நாளையில் இருந்து வேட்டை ஆரம்பம்... முக்குக்கு முக்கு நின்னு பிடிக்க போறாங்க... மாட்டினால் கதை கந்தல் ஆயிரும்!
நாளையில் இருந்து காவல் துறையினரின் வேட்டை தொடங்கவுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் தற்போது நாளுக்கு நாள் போக்குவரத்து விதிமுறைகள் அனைத்தும் கடுமையாகி கொண்டே வருகின்றன. இங்கு சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்பதுதான் இதற்கான காரணமாக உள்ளது. இந்த வரிசையில் நாளை (நவம்பர் 1ம் தேதி) முதல் புதிய போக்குவரத்து விதிமுறை ஒன்று அமலுக்கு கொண்டு வரப்படுகிறது.

இந்தியாவில் கார்களில் பயணிக்க கூடியவர்கள் சீட் பெல்ட்களின் முக்கியத்துவத்தை உணர்வதில்லை. நாம் சாதாரணமாக நினைக்க கூடிய சீட் பெல்ட்கள், சாலை விபத்துக்களில் படுகாயங்கள் ஏற்படுவதில் இருந்து நம்மை பாதுகாக்கின்றன. மேலும் சாலை விபத்துக்களில் உயிரிழப்புகள் ஏற்படுவதையும் சீட் பெல்ட்கள் குறைக்கின்றன.

ஆனால் காரில் பயணிக்க கூடிய பயணிகள் பலர் சீட் பெல்ட் அணிவதில்லை. எனவே காரில் பயணிக்க கூடிய அனைவரையும் சீட் பெல்ட் அணிய வைக்க அதிரடியான உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய உத்தரவின்படி, காரில் பயணிக்க கூடிய அனைவரும் இனிமேல் சீட் பெல்ட் அணிய வேண்டும். இந்த அதிரடி உத்தரவு நாளை முதல் அமலுக்கு வருகிறது.

ஒருவேளை பயணிகள் சீட் பெல்ட் அணியாவிட்டால் கடுமையான அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சீட் பெல்ட் இல்லாத கார்களில் பயணிகளை அழைத்து செல்வது மோட்டார் வாகன சட்டத்தின் சம்பந்தப்பட்ட பிரிவுகளின் கீழ் தண்டிக்கப்படக்கூடிய குற்றம் என போக்குவரத்து காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

எனவே அனைத்து பயணிகளுக்கும் சீட் பெல்ட் இல்லாத கார்களில், அவற்றை பொருத்தி கொள்ள வேண்டும் என்று போக்குவரத்து காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். இதற்கான காலக்கெடுவும் இன்றுடன் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது அனைத்து பயணிகளுக்கும் சீட் பெல்ட் இல்லாத கார்களில் இன்றுக்குள், அவற்றை முறையாக பொருத்தியிருக்க வேண்டும்.

இல்லாவிட்டால் நாளையில் இருந்து அதிரடியாக அபராதம் விதிக்கப்படும். மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை மாநகர போக்குவரத்து காவல் துறையினர்தான் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளனர். இது குறித்து மும்பை மாநகர போக்குவரத்து காவல் துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருக்கும் விஷயங்கள் பின்வருமாறு:

மும்பை மாநகர சாலைகளில், காரில் பயணிக்கும் டிரைவர் மற்றும் பயணிகள் என அனைவரும் நவம்பர் 1ம் தேதியில் இருந்து சீட் பெல்ட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இல்லாவிட்டால் மோட்டார் வாகன சட்டம் 2019-ன் (திருத்தப்பட்டது), பிரிவு 194(B)(1)-ன் கீழ் நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தற்போது கார்களில் சீட் பெல்ட் அணியாமல் பயணம் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். தலை நகர் டெல்லியில், கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு, போக்குவரத்து காவல் துறையினர் சீட் பெல்ட்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் அதிரடி நடவடிக்கை ஒன்றை தொடங்கினர்.

இந்த அதிரடி நடவடிக்கையின் கீழ், கார்களின் பின் இருக்கைகளில் சீட் பெல்ட் அணியாமல் பயணம் செய்த நபர்களுக்கு 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இந்தியாவின் மற்ற பகுதிகளிலும், வரும் நாட்களில் சீட் பெல்ட் விதிமுறைகள் கடுமையாக அமலுக்கு கொண்டு வரப்படலாம் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் மூலமாக கார் விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்க அரசு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். ஆனால் அரசு எவ்வளவுதான் மிக கடுமையான முயற்சிகளை மேற்கொண்டாலும் கூட, பயணிகளே தாங்களாக முன்வந்து சீட் பெல்ட்களை முறையாக அணிந்து கொண்டு பயணங்களை மேற்கொண்டால் மட்டுமே கார் விபத்துக்களில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறையும்.

எனவே இந்தியாவின் எந்த பகுதியை சேர்ந்தவர்களாக இருந்தாலும், காரில் பயணம் செய்யும்போது, சீட் பெல்ட்களை அணிந்து கொள்வது நன்மை பயக்கும். இது சாலை விபத்துக்களில் இருந்து மட்டுமல்லாது, போக்குவரத்து காவல் துறையினரின் நடவடிக்கைகளில் இருந்தும், உங்களையும், உங்கள் குடும்ப உறுப்பினர்களையும் பாதுகாக்கும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








