புல்லட் பைக்கில் அதிக சத்தத்துடன் வலம் வந்த 3 இளைஞர்கள் கைது

ராயல் என்பீட்டு புல்லட் பைக்கில் அதிக சத்தம் வரும் சைலன்சர்களை பொருத்தி பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பைக் ஓட்டிய 3 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

By Balasubramanian

ராயல் என்பீட்டு புல்லட் பைக்கில் அதிக சத்தம் வரும் சைலன்சர்களை பொருத்தி பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பைக் ஓட்டிய 3 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

புல்லட் பைக்கில் அதிக சத்தத்துடன் வலம் வந்த 3 இளைஞர்கள் கைது

ஹரியானா மாநிலம் குர்கானை அடுத்த சோஹ்னா பகுதியை சேர்ந்தவர்கள் கேம்ராஜ், கஜேந்தர், அருண். இவர்கள் மூவரும் நண்பர்கள். அவர்கள் அடிக்கடி தங்கள் பைக்கில் குர்கான் பகுதியில் சுற்றி வருவது வழக்கம்.

புல்லட் பைக்கில் அதிக சத்தத்துடன் வலம் வந்த 3 இளைஞர்கள் கைது

இவர்கள் தாங்கள் வைத்திருந்த ராயல் என்பீல்டு பைக்கில் உள்ள சைலன்சரை மாற்றி, அதிக சத்தம் வரும் சைலன்சரை பொருத்தி அதிக சத்தத்துடன் வலம் வந்துள்ளனர்.

புல்லட் பைக்கில் அதிக சத்தத்துடன் வலம் வந்த 3 இளைஞர்கள் கைது

இவர்கள் அவ்வாறு பைக்கில் அதிக சத்தத்துடன் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி கொண்டு சோஹனா ரோட்டில் வந்து கொண்டிருந்த போது, அப்பகுதியில் வாகன பரிசோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை பிடித்தனர்.

புல்லட் பைக்கில் அதிக சத்தத்துடன் வலம் வந்த 3 இளைஞர்கள் கைது

அவர்களின் வாகனத்தை சோதனையிடும் போது அவர்கள் பைக்கின் கம்பெனி சைலன்சரை பொருத்தாமல், வேறு ஒரு சைலன்சரை பொருத்தியிருந்தது. அதில் பில்டர் இல்லாமல் இருந்தும் தெரியவந்தது.

புல்லட் பைக்கில் அதிக சத்தத்துடன் வலம் வந்த 3 இளைஞர்கள் கைது

தொடர்ந்து நடந்த சோதனையில் அந்த பைக் மிக அதிக அளவு சத்தத்தை ஏற்படுத்துவதும். இவர்கள் வந்த பாதை முழுவதும் பொதுமககளை பயமுறுத்தும் வண்ணம் அதிக சத்த்த்துடன் பைக் ஓட்டி வந்ததும் தெரியவந்தது.

புல்லட் பைக்கில் அதிக சத்தத்துடன் வலம் வந்த 3 இளைஞர்கள் கைது

இதையடுத்து போலீசார் அவர்கள் மூன்று பேரையும் கைது செய்தனர். அவர்கள வந்த பைக்கையும் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவர்கள் கோர்ட்டில் அஜர் படுத்தப்பட்டு பின்னர் ஜாமினில் விடுக்கப்பட்டனர். கோர்ட் உத்தரவிற்கு பின்பே பைக்கும் திரும்ப ஒப்படைக்கப்பட்டது.

புல்லட் பைக்கில் அதிக சத்தத்துடன் வலம் வந்த 3 இளைஞர்கள் கைது

பைக்கில் சைலன்சர் மாற்றியதற்காக கைது செய்யப்படுவது இதுதான் முன் முறை, இது போன்ற சம்பவம் அதிக அளவில் நடந்துவருவதால் போலீசார் இந்த நடவடிக்கையை எடுத்தனர்.

புல்லட் பைக்கில் அதிக சத்தத்துடன் வலம் வந்த 3 இளைஞர்கள் கைது

இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில் :"ஹரியானாவில் அதிக சத்தத்துடன் பைக்கு ஓட்டும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு பெரும் இடையூறு ஏற்படுகிறது. இவர்கள் அதிக சத்தத்துடன் செல்வதால் பொதுமக்கள் மத்தியில் பயம் ஏற்படுகிறது.

புல்லட் பைக்கில் அதிக சத்தத்துடன் வலம் வந்த 3 இளைஞர்கள் கைது

சமீபத்தில் சில மெக்கானிக்களுடன் ஆலோசித்து சைலன்சர்கள் குறித்து அறிந்து கொண்டோம். அதை பொருத்தே அனுமதிக்கப்படாத சைலன்சர்களை பயன்பபடுத்தினால் அந்த வாகனத்தை பறிமுதல் செய்து வருகிறோம். பைக்கில் அதிக சத்தம் எழுப்பும் சைலன்சர்களை மாற்றுவது தவறு. இதை இளைஞர்கள் உணர்ந்து செயல்படவேண்டும். " என கூறினார்.

புல்லட் பைக்கில் அதிக சத்தத்துடன் வலம் வந்த 3 இளைஞர்கள் கைது

இந்த பிரச்னை இந்தியா முழவதும் இருப்பதால் இப்பிரச்சனைக்கு தகுந்த சட்ட திருத்தம் கொண்டு வரவேண்டும் எனவும் இதற்கான தண்டனைகள் அதிகரித்தால் மட்டுமே இவ்வாறான தவறுகள் குறையும் எனவும் பொதுமக்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்:

Article Published On: Monday, April 23, 2018, 15:32 [IST]
English summary
Gurugram: Bullet riders arrested over 'patakha' sounds. Read in Tamil
மேலும்... #ஆஃப் பீட்
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+