காரில் இருந்து எச்சில் துப்பினால், குப்பை போட்டால் அபராதம்... எவ்ளோனு தெரிஞ்சா இனி இந்த தப்ப செய்ய மாட்டீங்க!

ஓடும் வாகனங்களில் இருந்து எச்சில் துப்புபவர்கள், குப்பை போடுபவர்களுக்கு அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

காரில் இருந்து எச்சில் துப்பினால், குப்பை போட்டால் அபராதம்... எவ்ளோனு தெரிஞ்சா இனி இந்த தப்ப செய்ய மாட்டீங்க!

உத்தர பிரதேச மாநிலத்தின் பெரிய நகரங்களில் கார்கள் உள்ளிட்ட ஓடும் வாகனங்களில் இருந்து எச்சில் துப்புபவர்கள் மற்றும் குப்பை போடுபவர்களுக்கு வெகு விரைவில் 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தற்போது அதிரடியாக அறிவித்துள்ளார். இந்த திட்டத்தை விரைவில் அமலுக்கு கொண்டு வருவதற்கு உத்தர பிரதேச அரசு முடிவு செய்துள்ளது.

காரில் இருந்து எச்சில் துப்பினால், குப்பை போட்டால் அபராதம்... எவ்ளோனு தெரிஞ்சா இனி இந்த தப்ப செய்ய மாட்டீங்க!

எனவே வெகு விரைவில் அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் பெறுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. ஓடும் வாகனங்களில் இருந்து எச்சில் துப்புவது மற்றும் குப்பை போடுவது போன்ற காரியங்களை செய்வதை பலர் வாடிக்கையாக வைத்துள்ளனர். இதனால் சுற்றுப்புற தூய்மை பாதிக்கப்படுகிறது.

காரில் இருந்து எச்சில் துப்பினால், குப்பை போட்டால் அபராதம்... எவ்ளோனு தெரிஞ்சா இனி இந்த தப்ப செய்ய மாட்டீங்க!

எனவே தூய்மையை பேணி காக்கும் விதமாகதான், ஓடும் வாகனங்களில் இருந்து எச்சில் துப்புபவர்கள் மற்றும் குப்பை போடுபவர்களுக்கு 1,000 ரூபாய் அபராதம் விதிக்கும் திட்டத்தை உத்தர பிரதேச அரசு முன்னெடுத்துள்ளது. இதன் மூலம் வருங்காலங்களில் இந்த தவறை மக்கள் செய்ய மாட்டார்கள் என உத்தர பிரதேச அரசு நம்புகிறது.

காரில் இருந்து எச்சில் துப்பினால், குப்பை போட்டால் அபராதம்... எவ்ளோனு தெரிஞ்சா இனி இந்த தப்ப செய்ய மாட்டீங்க!

இதுதவிர பெட்ரோல், டீசல் வாகனங்களால் ஒவ்வொரு ஆண்டும் காற்றின் தரம் மோசமடைந்து கொண்டே வருவதால், உத்தர பிரதேச மாநிலத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை மற்றும் உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படியும் அதிகாரிகளுக்கு, முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

காரில் இருந்து எச்சில் துப்பினால், குப்பை போட்டால் அபராதம்... எவ்ளோனு தெரிஞ்சா இனி இந்த தப்ப செய்ய மாட்டீங்க!

அத்துடன் உத்தர பிரதேச மாநிலத்தில் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி ஆலையை அமைக்கும் நிறுவனங்களுக்கு அனைத்து வகையான உதவிகளையும் மாநில அரசு செய்து கொடுக்கும் எனவும் முதல்வர் யோகி ஆதித்யநாத் உறுதி தெரிவித்துள்ளார். மேலும் உத்தர பிரதேச மாநிலத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்கும் திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

காரில் இருந்து எச்சில் துப்பினால், குப்பை போட்டால் அபராதம்... எவ்ளோனு தெரிஞ்சா இனி இந்த தப்ப செய்ய மாட்டீங்க!

இதன்படி எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு சாலை வரி மற்றும் பதிவு கட்டணத்தில் இருந்து விலக்கு வழங்குவது தொடர்பாக முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியுள்ளார். இந்த திட்டம் எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துவதற்கு மக்களை ஊக்குவிப்பதாக இருக்கும். அத்துடன் மக்கள் மத்தியில் எலெக்ட்ரிக் வாகனங்கள் குறித்து விழிப்புணர்வும் ஏற்படும்.

காரில் இருந்து எச்சில் துப்பினால், குப்பை போட்டால் அபராதம்... எவ்ளோனு தெரிஞ்சா இனி இந்த தப்ப செய்ய மாட்டீங்க!

எலெக்ட்ரிக் வாகன துறை தற்போதுதான் மெல்ல மெல்ல வளர்ந்து கொண்டிருப்பதால், பெரிய முதலீடுகளை ஈர்க்கும் வகையில், அரசின் கொள்கைகளை எளிமையாக்குவது மிகவும் அவசியமானது எனவும் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். இந்தியா உள்பட கிட்டத்தட்ட உலகின் அனைத்து நாடுகளின் கவனமும் தற்போது எலெக்ட்ரிக் மற்றும் மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களின் மீது திரும்பியுள்ளது.

காரில் இருந்து எச்சில் துப்பினால், குப்பை போட்டால் அபராதம்... எவ்ளோனு தெரிஞ்சா இனி இந்த தப்ப செய்ய மாட்டீங்க!

பெட்ரோல், டீசல் வாகனங்களை போல், எலெக்ட்ரிக் வாகனங்கள் சுற்றுச்சூழலை பாதிக்காது என்பது அவற்றின் முக்கியமான சிறப்பம்சமாக உள்ளது. அத்துடன் இந்தியா போன்ற நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை மிகவும் அதிகமாக இருப்பதால், மக்களும் எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துவதற்கு அதிக ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளனர்.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Rs.1000 Fine For Spitting, Littering From A Car In Uttar Pradesh - Details. Read in Tamil
Story first published: Wednesday, February 3, 2021, 15:56 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X