பார்க்கிங் தவறுகளை போட்டோ எடுத்து அனுப்பினால் உங்களுக்கு 10% கமிஷன்; மத்திய அரசு..!!
பார்க்கிங் தவறுகளை போட்டோ எடுத்து அனுப்பினால் உங்களுக்கு 10% கமிஷன்; மத்திய அரசு..!!
முறைகேடாக வாகனங்களை பார்க்கிங் செய்பவர்கள் மீது அளவில்லா கோபம் கொள்ளும் நபரா நீங்கள்..?? அப்போது அவசியம் இதை படியுங்கள்.

வாகனங்களின் பெருக்கம் அதிகரித்து வரும் சூழ்நிலையில், அதை ஓட்டுவதற்கு சாலைகளில் இடமிருந்தாலும், நிறுத்தி வைக்க இடம் தேடுவது தான் பெரிய சவாலாக உள்ளது.

இதனால் பலரும் முறைகேடாக வாகனங்களை நிறுத்தி வைப்பது அதிகரித்து வருகிறது. இந்த முறைகேட்டை தடுக்க மத்திய அரசு ஒரு புதிய முடிவை அறிவித்திருக்கிறது.

முறைகேடான வாகன பார்க்கிங்கை தடுக்க மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அதன்படி, சட்டத்திற்கு புறம்பாக யாராவது வாகனங்களை பார்க்கிங் செய்திருந்தால், அதை உரிய ஆதாரங்களோடு புகார் செய்யும் யாருக்கும் தக்க சன்மானம் அரசிடம் இருந்து கிடைக்கும்.

பார்க்கிங் முறைகேடு தொடர்பாக போக்குவரத்து காவல்துறையிடம் புகார் அளித்தால், தவறு செய்த நபர் செலுத்தும் அபராத தொகையில் இருந்து 10 சதவீத பணம் புகார் தெரிவித்த நபருக்கு வழங்கப்படும்.

நிதின் கட்கரியின் அலுவலகத்திலே வாகனங்களை பார்க்கிங் செய்வதற்கான இடம் குறைந்து காணப்படுகிறது.
Recommended Video


அதனால் அலுவலகத்திற்கு வரும் ஊழியர்கள் உள்ளிட்டவர்கள் சாலைகளில் தங்களது வாகனங்களை நிறுத்தி வைக்கின்றனர்.

இதற்கான வருத்தம் தெரிவித்த நிதின் கட்கரி, முறைகேடான பார்க்கிங் செய்வதை தடுக்க இந்த புதிய ஆணையை பிறப்பித்துள்ளார்.

பார்க்கிங் தொடர்பான இந்த புதிய உத்தரவு மோட்டார் வாகன சட்டத்திலும் இடம்பெறவுள்ளது. கைப்பேசிகளின் எடுக்கப்படும் புகைப்படங்கள் இதற்கு முதன்மையாக ஆதராமாக எடுத்துக்கொள்ளப்படும்.

பெரும்பாலான பகுதிகளில் வாகனங்கள் நிறுத்துவதற்கு என்று தனியாக பார்க்கிங் வசதிகள் இருப்பதில்லை.

இதனால் வாகன பயன்பாட்டாளர்கள் சாலைகளில் வாகனங்களை நிறுத்தி வைக்கின்றனர். பார்க்கிங் இடையூறுகளால் பெரிய பிரச்சனைகளை நம்மில் பலர் தினமும் கடந்து வருகிறோம்.

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கொண்டு வந்துள்ள இந்த உத்தரவிற்கான எதிர்வினையை பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications