Just In
- 56 min ago சாதாரணமா பஸ்ஸில் பயணம் செய்தது இவ்ளோ பெரிய ஆளா... முகத்தை நல்லா உத்து பார்த்ததும் ஷாக் ஆன மக்கள்...
- 1 hr ago சிட்ரோன், ஜீப் காரை வாங்கப்போறீங்களா? இப்ப போன பணத்தை மிச்சம் பண்ணலாம்! ஏப்30க்கு பிறகு காஸ்ட்லியாகிடும்!
- 2 hrs ago இது கார் இல்ல மிதக்கும் கப்பல்!! புதுசா வாங்கியிருக்கும் இந்த நடிகர் யாரென்று தெரிகிறதா?
- 2 hrs ago கார்ல போகும் போது அதிக சத்தமாக பாட்டு கேட்டா இப்படி ஒரு பிரச்சனைவருமா? இது பலருக்கும் தெரியாத விஷயமா இருக்கு
Don't Miss!
- News மதம் Vs மக்கள் திட்டங்கள்: பாஜகவின் கடலோர கர்நாடகா கோட்டையின் 3 தொகுதிகளை வேட்டையாடுமா காங்கிரஸ்?
- Lifestyle கத்திரிக்காயை இந்த மாதிரி ஒருமுறை பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க...
- Finance வெயிலுக்கு ஏத்த பிஸ்னஸ்.. சும்மா சொல்லக்கூடாது முகேஷ் அம்பானி வேற லெவல்..! .
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- Movies ஒரே டிப்ரெஷன்.. வாழ்க்கையே போச்சு.. தப்பான முடிவை எடுக்க பார்த்த நடிகை.. சட்டென திறந்த கதவு!
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
காரில் இருந்து எச்சில் துப்பினால், குப்பை போட்டால் அபராதம்... எவ்ளோனு தெரிஞ்சா இனி இந்த தப்ப செய்ய மாட்டீங்க!
ஓடும் வாகனங்களில் இருந்து எச்சில் துப்புபவர்கள், குப்பை போடுபவர்களுக்கு அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
உத்தர பிரதேச மாநிலத்தின் பெரிய நகரங்களில் கார்கள் உள்ளிட்ட ஓடும் வாகனங்களில் இருந்து எச்சில் துப்புபவர்கள் மற்றும் குப்பை போடுபவர்களுக்கு வெகு விரைவில் 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தற்போது அதிரடியாக அறிவித்துள்ளார். இந்த திட்டத்தை விரைவில் அமலுக்கு கொண்டு வருவதற்கு உத்தர பிரதேச அரசு முடிவு செய்துள்ளது.
எனவே வெகு விரைவில் அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் பெறுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. ஓடும் வாகனங்களில் இருந்து எச்சில் துப்புவது மற்றும் குப்பை போடுவது போன்ற காரியங்களை செய்வதை பலர் வாடிக்கையாக வைத்துள்ளனர். இதனால் சுற்றுப்புற தூய்மை பாதிக்கப்படுகிறது.
எனவே தூய்மையை பேணி காக்கும் விதமாகதான், ஓடும் வாகனங்களில் இருந்து எச்சில் துப்புபவர்கள் மற்றும் குப்பை போடுபவர்களுக்கு 1,000 ரூபாய் அபராதம் விதிக்கும் திட்டத்தை உத்தர பிரதேச அரசு முன்னெடுத்துள்ளது. இதன் மூலம் வருங்காலங்களில் இந்த தவறை மக்கள் செய்ய மாட்டார்கள் என உத்தர பிரதேச அரசு நம்புகிறது.
இதுதவிர பெட்ரோல், டீசல் வாகனங்களால் ஒவ்வொரு ஆண்டும் காற்றின் தரம் மோசமடைந்து கொண்டே வருவதால், உத்தர பிரதேச மாநிலத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை மற்றும் உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படியும் அதிகாரிகளுக்கு, முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் உத்தர பிரதேச மாநிலத்தில் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி ஆலையை அமைக்கும் நிறுவனங்களுக்கு அனைத்து வகையான உதவிகளையும் மாநில அரசு செய்து கொடுக்கும் எனவும் முதல்வர் யோகி ஆதித்யநாத் உறுதி தெரிவித்துள்ளார். மேலும் உத்தர பிரதேச மாநிலத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்கும் திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதன்படி எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு சாலை வரி மற்றும் பதிவு கட்டணத்தில் இருந்து விலக்கு வழங்குவது தொடர்பாக முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியுள்ளார். இந்த திட்டம் எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துவதற்கு மக்களை ஊக்குவிப்பதாக இருக்கும். அத்துடன் மக்கள் மத்தியில் எலெக்ட்ரிக் வாகனங்கள் குறித்து விழிப்புணர்வும் ஏற்படும்.
எலெக்ட்ரிக் வாகன துறை தற்போதுதான் மெல்ல மெல்ல வளர்ந்து கொண்டிருப்பதால், பெரிய முதலீடுகளை ஈர்க்கும் வகையில், அரசின் கொள்கைகளை எளிமையாக்குவது மிகவும் அவசியமானது எனவும் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். இந்தியா உள்பட கிட்டத்தட்ட உலகின் அனைத்து நாடுகளின் கவனமும் தற்போது எலெக்ட்ரிக் மற்றும் மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களின் மீது திரும்பியுள்ளது.
பெட்ரோல், டீசல் வாகனங்களை போல், எலெக்ட்ரிக் வாகனங்கள் சுற்றுச்சூழலை பாதிக்காது என்பது அவற்றின் முக்கியமான சிறப்பம்சமாக உள்ளது. அத்துடன் இந்தியா போன்ற நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை மிகவும் அதிகமாக இருப்பதால், மக்களும் எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துவதற்கு அதிக ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளனர்.
Note: Images used are for representational purpose only.
-
கேரளா கேரளாதான்யா! 100 வயசு கார் டிரைவரை பார்த்து மிரண்டு நிற்கும் மக்கள்! காருக்கே 50 வயசு ஆச்சுங்க!
-
40அடி நீள சொகுசு படகை வாங்கினாரா நடிகர் மாதவன்! ஒட்டுமொத்த இந்தியாவையும் ஆச்சரியத்துல மூழ்க வச்சுட்டாரு!
-
வெளிநாட்டுகாரன் எல்லாம் உஷாராகிட்டான் ! இந்த கம்பெனி வண்டியோட ஏற்றுமதி படுத்துக்கிச்சு!