விபத்தின்போது விமானத்தில் எந்த இடத்தில் அமர்ந்திருந்தால் உயிர் பிழைக்கும் வாய்ப்பு அதிகம்!
விமான இருக்கைகள் அமைந்திருக்கும் பகுதிகள் ஆபத்துக்காலத்தில் எந்தளவிற்கு உயிர் பிழைக்கும் வாய்ப்பை தருகின்றன என்பதை குறித்து அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் வழியே பார்க்கலாம்.
விமான விபத்துகளின் படி உயிர் பிழைப்பதற்கான சாத்திய கூறுகள் குறைவு தான் என்றாலும், இதற்காக நடைபெற்ற சில ஆய்வு முடிவுகள் விமானங்களில் உள்ள இருக்கைகளை வைத்து மாறான ஒரு கருத்தை தெரிவிக்கின்றன.

உலகிலேயே விமானம் பயணம் என்பது மிகவும் பாதுகாப்பான போக்குவரத்தாக உள்ளது. ஆனால், உலகில் வாழும் பலரில் பெரும்பாலானவர்கள் விமானத்தில் பயணித்திருக்க மாட்டார்கள்.

பயணம் செய்யாதவர்களின் சதவீதம் அதிகமாகயிருப்பதுனாலோ என்னவோ, விமானப் பயணம் என்றாலே அது ஆபத்து நிறைந்ததாக ஒரு கருத்து பெரும்பாலானவர்களிடம் நிலவுகிறது.

ஆபத்து என்பது விமான போக்குவரத்தில் மட்டும் அல்ல, எல்லா இடங்களிலும், எல்லா பரிமாணங்களிலும் தான் உள்ளன. அவற்றை சாமளிக்கும் நிலையில் இருப்பதால் தான் நாம் மனிதர்கள்.

விமான போக்குவரத்து பாதுகாப்பானதாக இருந்தாலும், ஆபத்து என்று நாம் பேசும்போது, அதற்கான சாத்தியக் கூறுகள் விமான பயணங்களில் எவ்வாறு ஏற்படுகின்றது என்பதை நாம் ஆராயவேண்டும்.

நிச்சயமாக நிலத்தில் நடப்பதை விட, ஆகாயத்தில் நடக்கும் விபத்துகள் குறைவு தான். அதற்கான விகிதாச்சாரம் தொடர்ந்து அவ்வாறே இருந்து வருகிறது. இருந்தாலும் விமான பயணிங்களில் ஏற்படும் ஆவசர கதியில் உயிர் பிழைக்கும் வாய்ப்புகள் என்பது ஒரு பெரிய சவால் தான்.

விமான பயணத்தில் ராடாரில் இருந்து மறைந்தபோவது, உற்பத்தியில் குறைபாடு மற்றும் தட்பவெட்ப நிலையின் போது விமானத்தை இயக்குவதில் அலட்சியம் ஆகியவை தான் விமான விபத்திற்கான காரணமாக அமைந்துவிடுக்கின்றன.

விமானம் விபத்தில் சிக்கிக் கொண்டாலும், பயணிகள் அதில் எங்கு அமர்ந்திருக்கிறார்களோ அந்த இருக்கைகளின் பகுதிகள் அவர்களுக்கு உயிர் பிழைக்கும் வாய்ப்பை தரும் என அமெரிக்காவில் நடத்தப்பட்ட சில ஆய்வு முடிவுகள் கூறியுள்ளன.

அமெரிக்காவில் நடைபெறும் விமான விபத்துகளை குறித்த முழுமையான தரவுகளை அந்நாட்டின் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு ஆணையகம் தான் வைத்திருக்கும்.

ஆணையத்தில் அந்த தகவலை வைத்தே பல ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். விமானத்தின் இருக்கை பகுதிகள் ஆபத்துக் காலத்தில் பயணிகளுக்கு பாதுகாப்பு அளிப்பதில் எத்தனை முக்கிய பங்காற்றுகின்றன என்பது குறித்த ஆய்வு அதிக கவனம் ஈர்க்கிறது.

விமானத்தை மூன்று விதமாக நாம் பிரிக்கலாம், தலை- இது விமானிகள் உட்காரும் காக்பிட் பகுதி, மத்தியப்பகுதி, இது பயணிகளுக்கான பகுதி. வால்பகுதி- இதுவும் பயணிகளுக்கான பகுதி தான் என்றாலும், அவர்களது உடமைகளும் இதில் வைக்கப்படும்.

1971ம் ஆண்டு வரை அமெரிக்காவில் இயக்கப்பட்ட விபத்து நேர்ந்த விமானங்களை பற்றிய ஆய்வு 2007ம் ஆண்டு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் விபத்துகளின் போது உயிர் பிழைத்தவர்களிடமும் மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வின் போது விமான விபத்துகளில் உயிர் பிழைத்தவர்களிடம் எந்த இருக்கையில் அமர்ந்திருந்தீர்கள் என்ற கேள்வி முக்கியமாக கேட்கப்பட்டது.

அப்போது, அவர்கள் தெரிவித்த தகவலின்படி, விமானங்களின் பின்பகுதி (வால் பகுதி) மற்றும் இறகுகளின் விளிம்புப் பகுதி ஆகிய இடங்களில் அமர்ந்தால், ஆபத்துக் காலத்தில் 69 சதவீதம் பயணிகள் உயிர் பிழைக்க வாய்ப்புள்ளதற்கான சாத்தியக் கூறுகள் முடிவுகளில் தெரியவந்தன.

மேலும் இறக்கை பகுதியை தாண்டியுள்ள இடம் மற்றும் கோச்சின் அருகில் இருந்தால் 56 சதவீதம் தப்பிப் பிழைக்க வாய்ப்பிருப்பதாக அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளன.

மேலும் காக்பிட் மற்றும் விமானப் பணிபெண்கள் இருக்கும் முன்பகுதியில் உள்ள 15 இருக்கைகளில் அமர்ந்து பயணிப்பவர்களுக்கு 49 சதவீதம் ஆபத்துக்காலத்தில் உயிர் பிழைக்க வாய்பிருப்பதாகவும் முன்னர் நடத்தப்பட்ட அந்த ஆய்வில் முடிவுகள் கூறுகின்றன.

புதியதாக டைம் என்ற அமைப்பு 2015ம் ஆண்டில் விமானப் பயணத்திற்கான பாதுகாப்பை குறித்து நடத்திய 2வது கட்ட ஆய்விலும் இதே முடிவுகள் தான் வெளியாயின. ஆனால் சதவீத அடிப்படையில் சில மாற்றங்களை இந்த புதிய ஆய்வு ஆய்வாளர்களுக்கு காட்டியது.

இரண்டாவது முறையாக நடைபெற்ற ஆய்வின் போது விமான விபத்துகளில் தப்பித்த 17 பேரிடம் கேள்விகள் கேட்கப்பட்டது. அவர்கள் தெரிவித்த தகவல்கள் மூலம் டைம் அமைப்பு விமான பாதுகாப்பு குறித்த ஒரு புதிய ஆய்வை வெளியிட்டது.

டைம்மின் 2015ம் ஆண்டின் ஆய்வுப்படி, வால் பகுதியில் பயணிக்கும் பயணிகளுக்கு ஆபத்துக்காலத்தில் 32 சதவீத அளவில் மட்டுமே உயிர் பிழைக்க வாய்ப்புள்ளதாக கூறபட்டுள்ளது.

இறகுப் பகுதி அருகில் அமர்ந்திருக்கும் பயணிகளுக்கு 39 சதவீதமும், முன்பகுதியில் அமர்ந்திருப்பவர்களுக்கு 38 சதவீதமும் விமான பயணங்களில் எதிர்பாராமல் நடைபெறும் ஆபத்துக் காலங்களில் தப்பிக்க வாய்பிருப்பதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதலாக விமானத்தின் கடைசியில் இருக்கும் நடுப்பகுதிக்கான இருக்கைகளில் பயணம் செய்பவர்கள்க்கு ஆபத்துக்காலத்தில் உயிர் பிழைக்க 28 சதவீதம் மட்டுமே வாய்ப்பிருப்பதாக டைம் நடத்திய அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானத்தின் கேபினுக்கான இடைவெளிகளில் இருக்கும் இருக்கைகளில் உள்ளவர்களுக்கு உயிர் பிழைக்கும் வாய்ப்பு 44 சதவீதம் உள்ளது என கூடுதலாக டைம் அமைப்பின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆபத்துக்காலத்தில் உயிர் பிழைக்கும் வாய்ப்பு என்பது டைம் அமைப்பு வெளியிட்டு இருக்கும் இந்த தகவலின் படி சாத்தியம் தானா என்ற கேள்வி எழலாம். ஆனால் ஆய்வுப் படி நடக்கும் நிகழ்வுகள் குறைவே.

ஆபத்துக்காலத்தில் பாதுகாப்பான பயணம் என்பது எப்போதும் பயணிப்பவர்களின் கைகளில் தான் இருக்கின்றன. ஒரே மாறியான நிகழ்வுகள் நமது வாழ்க்கையில் மாற்றத்தோடு நடப்பது மிகவும் அறிதே..!


Click it and Unblock the Notifications








