தாத்தா காலத்து வாகனங்களுக்கு மத்திய அரசு குட்பை சொல்ல உற்பத்தியாளர்கள் கோரிக்கை..!!
தாத்தா காலத்து வாகனங்களுக்கு மத்திய அரசு குட்பை சொல்ல உற்பத்தியாளர்கள் கோரிக்கை..!!
15 ஆண்டுகளுக்கு முந்தையை வாகனங்களை இந்தியாவில் பயன்படுத்த மத்திய அரசு தடை விதிக்கவேண்டும் என சியாம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (சியாம்) 57வது ஆண்டின் வருடாந்திர கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது.

சியாமிற்கான தலைவராக அசோக் லேலண்டின் தலைமை செயல் அதிகாரியான வினோத் கே. தாசரி பொறுப்பு வகித்து வருகிறார்.

வருடாந்திர கூட்டத்தில் பேசிய அவர், இந்திய அரசு 15 ஆண்டுகள் பழமையான வாகனங்களை சாலைகளில் பயன்படுத்த தடை விதிக்க கோரிக்கை விடுத்தார்.
Recommended Video


தற்போது பிஎஸ்4 கொண்ட வாகனங்களை மட்டுமே வாங்க விற்க மற்றும் பதிவு செய்ய மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.

இருந்தாலும் பிஎஸ்3 முதல் இன்னும் பழைய எஞ்சின் கொண்ட வாகனங்கள் இந்தியாவில் பயன்பாட்டில் தான் உள்ளன.

என்னதான் பிஎஸ்4 எஞ்சின் கொண்ட வாகனங்கள் இருந்தாலும், அதிக எண்ணிக்கையில் உள்ள மற்ற எஞ்சின்கள் கொண்ட வாகனங்களால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு தான் ஏற்படுகிறது.

இதை தடுக்கவே பதினைந்து ஆண்டுகள் பழமையான வாகனங்களுக்கு தடை செய்ய சியாம் சங்கம் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும் இவற்றுடன் மத்திய அரசு மின்சாரத்தை வாகனங்களுக்கான ஆற்றலாக மாற்ற பரிசீலித்து வருவது தொடர்பான நடவடிக்கைகளை குறித்தும் விளக்கப்பட்டது.

தொடர்ந்து பேசிய சியாமின் தலைவர் வினோத் கே. தாசரி, பழைய வாகனங்களின் எண்ணிக்கை மாசு உமிழ்வையும் அதிகளவில் ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளார்.

இதை கருதி சுற்றுச்சூழலில் பாதுகாக்கும் விதமாக மத்திய அரசு 15 ஆண்டுகால வாகனங்களை தடை செய்ய தனி சட்டம் இயற்ற வேண்டும் என வினோத் கே. தாசரி, கேட்டுக்கொண்டுள்ளார்.

2020ம் ஆண்டு முதல் பிஎஸ்6 மாசு கட்டுபாட்டு விதிகளுக்கு ஏற்ற எஞ்சின்களை வாகனங்களில் பொருத்த மத்திய அரசு தீவிர முயற்சியை மேற்கொண்டு வருகிறது.

அதற்கு தற்போதே வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தயாராகி வருகின்றன. மேலும் தேசிய வாகன வாரியம் உற்பத்தி சார்ந்த துறைகளுக்கு,
முக்கியத்துவம் கொடுத்த மத்திய அரசு அதற்கான நடவடிக்கைகளை துரித படுத்தவேண்டும் என்பதும் சியாம் கூட்டமைப்பின் வேண்டுகோளாக உள்ளது.


Click it and Unblock the Notifications








