பாக், சீனாவை சுக்குநூறாக்கும் இந்தியாவின் புதிய ஆயுதம்.. என்னவென்று தெரிந்தால் அமெரிக்காவே நடுங்கும்
பாகிஸ்தான், சீனாவை சுக்குநூறாக்கும் புதிய ஆயுதத்தை இந்தியா களமிறக்கவுள்ளது. இது என்னவென்று தெரிந்தால் அமெரிக்காவே நடுங்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
பாகிஸ்தான், சீனாவை சுக்குநூறாக்கும் புதிய ஆயுதத்தை இந்தியா களமிறக்கவுள்ளது. இது என்னவென்று தெரிந்தால் அமெரிக்காவே நடுங்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

மூன்று பக்கம் நீராலும், ஒரு பக்கம் நிலத்தாலும் சூழப்பட்டுள்ள, உலகின் மிகப்பெரிய தீபகற்ப நாடுகளில் ஒன்றாக திகழும் இந்தியாவிற்கு, அண்டை நாடுகளிடம் இருந்து எந்நேரமும் அச்சுறுத்தல் இருந்து கொண்டேதான் உள்ளது.

குறிப்பாக இந்தியாவின் பரம எதிரியான பாகிஸ்தான், வடக்கு எல்லையில் நமக்கு அச்சுறுத்தலை கொடுத்து கொண்டே இருக்கிறது. அதே சமயம் வட கிழக்கு எல்லையில், தந்திர நரியான சீனா மற்றொரு பெரும் அச்சுறுத்தலாக விளங்கி கொண்டுள்ளது.

பாகிஸ்தான், சீனா ஆகிய இரண்டு நாடுகளும் அவ்வப்போது இந்தியாவின் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து, நமது நிலப்பரப்பை ஆக்கிரமிக்க முயற்சி செய்து வருகின்றன. ஆனால் நமது இந்திய ராணுவ வீரர்கள் விடாப்பிடியாக அதற்கு முட்டுக்கட்டை போட்டு வருகின்றனர்.

பாகிஸ்தான், சீனா ஆகிய இரண்டு நாடுகளையும் ஒரு சேர சமாளிக்க வேண்டிய நிர்பந்தம் இந்தியாவிற்கு உள்ளது. இந்தியாவிற்கு அச்சுறுத்தலாக விளங்கும் பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகள் தங்களுக்குள் நட்பு பாராட்டி கொள்வதால், எந்நேரமும் போர் அபாயம் நிலவி கொண்டேதான் இருக்கிறது.

அவர்களிடம் இருந்து இந்தியாவிற்கு சொந்தமான நிலப்பரப்பையும், நாட்டு மக்களையும் பாதுகாத்தாக வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு நமது ராணுவ வீரர்களுக்கு உள்ளது. இதனை புரிந்து கொண்ட மத்திய அரசு, இந்திய ராணுவத்தின் பலத்தை பன்மடங்காக பெருக்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, தற்போது இந்தியா கையில் எடுத்திருக்கும் புதிய ஆயுதம்தான் எஸ்-400 ஏவுகணைகள் (S-400 Defence Missile). உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்த இடைமறி ஏவுகணையாக கருதப்படும் எஸ்-400 ஏவுகணைகள், எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும்.

எதிரி நாடுகள் ஏவும் எப்பேர்ப்பட்ட ஏவுகணைகளையும் தடுத்து நிறுத்தி, அவற்றை அழித்தொழிக்கும் ஆற்றல் எஸ்-400 ஏவுகணைகளுக்கு உள்ளது. இதனால்தான் எஸ்-400 ஏவுகணைகள் உலகின் அதிசக்தி வாய்ந்த இடைமறி ஏவுகணைகளாக கருதப்படுகின்றன.

குறிப்பிட்ட வகையிலான தரை கட்டமைப்புகளில் இருந்து மட்டும்தான் எஸ்-400 ஏவுகணைகளை ஏவ முடியும் என்பது கிடையாது என்பது இங்கே கவனிக்க வேண்டிய விஷயம். எந்த இடத்தில் இருந்து வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் எஸ்-400 ஏவுகணைகளை உடனடியாக ஏவ முடியும்.

ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு, எஸ்-400 ஏவுகணைகளை கொண்டு செல்வதும் மிக எளிதான விஷயம்தான். எதிரிகளின் போர் விமானங்கள், வேவு பார்க்க கூடிய விமானங்களையும், தாக்கி அழித்து விடும் வல்லமை எஸ்-400 ஏவுகணைகளுக்கு உள்ளது.

எஸ்-400 ஏவுகணைகளில் உள்ள ரேடார், 600 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளை கூட எளிதாக கண்டுபிடித்து விடும். எனவே இந்திய எல்லைக்கு வெளியே பறக்கும் எதிரிகளின் விமானங்களை, கண்டறிந்து தாக்கும் ஆற்றலும் எஸ்-400 ஏவுகணைகளுக்கு உள்ளது.

இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் நிறைந்த எஸ்-400 அதிநவீன ஏவுகணைகளை தற்போது ரஷ்யா தயாரித்து கொண்டுள்ளது. எனவே பாகிஸ்தான் மற்றும் சீனாவின் அச்சுறுத்தல்களை சமாளிக்கும் விதமாக, ரஷ்யாவிடம் இருந்து, எஸ்-400 ஏவுகணைகளை வாங்க இந்தியா முடிவு செய்தது.

ரஷ்யாவிடம் இருந்து எஸ்-400 ஏவுகணைகளை வாங்குவது தொடர்பான ஒப்பந்தத்தில், கடந்த 2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியா கையெழுத்திட்டது. இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு சுமார் 40 ஆயிரம் கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையிட்டதாக ரஷ்யாவின் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதன் காரணமாக ரஷ்யா மீது அமெரிக்கா பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது.

எனவே ரஷ்யாவிடம் இருந்து ராணுவ தளவாடங்களை வாங்கும் அனைத்து நாடுகளின் மீதும் பொருளாதார தடைகள் விதிக்கப்படும் எனவும் அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த சூழலில்தான், ரஷ்யாவிடம் இருந்து எஸ்-400 ஏவுகணைகளை வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டது.

ஆனால் இதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ரஷ்யாவிடம் இருந்து எஸ்-400 ஏவுகணைகளை வாங்கினால், இந்தியா மீதும் பொருளாதார தடைகளை விதிக்க தயங்க மாட்டோம் என அமெரிக்கா கொக்கரித்தது. ஆனால் மோடி தலைமையிலான மத்திய அரசு இதையெல்லாம் ஒரு பொருட்டாகவே எடுத்து கொள்ளவில்லை.

திட்டமிட்டபடி எஸ்-400 ஏவுகணைகளை, ரஷ்யாவிடம் இருந்து வாங்க இந்தியா மிக துணிச்சலாக ஒப்பந்தம் செய்து கொண்டது. இந்த சூழலில், எஸ்-400 ஏவுகணைகளை இந்தியாவிற்கு வழங்கும் பணிகளை, ரஷ்யா வெகு விரைவில் தொடங்கவுள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

அதாவது அதிநவீன எஸ்-400 ஏவுகணைகளை, இந்தியாவிற்கு வழங்கும் பணிகளை, அடுத்த ஆண்டு (2020) அக்டோபர் மாதம் ரஷ்யா தொடங்குகிறது. இதன்பின் 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள்ளாக, அனைத்து எஸ்-400 ஏவுகணைகளையும் இந்தியாவிடம் ரஷ்யா ஒப்படைத்து விடும்.

எஸ்-400 ஏவுகணைகளை வாங்குவது தொடர்பான ஒப்பந்தம் குறித்து, நாடாளுமன்றத்தின் மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு மத்திய அமைச்சர் சுபாஷ் பாம்ப்ரே பதிலளித்தார். அப்போதுதான் இந்த தகவல்களை எல்லாம் அவர் வெளியிட்டார்.

எஸ்-400 ஏவுகணைகள் மூலமாக இந்திய ராணுவத்தின் பலம் பன்மடங்கு அதிகரிக்கும். அப்படிப்பட்ட எஸ்-400 ஏவுகணைகள் வெகு விரைவில் இந்திய ராணுவத்தில் இணைய உள்ளதால், பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய இரண்டு நாடுகளும் கதிகலங்கி போயுள்ளன.

இந்திய ராணுவத்தில் விரைவில் இணையவுள்ள எஸ்-400 ஏவுகணைகள், பாகிஸ்தான், சீனா மட்டுமல்லாது அமெரிக்காவையே அச்சுறுத்த கூடிய வல்லமை வாய்ந்தவை. ஒரே நேரத்தில் 36 இலக்குகளை குறி வைத்து தாக்கும் திறனையும் எஸ்-400 ஏவுகணைகள் பெற்றுள்ளன.

ரஷ்யாவிடம் இருந்து எஸ்-400 ஏவுகணைகளை இந்தியா வாங்க கூடாது என அமெரிக்கா கூறியதற்கு இதுவும் ஓர் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. ஆனால் நட்பு நாடு என்ற அடிப்படையில் எஸ்-400 ஏவுகணைகளை இந்தியாவிற்கு வழங்க ரஷ்யா ஒப்புக்கொண்டது.

இதன்பின்புதான் இந்தியா, ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அமெரிக்காவையே அலற விடும் எஸ்-400 ஏவுகணைகள் இந்தியாவிற்கு வெகு விரைவில் கிடைக்க இருப்பதால், நமது ராணுவத்தின் பலம் இனி பெருமளவு அதிகரிக்கும் என்பதில் எள் அளவு கூட சந்தேகம் வேண்டாம்.


Click it and Unblock the Notifications








