Just In
- just now 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
- 1 hr ago டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- 4 hrs ago அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- 5 hrs ago இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
Don't Miss!
- Sports ஐதராபாத் ரசிகர்களுக்கு அதிர்ச்சி.. ஹெட், அபிஷேக் சர்மா சோலி முடிஞ்ச்.. நம்ம ஆர்சிபி பவுலிங்கா இது!
- News மற்றொரு "வேங்கைவயல்" சம்பவம்? குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம்? கந்தவர்கோட்டை அருகே பகீர்
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Lifestyle முடி உதிர்ல் முதல் பொடுகு வரை அனைத்துப் பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு.. இந்த ஹேர் மாஸ்க்கை ட்ரை பண்ணுங்க...!
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
இப்படி ஒரு சேவையை ரிலையன்ஸ் இந்தியால செஞ்சிட்டு இருக்கா..! இலவச எரிபொருளை வழங்க நடமாடும் வாகனம் அறிமுகம்...
இலவச எரிபொருளை வழங்குவதற்காக நடமாடும் வாகனம் ஒன்றை ரிலையன்ஸ் மொபிலிட்டி பிபி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.
தளர்வுகளற்ற மற்றும் தீவிர ஊரடங்கு விதிகளின் காரணமாக கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பரவல் லேசாகக் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன. இருப்பினும், ஆம்புலன்ஸ்களின் அலறல்கள் ஓயாத நிலையே தற்போது நாட்டில் தென்படுகின்றது.
அவை 24 மணி நேரமும் சாலையில் இயங்கிய வண்ணமே இருக்கின்றன. அந்தவகையில், கோவிட்-19 சிகிச்சையில் முழு அர்பணிப்புடன் இயங்கிக் கொண்டிருக்கும் ஆம்புலன்ஸ்களுக்கு இலவசமாக எரிபொருளை வழங்குவதற்காக ரிலையன்ஸ் பிபி மொபிலிட்டி நிறுவனம் ஓர் வாகனத்தை தயார் செய்துள்ளது.
அந்த வாகனங்களுக்கு 'மொபைல் ப்யூவர் பவுசர்' எனும் பெயரை நிறுவனம் வைத்திருக்கின்றது. கோவிட்-19 வைரஸ் தாக்கத்தால் பெரிதும் அவதிக்குள்ளாகி வரும் மாநிலங்களில் ஒன்றான மஹாராஷ்டிராவின் மும்பை நகரத்திலேயே இந்த வாகனத்தை அறிமுகம் செய்திருப்பதாக நிறுவனம் அறிவிப்பு ஒன்றின் வாயிலாக தகவல் வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் களப் பணியில் ஈடுபட்டு வரும் ஆம்புலன்ஸ்களுக்கு இலவசமாக எரிபொருள் வழங்கும் திட்டத்தை கடந்த மார்ச் மாதத்தில் இருந்தே ரிலையன்ஸ் செய்து வருவதாக கூறப்படுகின்றது. ரிலையன்ஸ் அறக்கட்டளை வாயிலாக செய்யப்பட்டு வரும் இந்த இலவச எரிபொருள் வழங்கும் திட்டத்தின்கீழ் இதுவரை 811.07 கிலோலிட்டர் எரிபொருள் வழங்கப்பட்டிருப்பதாக நிறுவனம் கூறியுள்ளது.
இந்த எரிபொருளின் மதிப்பு ரூ. 7.30 கோடியாகும். நாடு முழுவதிலும் 21,080 ஆம்புலன்ஸ்களுக்கு எரிபொருள் இலவசமாக வழங்கப்பட்டிருக்கின்றன. இத்திட்டத்தை வரும் ஜூன் 30ம் தேதி வரை நீட்டித்திருப்பதாக ரிலையன்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. தேவைப்பட்டால் அடுத்த சில நாட்களுக்கும் இத்திட்டம் நீட்டிக்கப்படும் என்றும் அது கூறியுள்ளது.
மேலும், நாள் ஒன்றிற்கு 50 முதல் 60 கிலோ லிட்டர் எரிபொருளை இலவசமாக அது திட்டமிட்டுள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் எரிபொருள் நிலையங்கள் நகரத்திற்கு வெளிப்புறத்திலேயே இருக்கின்றன. இந்த நிலையைக் கருத்தில் கொண்டே நகரத்திற்குள் வலம் வரும் வகையில் 'மொபைல் ப்யூவல் பவுசர்' வாகனத்தை நிறுவனம் தயார்ப்படுத்தியுள்ளது.
அந்த வாகனம் மும்பையின் எம்சிஜிஎம் ஒர்லி போக்குவரத்து டெப்போ பகுதியில் நிலை நிறுத்தப்பட இருக்கின்றது. இங்கிருந்தே தேவையான ஆம்புலன்ஸ்களுக்கு இருக்கும் இடம் தேடி சென்று எரிபொருளை அந்த வாகனம் வழங்கும். இது தவிர தற்போது நாடு முழுவதும் 1,421 பெட்ரோல் நிலையங்களை நிறுவனம் இயக்கி வருகின்றது.
இவற்றின் வாயிலாகவும் கணிசமான லிட்டர் எரிபொருள்களை அவசர கால வாகனங்களான ஆம்புலன்ஸ்களுக்கு வழங்க நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது. ஆம்புலன்ஸ்கள் மட்டுமின்றி அரசு மற்றும் மருத்துவம் பிரிவுகளைச் சார்ந்த வாகனங்களுக்கும் இலவசமாக எரிபொருளை வழங்கி வருவதாக நிறுவனம் கூறியுள்ளது.
தொடர்ந்து, அரசின் அங்கீகாரத்துடன் ஆக்சிஜன் சிலிண்டர்களை ஏற்றி வரும் வாகனங்களுக்கும் இலவச எரிபொருளை வழங்கி வருகின்றது, ரிலையன்ஸ். நிறுவனத்தின் இந்த இலவச எரிபொருள் சேவையைப் பெறுவதற்கு அரசின் குறிப்பிட்ட சான்றிதழ் தேவை என கூறப்படுகின்றது. அந்த ஒப்புதல் சான்று பெற்ற வாகனங்களுக்கு மட்டுமே இலவச எரிபொருளை ரிலையன்ஸ் வழங்கி வருகின்றது.
ரிலையன்ஸ் நிறுவனம் நாட்டின் 21 முக்கிய மாநிலங்களில் அதன் எரிபொருள் நிலையங்களை அமைத்து சேவையில் ஈடுபட்டு வருகின்றது. மிக விரைவில் எரிபொருள் நிலையங்களின் எண்ணிக்கையை 5,500ஆக உயர்த்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இன்னும் 5 ஆண்டுகளில் இந்த இலக்கை நிறைவு செய்ய நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது.