பல ஆயிர கணக்கான கோடி ரூபாய் மிச்சமாக போகுது! பயோ சிஎன்ஜி உற்பத்தியில் ராவ்மாட் இன்டஸ்ட்ரீஸ்!

நாக்பூரை மையமாகக் கொண்டு இயங்கும் ராவ்மாட் நிறுவனம் இந்தியாவில் பயோ-சிஎன்ஜி உற்பத்தியில் களமிறங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே காணலாம், வாங்க.

பல ஆயிர கணக்கான கோடி ரூபாய் மிச்சமாக போகுது! பயோ சிஎன்ஜி உற்பத்தியில் ராவ்மாட் இன்டஸ்ட்ரீஸ்!

மஹாராஷ்டிரா மாநிலம், நாக்பூரை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் ராவ்மாட் இன்டஸ்ட்ரீஸ் ப்ரைவேட் லிமிடெட். இந்த நிறுவனம் பன்முக தொழிலில் ஈடுபட்டு வருகின்றது. அந்தவகையில், நிறுவனம் பயோ சிஎன்ஜி மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தியில் களமிறங்கியிருக்கின்றது.

பல ஆயிர கணக்கான கோடி ரூபாய் மிச்சமாக போகுது! பயோ சிஎன்ஜி உற்பத்தியில் ராவ்மாட் இன்டஸ்ட்ரீஸ்!

மாசுபாட்டைக் குறைப்பதற்காக நிறுவனம் எடுத்து வரும் ஓர் முயற்சியின் அடிப்படையில் இந்த வாகனம் உருவாக்கப்பட்டிருக்கின்றது. பெட்ரோல் மற்றும் டீசலால் இயங்கும் வாகனங்களால் சுற்றுச்சூழல் மற்றும் காற்று மாசுபாடு அதிகரித்து வருகின்றது.

பல ஆயிர கணக்கான கோடி ரூபாய் மிச்சமாக போகுது! பயோ சிஎன்ஜி உற்பத்தியில் ராவ்மாட் இன்டஸ்ட்ரீஸ்!

இதனைக் கருத்தில் கொண்டு இயற்கை எரிவாயு-உயிரி எரிவாயுவை விற்பனையில் களமிறங்கியிருக்கின்றது. இவை பெட்ரோலிய எரிபொருட்களைப் போன்றில்லாமல், மிக குறைந்தளவு உமிழ்வை வெளியேற்றும் தன்மைக் கொண்டவை ஆகும்.

பல ஆயிர கணக்கான கோடி ரூபாய் மிச்சமாக போகுது! பயோ சிஎன்ஜி உற்பத்தியில் ராவ்மாட் இன்டஸ்ட்ரீஸ்!

நடப்பாண்டு பிப்ரவரி மாதம் 12ம் தேதி அன்று இதே நிறுவனம்தான் தனது முதல் சிஎன்ஜியால் இயங்கக் கூடிய டிராக்டரை அறிமுகப்படுத்தியது. இதுவே இந்தியாவின் முதல் சிஎன்ஜி டிராக்டர் ஆகும். இதனை ஒன்றிய அரசின் அமைச்சர் நிதின் கட்காரி வெளியீடு செய்தார்.

பல ஆயிர கணக்கான கோடி ரூபாய் மிச்சமாக போகுது! பயோ சிஎன்ஜி உற்பத்தியில் ராவ்மாட் இன்டஸ்ட்ரீஸ்!

இந்த நிகழ்வு தலைநகர் டெல்லியில் உள்ள மோதிலால் நேரு மாளிகையில் அரங்கேறியது. சிஎன்ஜி டிராக்டர் அறிமுக விழாவில் நரேந்திர சிங் தோமர், தர்மேந்திரா பிரதான், பர்சோட்டம் ரூபாளா மற்றும் ஜெனரல் விகே சிங் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

பல ஆயிர கணக்கான கோடி ரூபாய் மிச்சமாக போகுது! பயோ சிஎன்ஜி உற்பத்தியில் ராவ்மாட் இன்டஸ்ட்ரீஸ்!

பயோ-வாயுவானது இயற்கை கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படக் கூடிய வாயுவாகும். விவசாய கழிவுகள், உணவு கழிவுகள், உரம், நகராட்சி கழிவுகள், தாவரங்கள், கழிவுநீர் ஆகியவற்றில் இருந்தே தயாரிக்கப்படுகின்றது. இத்தகைய எரிவாயு தயாரிப்பிலேயே ராவ்மாட் மோட்டார்ஸ் தற்போது களமிறங்கியிருக்கின்றது.

பல ஆயிர கணக்கான கோடி ரூபாய் மிச்சமாக போகுது! பயோ சிஎன்ஜி உற்பத்தியில் ராவ்மாட் இன்டஸ்ட்ரீஸ்!

இந்த எரிவாயு வாகனங்களுக்கு மட்டுமின்றி உணவகம், தொழிற்சாலை (வெல்டிங் பட்டறை) போன்றவற்றிற்கும் உதவும். சமீப காலமாக இந்தியாவில் சிஎன்ஜி வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியிருக்கின்றது. குறைந்த மாசு வெளிபாடு, அதிக எரிபொருள் சிக்கனம் ஆகிய சிறப்புகளை சிஎன்ஜி வாகனங்கள் உள்ளடக்கியிருக்கின்றன.

பல ஆயிர கணக்கான கோடி ரூபாய் மிச்சமாக போகுது! பயோ சிஎன்ஜி உற்பத்தியில் ராவ்மாட் இன்டஸ்ட்ரீஸ்!

Source: ET Auto

எனவேதான் இந்த வாகனங்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரிக்கத் தொடங்கியிருக்கின்றது. இந்த நிலையிலேயே பயோ-சிஎன்ஜியை நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட இருக்கின்றது. இது, கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைத்து பல கோடி ரூபாய் அந்நியசெலாவணியைக் குறைக்க உதவும் என நம்பப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Tuesday, July 13, 2021, 11:33 [IST]
English summary
Rawmatt Industries Private LTD Offers Bio-CNG & Natural Gas. Read In Tamil.
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+