இன்ஜினியரிங் மாணவர்களுக்கு திறமையை நிரூபிக்க பொன்னான வாய்ப்பை வழங்குகிறது ஷெல் நிறுவனம்
ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் மாணவர்கள் தங்கள் திறமையை நிரூபிக்க ஒரு பொன்னான வாய்ப்பை வழங்குகிறது ஷெல் நிறுவனம். மாணவர்கள் சொந்தமான தயாரிக்கும் கார்களிடையே போட்டி
ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் மாணவர்கள் தங்கள் திறமையை நிரூபிக்க ஒரு பொன்னான வாய்ப்பை வழங்குகிறது ஷெல் நிறுவனம். மாணவர்கள் சொந்தமான தயாரிக்கும் கார்களிடையே போட்டி வைத்து சிறந்த தயாரிப்பை உலகளவில் எடுத்து செல்லவிருக்கிறது. இது குறித்த முழு தகவல்களை கீழே படியுங்கள்

ஷெல் நிறுவனம் நடந்தும் பிரபலமான போட்டியான எக்கோ மராத்தான் போட்டியை இந்தியாவிலும் நடந்த அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இது "மேக் பியூச்சர் இந்தியா" என்ற தலைப்பில்" அந்நிறுவனம் நடத்த திட்டமிட்டுள்ளது.

இது வளர்ந்து வரும் இன்ஜினியர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் டிராக்கில் செயல்படகூடிய அளவிற்கு ஒரு வாகனத்தை அவர்கள் கூறும் கட்டுப்பாடுகளுடன் இயங்கும்படி குறைந்த செலவில் மேற்கொள்ள வேண்டும்.

ஷெல் நிறுவனம் எக்கோ மராத்தான் போட்டி உலகின் குறைந்த பொருட்செலவில் அதிகம் உழைக்ககூடிய வாகனனங்களை உருவாக்கும் என நம்புகிறது. இதனால் தான் இந்த போட்டியை தொடர்ந்து நடத்தி வருகிறது.

இப்போட்டியில் இன்ஜினியரிங்கில் விரும்பம் உள்ள மாணவர்களுக்காக நடத்தப்படுகிறது. இதில் வழக்கமான கார் போல இல்லாமல் அவர்கள் கற்பனையில் ஒரு காரை உருவாக்க வேண்டும். இந்த போட்டி இரண்டு பிரிவுகளாக நடத்தப்படுகிறது. புரோட்டோ டைம் மற்றும் அர்பன் கான்சப்ட் என்பது தான் அது.

இதில் புரோட்டோ டைப் என்பது தயார் செய்யப்படும் வாகனத்தின் திறனை வைத்தும் (இதில் சொகுசு பார்க்கப்படமாட்டாது), அர்பன் கான்சப்ட் என்பது டிசைன் மற்றும் பயணிகளின் சொகுசை கணக்கில் கொண்டும் உருவாக்கப்படுகிறது.

இதில் இன்டர்னல் கம்பஷன் இன்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் மொபிலிட்டி ஆகிய இரண்டு இன்ஜின் ரகங்களுக்கும் தனித்தனியே போட்டி நடத்தப்படவிருக்கிறது.

இந்த எக்கோ மராத்தான் போட்டியில் முக்கிய போட்டியே மைலேஜிற்கான போட்டி தான். கலந்து கொள்ளும் காரில் ஒரு லிட்டர் பெட்ரோலில் எவ்வளவு தூரம் பயணிக்க முடியும் என்பதை கணிப்பது தான். இப்போட்டியில் பங்குபெறும் கார்கள் ஒரு வேகத்தில் தான் இயங்க வேண்டும். பல்வேறு விதிமுறைகளின் கீழ் வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

இதே போல மற்றொறு போட்டியில் வேகமும் மைலஜூம் கணக்கிடப்படும். அதன்படி கொடுக்கப்பட்ட டிராக்கில் பினிஷ் லைனை உங்கள் காரின் பியூயல் தீரும் முன்பாக கடக்க வேண்டும். இந்த போட்டிக்கும் பல்வேறு விதிமுறைகள் உள்ளன.

இந்த போட்டி உலகில் மூன்று பகுதிகளில் முதலில் நடத்தப்படுகிறது. அதில் சென்னையும் உள்ளடங்கும். இந்த போட்டியில் வெற்றி பெறும் முதல் மூன்று போட்டியாளர்கள் ஐரோப்பா நாட்டில் நடக்கும் போட்டியில் பங்கு பெறுவார்கள்.

இறுதி போட்டியில் மொத்தம் 9 போட்டியாளர்கள் பங்கு பெறுவார்கள். இதில் வெற்றி பெறுபவருக்க உலகின் மிக திறமையான டிரைவர் பட்டம் வழங்கப்படும்.

இப்போட்டிகான முதல் பேஸ் முன்பதிவு தேதி ஏற்கனவே துவங்கி விட்டது. வரும் ஆகஸ்ட் 28ம் தேதி வரை முதல் பேஸ் முன்பதிவுகள் நடக்கிறது. செப்டம் பர் 3 ம் தேதி முதல் நவம்பர் 1ம் தேதி வரை இரண்டாம் பேஸ் முன்பதிவுகள் நடக்கவிருக்கிறது. இப்போட்டிக்கு நீங்கள் முன் பதிவு செய்ய இங்கே கிளிக் செய்யவும்.

போட்டி சென்னையில் வரும் டிசம்பர் மாதம் 6ம் தேதி முதல் 9ம் தேதி வரை நடத்த அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
ஷெல் நிறுவனம் இந்த எக்கோ மாராத்தான் போட்டியை கடந்த 1985 ம்ஆண்டு முதலே நடத்தி வருகிறது. இதில் பங்குபெற்ற இன்ஜினியரிங் மாணவர்கள் பிற்காலத்தில் ஆட்டோமொபைல் துறையில் பல சாதனைகளை படைத்தவர்களாக திகழ்ந்துள்ளனர். இவ்வாறான போட்டி இந்த முறை இந்தியாவில் நடக்கிறது.

இந்தியாவில் மெது மெதுவாக மோட்டார் வாகன பந்தையம் நடந்துவருகிறது. பாஜா, சுப்ரா, யங் மீடியா ரேஸர் புரோகிராம் ஆகிய போட்டிகள் சமீபத்தில் நடந்தது. தற்போது ஷெல் நிறுவனம் அறிவித்துள்ள இந்த போட்டி இந்திய ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் மாணவர்களுக்கு பொன்னானா வாய்ப்பு

அது குறிப்பாக இப்போட்டியில் சென்னையில் நடக்கவுள்ளதால் தமிழக இன்ஜினியரிங் மாணவர்கள் இப்போட்டியில் பங்கு பெற்று தங்கள் திறமையை நிருபித்தால் அவர்களின் திறமை உலகளவில் பெரிய பெரிய ஆட்டோமொபைல் நிறுவனங்களு்கு எடுத்து செல்லப்படும்.

இன்ஜினியரில் மாணவர்கள் தவறாமல் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும். இப்போட்டி குறித்த விதிமுறைகளை இங்கே கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

இந்தியாவில் இது போன்ற போட்டிகள் தொடர்ந்து நடந்து வருவது இந்தியர்கள் மத்தியில் மோட்டார் குறித்து ஆர்வமும்,அறிவும் அதிகரித்திருப்பது தெரிகிறது. தொடர்ந்து இது போன்ற போட்டிகளை நடத்துவதன் மூலம் ஆரோக்கியமான எதிர்காலத்தை நம்மால் உருவாக்க முடியும்.


Click it and Unblock the Notifications