பேப்பர் எல்லாம் கரெட்டா இருக்கா? முக்குக்கு முக்கு நின்னு செக் பண்றாங்க! ஒரே நாளில் ரூ6.92லட்சம் அபராதம் வசூல்
வாகனங்களில் பேப்பர்கள் எல்லாம் சரியாக இருக்கிறதா என ஜார்க்கண்ட் மாநிலத்தில் சமீபத்தில் பெரும் வாகன தணிக்கை நடந்ததது. இதில் ஒரே நாளில் ரூ6.92 லட்சம் வசூலாகியுள்ளது. இது குறித்த விபரங்களைக் காணலாம்.

இந்தியா முழுவதும் தினமும் கோடிக்கணக்கான வாகனங்கள் சாலையில் இயங்குகிறது. பொதுவாக வாகனங்களைச் சாலைகளில் இயக்க இந்தியாவில் சில சட்ட திட்டங்கள் உள்ளது. அதன்படி உரிய அனுமதி பெற்றே வாகனங்கள் இயக்கப்பட வேண்டும். ஆனால் சில வாகனங்கள் உரியச் சான்று இல்லாமல் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில் அவ்வப்போது போக்குவரத்து அதிகாரிகள் சாலைகளில் வாகனங்களின் சான்றுகளைச் சோதனை செய்யும் பணியில் ஈடுபடுபவர்கள். போக்குவரத்து அலுவலகர்கள் மற்றும் போலீசார் இணைந்தே இந்த சோதனைகளை நடத்தி வருவார்கள்.

இந்நிலையில் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் சமீபத்தில் போக்குவரத்து அதிகாரிகள் ரூட்டு, டாலாடலி, பத்ந்ரா, மற்றும் தஷ்ஷம் ஃபால்ஸ் ஆகிய இடங்களில் சோதனை செய்தனர். காலை 5 மணி முதல் மாலை 4 மணி வரை சோதனை நடத்தப்பட்டது. மாவட்ட போக்குவரத்து அதிகாரி பிரவீன் பிரகாஷ் தலைமையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

இந்த ஆய்வில் 65 கமர்ஷியம் வாகனங்கள் உட்பட மொத்தம் 235 வாகனங்கள் உரிய ஆவணங்கள் இல்லாமல் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது வரி கட்டுவதில் முறைகேடு, அதிக பாரம் ஏற்றிச் செல்வது, புகை சான்று, உள்ளிட்ட சான்றுகள் இல்லாததால் அந்த வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

இதில் ஒரே நாளில் மொத்தம் ரூ 6,92,765 அபராதமா வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் விதிமுறைகளை மீறி பயன்பாட்டிலிருந்த 3 கமர்ஷியல் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ராஞ்சி பகுதியில் மாடு திருட்டு அதிகம் நடக்கிறது. சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளைச் சிலர் வாகனங்களை வந்து இரவோடு இரவாகத் திருடிச்சென்று விடுகின்றனர்.

இந்த மாடு திருடர்களைப் பிடிக்க இரவு 12 மணி முதல் காலை 7 மணி வரை போலீசார் தனியாக ரவுண்ட்ஸ் செய்கின்றனர். அம்மாநிலத்தைப் பொறுத்தவரை கொரோனா காலத்தில் செயல்பாட்டில் இல்லாத காரணத்தால் கமர்ஷியல் மற்றும் பள்ளி வாகனத்திற்கு வரி விலக்கு அளிக்கப்பட்டது.

இதே போலப் பஞ்சாப் மாநிலத்திலும் போதை மருந்து கடத்தைத் தடுக்க கடந்த சனிக்கிழமை 10 ஆயிரம் போலீசார் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை இந்த தணிக்கை என்பது நடந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications