Just In
- 54 min ago 21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
- 5 hrs ago இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- 5 hrs ago 7 பேர் போற கார் இவ்ளோ மைலேஜ் குடுக்குமா! விலை அதை விட ஆச்சரியம்! எவ்ளோனு தெரிஞ்சா அடுத்த நிமிஷமே வாங்கீருவீங்க
- 7 hrs ago இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
Don't Miss!
- Lifestyle Today Rasi Palan 24 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனைகளில் தலையிடாமல் இருந்தால் நல்லது...
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
கடல் கடவுளுக்கு கோபம் வரும்... இந்த வினோத சடங்கை செய்யாமல் கப்பலின் பெயரை மாத்த மாட்டாங்க... என்னனு தெரியுமா?
கப்பலின் பெயரை மாற்றுவதில் இன்றளவும் இருந்து வரும் ஒரு வினோத மூட நம்பிக்கை குறித்த சுவாரஸ்யமான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
மீன் பிடிக்கவும், சரக்கு போக்குவரத்திற்காகவும், ஆய்வுகளை மேற்கொள்வதற்கும் கடல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இன்று கடல் பயணம் அதிநவீனமாகவும், பாதுகாப்பானதாகவும் மாறி விட்டது. ஆனால் பண்டைய காலத்தில் தொழில்நுட்பங்கள் எதுவும் இல்லை. எனவே கடல் பயணங்களை மேற்கொள்ளக்கூடிய மாலுமிகள் பத்திரமாக வீடு திரும்புவதற்காக சில மூட நம்பிக்கைகளை வைத்திருந்தனர்.
அந்த காலத்தில் கடல் பயணங்கள் நிச்சயமற்றதாக இருந்தது. எனவே மாலுமிகளுக்கு இந்த மூட நம்பிக்கைகள் ஒருவிதமான தைரியத்தை கொடுத்தன. ஆனால் நாங்கள் ஏற்கனவே கூறியபடி இன்றைய அதிநவீன காலகட்டத்தில் கடல் பயணங்கள் மிகவும் பாதுகாப்பானதாக மாறி விட்டது. எனினும் கடல் பயணங்களை மேற்கொள்ள கூடியவர்கள் இன்னமும் பல்வேறு மூட நம்பிக்கைகளை பின்பற்றுகின்றனர்.
அதில் ஒரு மூட நம்பிக்கை குறித்துதான் இந்த செய்தியில் நாம் பார்க்க போகிறோம். கப்பலுக்கு ஒரு முறை பெயர் வைத்து விட்டால், எக்காரணத்தை கொண்டும் அந்த பெயரை மாற்றக்கூடாது என்ற மூட நம்பிக்கை அந்த கால கட்டத்தில் இருந்து வந்தது. தற்போதும் கூட ஒரு சிலர் அந்த மூட நம்பிக்கையை பின்பற்றுகின்றனர்.
ஒரு கப்பலுக்கு ஒரு முறை பெயர் வைத்து விட்டு, அதனை மாற்றினால் அசம்பாவித சம்பவங்கள் நடக்கும் என சிலர் நம்புகின்றனர். கப்பலின் பெயரை மாற்றுவது என்பது, கடல் கடவுளை ஏமாற்றும் செயல் என இதற்கு அவர்கள் விளக்கம் கொடுக்கின்றனர். புராண கதைகளின்படி, ஒவ்வொரு கப்பலுக்கும் முதல் முறை பெயர் சூட்டும்போது, அந்த பெயரை கடல் கடவுள் பதிவு செய்து கொள்வார் என்பது நம்பிக்கை.
அந்த பெயரை மாற்றினால், அவரது கோபத்திற்கு ஆளாக நேரிடும் என நம்பப்படுகிறது. எனினும் ஒரு கப்பலின் பெயரை நிச்சயமாக மாற்றியே ஆக வேண்டும் என்றால், அதற்கு சில சடங்குகளை செய்கின்றனர். இந்த வினோத சடங்கின்படி, கப்பலின் உண்மையான பெயரை ஒரு காகிதத்தில் எழுதி, அதனை ஒரு பெட்டியில் வைத்து கொள்கின்றனர்.
இதன்பின்னர் அந்த பெட்டி எரிக்கப்பட வேண்டும். அதற்கு பிறகு அலை வந்து விட்டு செல்லும்போது, கடலில் அந்த சாம்பலை கரைக்கின்றனர். ஒருவேளை இந்த சடங்கை கடற்கரையில் செய்ய முடியாவிட்டால், ஆறு அல்லது ஏரியில் சாம்பலை கரைக்கலாம். ஆனால் அப்போது முழு நிலவு தென்பட வேண்டும் என நம்பப்படுகிறது.
இந்த சடங்கை செய்து முடித்தவுடன், கப்பலுக்கு புதிய பெயரை சூட்டி கொள்ளலாம் என்பது நம்பிக்கை. இது மூட நம்பிக்கையாக இருந்தாலும், கப்பலின் பெயரை மாற்ற தயங்குவதற்கு சில நடைமுறை காரணங்களை தெரிவிக்கின்றனர். அந்த கால கட்டங்களில் வர்த்தக கப்பல்களுக்கு, அவற்றின் பெயரின் அடிப்படையில் துறைமுகங்களில் நற்பெயர் கிடைத்து வந்தது.
எனவே அவற்றின் பெயரை மாற்றினால், பயணம் மற்றும் வர்த்தகத்தின்போது, கப்பலின் கேப்டன் மற்றும் பணியாளர்களுக்கு பிரச்னைகள் ஏற்படலாம் எனக்கருதி பெயர் மாற்றத்தை பலர் தவிர்த்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. கப்பல் போக்குவரத்து துறையில் இன்றளவும் இதுபோல் இன்னும் பல்வேறு மூட நம்பிக்கைகள் பின்பற்றப்படுகின்றன.
-
இந்த விலைக்கு இப்படி ஒரு ஹூண்டாய் காரா! எவ்ளோனு தெரிஞ்சா இப்பவே ஷோரூமுக்கு வண்டிய எடுத்துருவீங்க!
-
ஜிஎஸ்டி கட்டவேணாம்! ரூ1.26 லட்சம் மிச்சம் பண்ண இந்த காரை இப்படியும் வாங்கலாமா? யாருக்குமே இது தெரியாது!
-
செஞ்சது என்னமோ சின்ன உதவிதான்.. ஆனா அந்த சமையல்கார அம்மா குடும்பத்துக்கு அது ரொம்ப பெருசு! செம ஸ்டோரி!!