ஆளையே மூழ்கடிக்கும் பெரு வெள்ளம்: சைக்கிளில் சென்ற பிரபல நடிகர்... ஏன் தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!
பிரபல நடிகர் பெரு வெள்ளத்தையும் பொருட்படுத்தாமல் சைக்கிளில் செல்லும் காட்சி வெளியாகியுள்ளது. அவர் எதற்காக கொட்டும் மழையில் தன்னிடம் சொகுசு கார்கள் பல இருக்க சைக்கிளில் சென்றார் என்பதை இந்த பதிவில் காணலாம்.

இந்தியாவின் பல பகுதிகளில் தண்ணீர் பஞ்சம் தற்போது வரை தலை விரித்து ஆடிக் கொண்டிருக்கும் அதேசூழ்நிலையில், ஒரு சில பகுதிகள் பேய் மழை பொழிந்துக் கொண்டிருக்கின்றது.
அந்தவகையில், மஹாராஷ்டிரா மாநிலத்தின் மும்பை நகரம் தற்போது பெரும் வெள்ளத்தில் சிக்கி தவித்து வருகின்றது. வரலாறு காணாத அடை மழையால், இந்நகர மக்களின் இயல்பு வாழ்க்கை மிகப்பெரிய அளவில் பாதிப்பைச் சந்தித்துள்ளது.

இந்நிலையில், ஓர் பிரபல நடிகர் ஒருவர் தனது விலையுயர்ந்த சொகுசு கார்களை விட்டுவிட்டு சைக்கிளில் பயணிப்பதைப் போன்ற வீடியோக் காட்சிகள் வெளியாகியுள்ளது. அவ்வாறு, சைக்கிளில் சென்ற நடிகர் சல்மான் கான் என கூறப்படுகின்றது.
இவர் மக்களைப் பார்வையிடுவதற்காக சைக்கிளில் செல்லவில்லை. தன்னுடைய கடமை உணர்ச்சிக்காக கொட்டும் மழையையும், பெரு வெள்ளத்தையும் பாராமல் சைக்கிளில் சென்றுள்ளார்.

பாலிவுட் திரைப்பட பிரபலமான சல்மான் கான், தற்போது தபாங் திரைப்படத்தின் மூன்றாம் பாகத்தில் நடித்து வருகின்றார். இவர் இத்திரைப்படத்தின் ஷூட்டிங்கிற்காக சென்றபோது எடுத்த வீடியோக் காட்சிதான் தற்போது வைரலாகி வருகின்றது.

மும்பையில் கடந்த ஜுன் மாதம் ஆரம்பித்த பருவ மழை, அவ்வப்போது அதன் தீவிரத்தைக் காட்டி வருகின்றது. அவ்வாறு, ஜுன் மற்றும் ஜுலை மாதத்தில் பெய்த அடை மழையால், அந்நகரத்திற்கு குடிநீர் வழங்கக்கூடிய நான்கு ஏரிகளும் நிரம்பின.

மேலும், அவ்வப்போது முகம் காண்பித்துக் கொண்டிருக்கும் பருவ மழை தற்போது மீண்டும் அதன் தீவிரத்தைக் காட்டத் தொடங்கியுள்ளது. கடந்த மூன்று நாட்களுக்கும் மேலாக அது உச்சகட்ட தீவிரத்தைக் காட்டி வருக்கின்றது. இதனால், மும்பை மீண்டும் வெள்ளக் காடாக மாறியுள்ளது.
மேலும், அந்நகரத்தின் இயல்புநிலை மிகவும் சீரற்றநிலையில் காணப்படுகின்றது. இதனால், மக்களின் அன்றாட வாழ்க்கையும் மிகப்பெரியளவில் பாதிப்படைந்துள்ளது.

முக்கியமாக சாலையில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தின்காரணமாக, வாகனங்கள் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், உள்ளூர் போக்குவரத்து கடுமையாக பாதிப்படைந்திருக்கின்றது.
இந்த சூழ்நிலையில்தான், நடிகர் சல்மான்கான் தன்னிடம் உள்ள பல சொகுசு கார்களை தவிர்த்துவிட்டு, சைக்கிளில் ஷூட்டிங் ஸ்பாட்டிற்குச் சென்றுள்ளார்.
சல்மான்கான் நடித்து வரும் இப்படம் இந்தி மட்டுமின்றி கூடுதலாக மூன்று மொழிகளில் வெளிவர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. அந்தவகையில், வருகின்ற டிசம்பர் 20ம் தேதி வெளியாகவுள்ள இப்படம் ஹிந்தி, தமிழ், கன்னடம், தெலுங்கு ஆகிய நான்கு மொழிகளிலும் வெளிவரவிருக்கின்றது.

இப்படத்தை பிரபு தேவா இயக்குகிறார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. கடந்த 2010ம் ஆண்டு வெளியான இப்படத்தின் முதல் பாகம் நல்ல ஹிட்டை கொடுத்தது. இதைத்தொடர்ந்து, 9 வருடங்கள் கழிந்த பின்னர், இதன் மூன்றாம் இந்த வருடம் வெளிவர இருக்கின்றது. இதனால், சல்மான் கான் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் இருக்கின்றனர்.

மேலும், கொட்டும் மழை, பெரு வெள்ளம் எதையும் பாராமல் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்ற சல்மான் கானின் கடமை உணர்ச்சியைப் பார்த்து ரசிகர்கள் மட்டுமின்றி பாலிவுட் வட்டாரமே ஆச்சரியத்தில் உரைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications