார்ட்டின் வேன்டேஜ் அறிமுகம்
-
வெள்ளை நிற ஹெட்லைட் போட்ட வண்டிகளுக்கு எல்லாம் அபராதம் போட போறாங்க! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
-
இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?