உயிர் காக்கும் தலைக்கவசத்திற்கு சச்சின் டெண்டுல்கர் செய்த வைரல் பிராச்சாரம்..!!
உயிர் காக்கும் தலைக்கவசத்திற்கு சச்சின் டெண்டுல்கர் செய்த வைரல் பிராச்சாரம்..!!
திருவனந்தபுரத்தில் சாலையில் சென்றுகொண்டு இருந்த சச்சின் டெண்டுல்கர், காரை நிறுத்தி மோட்டார் சைக்கிள் பயணிகளிடம் ஹெல்மெட் அணிந்து பயணிக்குமாறு அறிவுறுத்தினார்.

4வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் கலந்தகொள்ள கேரள முதலமைச்சர் பினராய் விஜயனை அழைக்க திருவனந்தபுரம் சென்றிருந்தா சச்சின் டெண்டுல்கர்.

பினராய் விஜயனுக்கு அழைப்பு விடுத்து விட்டு, விமான நிலையத்திற்கு காரில் செல்லையில் சச்சின் டெண்டுல்கர் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்தவர்களை சச்சின் கண்டார்.

உடனே காரை நிறுத்துமாறு டிரைவரிடம் கூறிய சச்சின்,கார் கண்ணாடிகளை திறந்து, மோட்டார் சைக்கிள் பயணிகளிடம் அவர் பேசத்தொடங்கினார்.
Recommended Video


சச்சின் டெண்டுல்கரை பார்த்து ஆச்சர்யத்தில் வாயடைத்து போன அந்த பயணிகளிடம் அவர், ஹெல்மெட் அணிந்து பைக்குகளை ஓட்டுமாறு அறிவுறுத்தினார்.

மேலும் அதே வழியாக ஒரு ஆணுக்கு பின்னால் பைக்கில் அமர்ந்து வந்த பெண் ஹெல்மெட் அணியாமல் இருந்தார்.

அப்பெணிடன் பில்லியனில் அமர்ந்து பைக்கில் செல்பவர்களும் ஹெல்மெட் அணியவேண்டும் என்று சச்சின் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தார்.

டெண்டுல்கரை பார்த்து திகைத்து போன அப்பெண், சுதாரித்து ஹெல்மெட் அணியாமல் பைக்கில் சென்றதற்கு அவரிடம் வருத்த தெரிவித்தார்.

மேலும் இனிமேல் பைக் பயணங்களின் போது பில்லியனில் இருந்தாலும் ஹெல்மெட் அணிந்து தான் செல்வேன் என்று அந்த பெண் சச்சினுக்கு உறுதியளித்தார்.

கேரளாவில் காரில் இருந்தபடியே வாகன ஓட்டிகளிடம் ஹெல்மெட் குறித்து சச்சின் டெண்டுல்கர் மேற்கொண்ட இந்த விழிப்புணர்வு பிரச்சாரம்,
ஃபேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்டவற்றில் வீடியோவாக வெளியாகி, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.


Click it and Unblock the Notifications








