நாம் இருவர் நமக்கு இருவர் - உச்சநீதிமன்றத்தின் புதிய திட்டத்தால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி...!
வாகன தயாரிப்பு நிறுவனம் ஒன்று அண்மையில் வெளியிட்ட புதிய திட்டத்தால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

வளர்ந்து வரும் நாடுகளின் பட்டியலில் ஒன்றாக இருக்கும் இந்தியா, மக்கள் தொகை அதிகரிப்பிலும் முக்கிய இடத்தில் இருக்கிறது. மக்கள் தொகையில் மட்டுமின்றி வாகன சந்தையிலும் அசூர வளர்ச்சி அடைந்து வருகிறது இந்தியா. இதன்காரணமாக, நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கைக் கூடிக் கொண்டே செல்கிறது.

இதனால், இந்தியச் சாலைகள் தினம் தினம் பல்வேறு பிரச்னைகளைச் சந்தித்து வருகின்றன. மேலும், எரிபொருள் வாகனங்களினால் சுற்றுபுறச்சூழலும் கடுமையான பாதிப்பினைச் சந்தித்து வருகிறது. இதில், புதுடெல்லி, சென்னை, பெங்களூரு, புனே, கொல்கத்தா, மும்பை உள்ளிட்ட நகரங்கள்தான் வாகனங்களின் மாசினால் கடுமையான பாதிப்பினைச் சந்தித்து வருகின்றன.

இந்நிலையில், வாகன தயாரிப்பு நிறுவனம் ஒன்று உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தது. அதில், நாளுக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தனியார் வாகனங்கள் காரணமாக தலைநகர் டெல்லி கடுமையான பின்விளைவுகளைச் சந்தித்து வருகிறது. ஆகையால், பிஎஸ் VI உமிழ்வு தரத்தில் தயாரிக்கப்பட்ட பொது வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க வேண்டும் என கோரியிருந்தது.

ஆனால், டெல்லியில் ஏற்கனவே 3,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் அரசு பேருந்துகள் செயல்பட்டு வருவதால் இந்த மனுவினை உச்சநீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. புது டில்லியில் தற்போதைய போக்குவரத்து சூழல் நல்ல முறையில் இல்லை. ஏனென்றால், இங்குள்ள சிக்னலில் நிற்பது என்பது அவ்வளவு எளிதான ஓர் விடயமாக இல்லை.

வாகன ஓட்டிகள் அவர்களது வாகனங்களை பார்க்கிங் செய்யவும் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். வாகனங்களைப் பார்க்கிங் செய்ய இங்கு சில தனியார் மல்டி பார்க்கிங் நிலையங்கள் செயல்பட்டாலும், அதில் தங்களது வாகனங்களைப் பார்க்கிங் செய்ய எந்தவொரு வாகன ஓட்டியும் தயாராக இல்லை. ஏனென்றால், அவர்கள் செல்லவேண்டிய இடத்திற்கும், பார்க்கிங் உள்ள இடத்திற்கும் குறைந்தது பத்து நிமிடவாது நடக்க வேண்டும். இதன்காரணமாகவே, வாகனஓட்டிகள் மல்டி பார்க்கிங்கைப் பயனபடுத்தாமல் இருக்கின்றனர்.

இந்த நிலையில், டெல்லி எகானமிக் அமைப்பு டில்லியில் உள்ள வாகனங்களள் குறித்த சர்வே ரிப்போர்ட் வெளியிட்டது. அதில், கடந்த 2018-19ம் ஆண்டில் மட்டும் தலைநகர் டெல்லியில் 1.09 கோடி வாகனங்கள் அதிகரித்து இருப்பதாக தெரிவித்திருந்தது. அதுவே, கடந்த 2018 மார்ச் மாதத்தில் 70 லட்சம் வாகனங்களாக இருந்துள்ளன.

இந்நிலையில், மனுவானது அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, டெல்லி எகானமிக் அமைப்பின் சர்வேயை கருத்தில் கொண்ட உச்சநீதிமன்றம், "வருமானம் ஈட்டக்கூடிய அனைத்து நபர்களும் கார்களை வைத்துள்ளனர். ஆனால், ஒரு நபர் ஐந்து கார்களை வாங்குகிறார். ஆகையால், மக்கள் தொகைக்கு, நாம் இருவர் நமக்கு இருவர் என்ற கட்டுப்பாட்டை வைத்திருப்பதுபோல், வாகனங்களுக்கும் கட்டுப்பாடு கொண்டு வரவேண்டும்" என்றார்.

இந்தியாவில் வாகனங்களை வாங்குவதற்கு இதுவரை எந்தவொரு கட்டுப்பாடும் கொண்டுவரவில்லை. ஆகையால், வாகன பிரியர்கள் தங்களுக்குப் பிடித்த வாகனங்களை வாங்கி குவித்து வந்தனர். இந்நிலையில், உச்சநீதிமன்றம் விடுத்துள்ள இந்த கருத்தானது வாகன ஓட்டிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஆனால், சுற்றுச்சூழல் ஆர்வளர்கள் நீதிபதியின் இந்த கருத்தைினை வரவேற்றுள்ளனர்.

இந்தியாவில் வாகனங்களை வாங்குவதற்கு இதுவரை எந்தவொரு கட்டுப்பாடும் கொண்டுவரவில்லை. ஆகையால், வாகன பிரியர்கள் தங்களுக்குப் பிடித்த வாகனங்களை வாங்கி குவித்து வந்தனர். இந்நிலையில், உச்சநீதிமன்றம் விடுத்துள்ள இந்த கருத்தானது வாகன ஓட்டிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஆனால், சுற்றுச்சூழல் ஆர்வளர்கள் நீதிபதியின் இந்த கருத்தைினை வரவேற்றுள்ளனர்.


Click it and Unblock the Notifications