ராணுவ வீரர்களுக்கு எழுந்து நின்று சல்யூட் வைக்க சுங்கச்சாவடி ஊழியர்களுக்கு உத்தரவு..!!
ராணுவ வீரர்களுக்கு எழுந்து நின்று சல்யூட் வைக்க சுங்கச்சாவடி ஊழியர்களுக்கு உத்தரவு..!!
சுங்கசாவடியை கடந்து செல்லும் ராணுவ வீரர்களுக்கு, அங்கு பணியாற்றும் ஊழியர்கள் எழுந்து நின்று சல்யூட் அடிக்க வேண்டும் என தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

பணியில் இருக்கும் ராணுவ வீரர்கள் சுங்கச்சாவடிகளை கடக்கும் போது, அடையாள அட்டைய காண்பித்துவிட்டு கட்டணம் செலுத்தாமல் சென்றுவிடலாம்.
Recommended Video


அப்படி அவர்கள் சுங்கச்சாவடியை கடக்கும் போது, ஊழியர்கள் இனி எழுந்து நின்று ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்த வேண்டும்.

இதுதொடர்பாக நெடுஞ்சாலை துறை சார்பில், இந்தியாவில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளுக்கு சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

அதில், சுங்கச்சாவடிக்குள் ராணுவ வீரர்கள் தங்களது அடையாள அட்டையை காட்டும் போது, ஊழியர்கள் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும்.

மேலும் ராணுவ வீரர்கள் கடக்கும் போது ஊழியர்கள் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும், தொடர்ந்து சல்யூட் அடிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

இதற்கு வேண்டி இந்தியாவில் இருக்கும் அனைத்து சுங்க சாவடிகள் மற்றும் அதில் பணியாற்றும் ஊழியர்களுக்கு முறையாக பயிற்சி வழங்கப்படவுள்ளது.

அதேபோல, சுங்கச்சாவடியை சேர்ந்த மூத்த ஊழியர்கள் மட்டுமே ராணுவ வீரர்கள் காட்டும் அடையாள அட்டையை பரிசோதிக்க வேண்டும் எனவும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

நாட்டிற்காக பல தியாகங்களை செய்து உழைத்து வரும் ராணுவ வீரர்களை போற்றுவது நமது கடமை. அவர்களது தியாகத்திற்கு மதிப்பளிக்க வேண்டும்.

அதன் காரணமாக நெடுஞ்சாலை ஆணையம் பிறப்பித்துள்ள உத்தரவுகளை ஒவ்வொரு சுங்கச்சாவடி ஊழியர்களும் முறையாக பின்பற்றிட வேண்டும் எனவும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








