Just In
- 1 min ago இது கார் இல்ல மிதக்கும் கப்பல்!! புதுசா வாங்கியிருக்கும் இந்த நடிகர் யாரென்று தெரிகிறதா?
- 15 min ago கார்ல போகும் போது அதிக சத்தமாக பாட்டு கேட்டா இப்படி ஒரு பிரச்சனைவருமா? இது பலருக்கும் தெரியாத விஷயமா இருக்கு
- 48 min ago இந்த காரை எத்தன பேரு தங்களுக்கு பிடிச்சவங்களுக்கு பரிசா கொடுக்க போறாங்களோ! அஸ்டன் மார்ட்டின் வேன்டேஜ் அறிமுகம்
- 1 hr ago வெள்ளை நிற ஹெட்லைட் போட்ட வண்டிகளுக்கு எல்லாம் அபராதம் போட போறாங்க! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
Don't Miss!
- News மொத்தமாக புரட்டி போடும்.. எல்லாம் மாறும்.. இந்த ஒரு ராசியை அடிச்சிக்க முடியாது.. குரு பெயர்ச்சி பலன்
- Movies இழுத்தடித்த த.செ.ஞானவேல்?.. உச்சக்கட்ட டென்ஷனான ரஜினிகாத்?.. வேட்டையன் நிலைமை இதுவா?
- Lifestyle Constipation: மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடணுமா? இந்த பானங்களை தினமும் குடிங்க..
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Finance மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்ய சரியான நேரம் எது? இதை நோட் பண்ணிக்கோங்க!
- Technology ரூ.56,999 க்கு அறிமுகமான OnePlus போனை ரூ.19,149 க்கு விற்கும் Amazon.. ஆல் ஏரியாவிலும் ஆர்டர் பறக்குது!
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
காலாவதிக்கு முன் காப்பீடு புதுப்பிக்கப்படவில்லை என்றால் பதிவெண் ரத்து... அரசின் உத்தரவால் அதிர்ச்சி?
வாகனங்களின் இன்சூரன்ஸ் நாட்கள் காலாவதியாவதற்கு முன்னதாக புதுப்பிக்கப்பட வேண்டும் என்ற புதிய உத்தரவை மத்திய பிரதேசத்தின் போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது. இதனை மீறும் பட்சத்தில் வாகனத்தின் பதிவெண் ரத்து செய்யப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.
மத்திய பிரதேச மாநிலத்தின் போக்குவரத்துத்துறை கடந்த 20ம் தேதி அன்று ஓர் அரசாணையை வெளியிட்டது. அதில், வாகன ஓட்டிகள் தங்களின் வாகனங்களுக்கான இன்சூரன்ஸை காலாவதி தேதிக்கு முன்னதாக கட்டாயமாக புதுப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இதனை மீறும்பட்சத்தில் வாகன ஓட்டிகள் கடுமையான பின்விளைவைச் சந்திக்க நேரிடும் எனவும் எச்சரித்துள்ளது. அதன்படி, வாகனத்தின் பதிவெண் ரத்து செய்யப்படுவது உள்ளிட்ட சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளது.
முன்னதாக புதிய வாகனங்கள் வாங்கும்போது ஓராண்டுக்கு காப்பீடு செய்வது கட்டாயமாக இருந்தது. இதனை வாகனத்தின் உரிமையாளர்கள் ஆண்டுக்கு ஒரு முறை புதுப்பித்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு காப்பீடு செய்யப்படும் வாகனங்களுக்கு ஏற்படும் சேதம் அல்லது அந்த வாகனத்தால் ஏற்படும் இழப்பு ஆகியவற்றிற்கான உரிய இழப்பீட்டை சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனங்கள் வழங்க வேண்டும் என்பது விதிமுறையாகும்.
இதேபோன்று, காப்பீடு செய்யாத வாகனங்களை இயக்கக்கூடாது என்றும் சட்டமும் கடந்த 1988ம் ஆண்டு முதல் மோட்டார் வாகன சட்டத்தில் இடம்பெற்று வருகிறது. இந்த நிலையில், நாட்டின் முதன்மை நீதிமன்றமான உச்சநீதிமன்றம் கடந்த 2018ம் ஆண்டு ஜுலை மாதம் 20ம் தேதி ஓர் உத்தரவை வெளியிட்டது.
அதில், புதிதாக பதிவு செய்யப்படும் வாகனங்கள் மூன்று அல்லது ஐந்து ஆண்டுகள் வரை கட்டாயமாக இன்சூரன்ஸ் செய்ய வேண்டும் என்ற புதிய வழிகாட்டுதலை ஐஆர்டிஏ உச்சநீதிமன்றம் வழங்கியிருந்தது. இதன்மூலம், நாட்டில் இயக்கப்படும் 40 முதல் 50 சதவீதம் வரையான காப்பீடு பெறாத வாகனங்கள், முறையான இன்சூரன்ஸை பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த விதிமுறையை பொது காப்பீட்டு நிறுவனங்கள் இன்றளவும் நடைமுறைக்குக் கொண்டுவரவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், மத்திய பிரதேச மாநில போக்குவரத்துத்துறை அதிகாரிகள், வாகனத்தின் இன்சூரன்ஸை காலாவதி தேதிக்கு முன்னதாக புதிப்பிக்க வேண்டும், அவ்வாறு இல்லையெனில், வாகனங்களின் பதிவெண் ரத்து செய்யப்படும் என வாகன ஓட்டிகளுக்கு புதிய எச்சரிக்கையை விடுத்துள்ளனர். இதுகுறித்த அம்மாநிலத்தின் போக்குவரத்துத்துறை ஆணையர் சைலேந்திர ஸ்ரீவஸ்தவா டிஓஐ-க்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,
"உச்ச மற்றும் உயர் நீதிமன்றங்களின் உத்தரவைத் தொடர்ந்து இந்த புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மூன்று வருடங்களுக்கான காப்பீட்டுத் திட்டம், தற்போது காப்பீட்டாளர்களால் வழங்கப்படவில்லை. எனவே, விண்ணப்பதாரர்கள் இந்த ஒரு வருட காப்பீட்டு காலம் முடிவடைந்த பின்னர், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான காப்பீட்டையும் சேர்த்து புதுப்பிக்க வேண்டும்" என தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், "நீதிமன்ற உத்தரவின் படி, அனைத்து பொது காப்பீட்டு நிறுவனங்களுக்கும் புதிய கார்களுக்கு மூன்று வருட மூன்றாம் நபர் காப்பீடும் மற்றும் புதிய இருசக்கர வாகனங்களுக்கு ஐந்து ஆண்டு மூன்றாம் நபர் காப்பீட்டையும் வழங்க வேண்டும்" என கூறினார்.
மோட்டார் வாகனங்கள் சட்டம், மூன்றாம் நபர் காப்பீட்டு திட்டத்தை கட்டாயமாக்கியுள்ளது. இது வாகன திருட்டு மற்றும் சேதம் உள்ளிட்டவற்றை கவர் செய்ய உதவுகிறது. தற்போது வாகனங்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு வருடம் அல்லது மூன்று ஆண்டுகள் என்ற காப்பீடு திட்டம் காருக்கும், ஐந்து வருட காப்பீடு திட்டம் இருசக்கர வாகனங்களுக்கும் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
-
கேரளா கேரளாதான்யா! 100 வயசு கார் டிரைவரை பார்த்து மிரண்டு நிற்கும் மக்கள்! காருக்கே 50 வயசு ஆச்சுங்க!
-
இந்த விலைக்கு இப்படி ஒரு ஹூண்டாய் காரா! எவ்ளோனு தெரிஞ்சா இப்பவே ஷோரூமுக்கு வண்டிய எடுத்துருவீங்க!
-
2.5 லட்சத்தில் எந்த பைக்கை வாங்குவது என தெரியாமல் முழிக்கிறீங்களா? ஹீரோவில் இருந்து ஜாவா வரையில்!!