உலகிலேயே மின்சார கார் பகிர்வு திட்டத்தை இரண்டாவதாக செயல்படுத்தும் நாடு இதுதான்..!!
உலகிலேயே மின்சார கார் பகிர்வு திட்டத்தை இரண்டாவதாக செயல்படுத்தும் நாடு இதுதான்..!!
மின்சார வாகன திட்டத்தை செயல்படுத்தி அதை வெற்றிக்கரமாக பின்பற்றி வரும் நாடாக இன்றுவரை நார்வே இருந்து வருகிறது.

மக்களிடமும் அதுக்குறித்த விழிப்புணர்வை ஏற்று, மின்சார கார் பயன்பாட்டினை ஊக்குவிக்க பல்வேறு செயல்பாடுகளை அமல்படுத்தி நார்வே அரசு அதில் வெற்றியும் பெற்றுள்ளது.

தற்போது நார்வேவிற்கு மின்சார வாகன பயன்பாட்டை பெரும்பாலான மக்களிடம் கொண்டு சென்ற மூன்றாவது நாடு என சிங்கப்பூரை விரைவில் குறிப்பிடலாம்.

சிங்கப்பூர் மக்களின் அரசு போக்குவரத்து தேவைக்காக மின்சார கார் பகிர்வு திட்டத்தை பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அந்நாடு அமல்படுத்தியுள்ளது.

மின்சார கார் பகிர்வு திட்டம் என்பது, மின்சார ஆற்றலால் இயங்கும் கார்களை பொது மக்கள் போக்குவரத்து தேவைக்காக பயன்படுத்தப்படும்.

அரசின் அனுமதிக்கு பிறகு ப்ளூ.எஸ்.ஜி என்ற தனியார் நிறுவனம், பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் சாலைகளில் சார்ஜிங் தேவையோடு கூடியவகையில் மின்சார கார்கள் நிறுத்தப்பட்டு இருக்கும்.

குறைந்தபட்ச நேரமாக கால் மணி நேரத்தில், எந்த இடங்களுக்கு வேண்டுமானாலும் ப்ளூ.எஸ்.ஜி மின்சார காரை பயன்படுத்தி செல்லலாம்.
வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே இந்த மின்சார கார்களை பெற அதற்கான செயலியும் உருவாக்கப்பட்டுள்ளது.

அதில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை பயன்படுத்தி, ப்ளூ.எஸ்.ஜி மின்சார காரை பொதுமக்கள் வாடகைக்கு அமர்த்தலாம்.
Recommended Video


80 ப்ளூ.எஸ்.ஜி மின்சார கார் பயன்பாட்டிற்கு வேண்டி சிங்கப்பூரில் மொத்தம் 32 சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தொடர்ந்து 2020-ம் ஆண்டிற்குள் இந்த காரின் எண்ணிக்கையை 1000-மாக உயர்த்தி அதற்குரிய 2000 சார்ஜிங் நிலையங்கள் உருவாக்கப்படும்.

சிங்கப்பூரில் பொது போக்குவரத்து வாகனங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை கனிசமாக குறைந்து வருகிறது.

எதிர்காலத்தில் இதனால் போக்குவரத்து நெருக்கடிகள் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக தற்போது மின்சார கார் பயன்பாடு அறிமுகமாகியுள்ளது.
ஃபிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸில் தான் முதன்முதலாக மின்சார கார் பகிர்வு திட்டம் பயன்பாட்டிற்கு வந்தது.

அதனை தொடர்ந்து தற்போது சிங்கப்பூர் நாட்டிலும் இந்த திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து இன்னும் இது பல ஆசிய நாடுகளுக்கு இதே திட்டம் எடுத்து செல்லப்படும் என்று ப்ளூ.எஸ்.ஜி நிறுவனம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications